Skip to main content

கரோனா அடைப்பைப் பயன்படுத்தி கோயில் நகை கொள்ளை... ஊழியர்களே கொள்ளையர்களான கொடுமை!

Published on 13/12/2020 | Edited on 13/12/2020
Temple jewelery robbery using corona block ... Employees are robbers cruel!

 

ஆலயத்தையும், அதன் சொத்துக்களையும் பாதுகாக்கிற வேலியே பயிரை மேய்ந்திருக்கிறது.

 

நெல்லை மாவட்டத்தின் பாவங்களை நாசம் செய்யும் பரிகாரதலம் பாபநாசம். தென்மேற்குத் தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகிற தாமிரபரணி தரையிறங்கி முதன் முதலாகப் பாய்கிற முகத்துவாரம் பாபநாசம். அந்நதி ஓடுகிற கரையோரம் சிவபெருமான் வீற்றிருந்து, அருட்பாலிக்கிற பாபநாச சுவாமி கோவிலிருக்கிறது. பாவங்களையும், கர்மவினைகளையும் போக்குவதற்காக ஆற்றில் குளித்துவிட்டு அருகிலுள்ள பாபநாச சிவனை வழிபடுவது பக்தர்களின் மரபு.

 

ஆனால் காலப் போக்கில் பாபநாசம், மறைந்த பிதுர்களுக்கான தர்ப்பணம் செய்துவிட்டு ஆலய வழிபாடு நடக்கிற அளவுக்கு மாறியதன் விளைவு அன்றாடம் பரிகார யாகம் நடத்தும் பொருட்டு பக்தர்கள் திரளும் நிலை என்றாகிவிட்டது. தென்மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சிவ பரிகாரத்தலம் என்பதால், ஆதிகாலத்திலேயே ஆண்ட மன்னர்கள் தங்கமும், வைரங்களையும் ஆலயத்திற்கு தானமாகவே வழங்கியிருக்கிறார்கள். ஆலயப் பெட்டகங்கத்தில் வைக்கப்பட்டிருக்கும் அவைகளின் மதிப்பு அளவிட முடியாதவை என்கிறார்கள்.

 

இந்நிலையில் கடந்த மார்ச் 25 முதல் ஆக 31 வரை கரோனாத் தொற்று காரணமாக லாக்டவுண் அறிவிக்கப்பட்டு ஆலயங்கள் உட்பட அனைத்தும் மூடப்பட்டன. ஆலயத்திற்கு பக்தர்கள் வரத்தடை என்பதால் அங்கு ஆலய உழியர்களைத் தவிர வேறு ஆட்கள் நடமாட்டமில்லை 7 மாதங்கள் பூட்டப்பட்ட நிலையில் லாக்டவுண் வாய்ப்பைப் பயன்படுத்திய பாபநாசம் கோவில் ஊழியர், பூசாரி இருவரும் சேர்ந்து ஆலய நகைகளைத் திருடி நாகர்கோவிலில் விற்றுள்ளனர்.

 

பெட்டகத்தின் சாவி கோயில் செயல் அலுவலர் ஜெகநாதனிடம் தானிருப்பது வழக்கம். பெட்டகம் உடைக்கபட்டதா, கள்ளச் சாவி போடப்பட்டதா என்ற விபரம் தெரியவில்லை அறிவிக்கப்படவுமில்லை. ஆனால் செயல் அலுவலர் ஜெகநாதன் நகைளைச் சரிபார்க்கையில் நகைகள் களவு போனது தெரியவர, அவர் வி.கே.புரம் போலீசில் புகார் அளித்திருக்கிறார். அதனடிப்படையில் போலீசார் ஆலய ஊழியர்கள் இருவரைக் கைது செய்துள்ளனர். களவு போனது 25 பவுன் நகை என்று சொல்லப்பட்டாலும் அதனையும் தாண்டிய அளவு கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. முறையான விசாரணை நடத்தினால் கொள்ளைபோன நகையின் அளவு தெரியவரும். பலர் சிக்குவார்கள். துணை ஆணையர் அளவிலான அதிகாரிகள், நகை மதிப்பீட்டாளர்கள் மூலம் சரிபார்த்து வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்று பக்தர்கள் வலியுறுத்துகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பாகிஸ்தானில் பழங்கால இந்து கோவில் இடித்து தகர்ப்பு!

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
Demolition of a Historic Hindu temple in Pakistan!

இந்தியா - பாகிஸ்தான் பிரிவதற்கு முன்னாள், ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் எல்லையொட்டி, கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் ‘கைபர் கோவில்’ என்ற பழங்கால இந்து கோவில் ஒன்று செயல்பட்டு வந்தது. அதன் பின்பு, 1947ஆம் ஆண்டில் இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்ததற்குப் பின்னால், அங்குள்ள சிறுபான்மையின மக்களான இந்து மக்கள், இந்தியாவிற்கு புலம் பெயர்ந்து வந்தனர்.

இதனால், 1947ஆம் ஆண்டு முதல், அந்த இந்து கோவிலுக்குள் பக்தர்கள் யாரும் உள்ளே சென்று வழிபடவில்லை என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக, அந்த கோவில் மூடப்பட்டுள்ளது. காலப்போக்கில் இந்த கோவிலில் உள்ள செங்கற்கள் ஒவ்வொன்றாக விழுந்து, அந்த கோவில் சிதிலமடைந்து காட்சியளித்துள்ளது.

இந்த நிலையில், அந்தப் பழமையான இந்து கோவில், கடந்த 10 நாட்களுக்கு முன்பு முழுமையாக இடிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த கோவில் அமைந்திருந்த இடத்தில் புதிதாக வர்த்தக வளாகம் ஒன்று அமைக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் குறித்து, பாகிஸ்தான் இந்து கோவில் நிர்வாகக் குழு கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து பாகிஸ்தான் இந்து கோவில் நிர்வாகக் குழு கூறியதாவது, ‘முஸ்லிம் அல்லாதவர்களுக்கு மத முக்கியத்துவம் வாய்ந்த வரலாற்று கட்டிடங்களின் பாதுகாப்பு மற்றும் மறுசீரமைப்பை உறுதி செய்வது மாவட்ட நிர்வாகம் மற்றும் சம்பந்தப்பட்ட அரசுத் துறைகளின் பொறுப்பாகும்’ என்று கூறியுள்ளது.

Next Story

தேர்த் திருவிழா; மின்சாரம் தாக்கி 15 குழந்தைகள் காயம்

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
Andhra Pradesh Kurnool car festival incident

தேர்த் திருவிழாவின் போது மின்சாரம் தாக்கி 15 குழந்தைகள் காயமடைந்துள்ளனர்.

ஆந்திர பிரதேசம் மாநிலம் கர்னூல் மாவட்டம் சின்ன தெகூர் கிராமத்தில் நடந்த உகாதி விழாவையொட்டி ஆஞ்சநேயர் கோயிலில் தேர்த் திருவிழா நடைபெற்றது. அப்போது தேர் மீது வயர் உரசி தேரில் மின்சாரம் பாய்ந்துள்ளது. இந்த விபத்தில் மின்சாரம் தாக்கியதில் 15 குழந்தைகள் காயமடைந்தனர். இதனையடுத்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக குழுந்தைகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தத் தகவலை கர்னூல் கிராமப்புற காவல் நிலைய காவலர் கிரண் குமார் உறுதிப்படுத்தியுள்ளார். தேர்த் திருவிழாவின் போது மின்சாரம் தாக்கி 15 குழந்தைகள் படுகாயமடைந்த சம்பவம் ஆந்திராவில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக கடந்த மார்ச் மாதம் 8 ஆம் தேதி (08.03.2024) ராஜஸ்தான் மாநிலம் கோட்டா அருகில் உள்ள காளிபஸ்தி என்ற இடத்தில் சிவராத்திரி விழா முன்னேற்பாடுகள் நடைபெற்று வந்தன. அங்கிருந்த சிறுவர்கள் கலசத்தில் தண்ணீர் எடுக்கச் சென்றுள்ளனர். அப்போது சிறுவர்கள் எடுத்துச் சென்ற கொடி கட்டிய இரும்புக் குழாய், உயரழுத்த மின்கம்பி மீது உரசியது. இதனால் சிறுவர்கள் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் 17 சிறுவர்கள் படுகாயமடைந்தது குறிப்பிடத்தக்கது.