Skip to main content

கோவில் உரிமை யாருக்கு? போலீசார் முன்னிலையில் அடிதடி 

Published on 27/05/2022 | Edited on 27/05/2022

 

temple issue  police front two sides clashed

 

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகில் உள்ளது சேவூர் கிராமத்தில் வரதராஜப்பெருமாள் கோயில் நீண்டகாலமாக இருந்து வருகிறது. கோவிலில் பல்வேறு தரப்பு மக்களும் சென்று வழிபட்டு வருகிறார்கள். பெருமாளுக்கு உகந்த முக்கிய திருவிழாக்கள் அவ்வப்போது நடந்து வந்தன. 

 

இந்த நிலையில் இந்தக்  கோயிலை ஒரு சமூகத்தினர் மட்டுமே உரிமை என கொண்டாடுவதாக மற்ற தரப்பினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இது சம்பந்தமாக கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இதே போன்ற பிரச்சினை எழுந்த நிலையில் அப்போதைய திட்டக்குடி டிஎஸ்பி தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் வரும் காலங்களில் அனைவரும் ஒன்று கூடி ஒற்றுமையுடன் கோயில் விழாவை நடத்துவது என பேசி முடிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கோவில் கும்பாபிஷேகம் நடத்துவது குறித்து இருதரப்பினர் இடையே அவ்வப்போது பிரச்சனை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. 

 

இந்த நிலையில் கோயில் புனரமைப்பு செய்து வரும் 3ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதற்காக நேற்று(2022) காலை ஒரு தரப்பினர் மட்டும் கோயிலில் கம்பம் நடும் நிகழ்ச்சியில் ஈடுபட்டுள்ளனர். இதைக் கண்டு ஆத்திரமடைந்த மற்ற தரப்பினர் கோவிலுக்கு சென்று அவர்களிடம் வாக்குவாதம் செய்தனர். இந்த தகவல் அறிந்த வேப்பூர் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரா தலைமையிலான போலீசார் சம்பந்தப்பட்ட வரதராஜ பெருமாள் கோவிலுக்கு சென்று இரு தரப்பினரையும் அழைத்து சமாதானம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டார். அப்போது இரு தரப்பினர் இடையே வாக்குவாதம் முற்றி போலீசார் முன்னிலையில் உருட்டுக் கட்டையால் ஒருவரை ஒருவர் தாக்கி கொள்ள முயன்றனர். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் இடையில் புகுந்த அவர்களை தடுத்து நிறுத்தி அமரவைத்து சமாதானம் செய்தனர். 

 

இதனைத் தொடர்ந்து இரு தரப்பினரும் வரும் 28ஆம் தேதி விருத்தாசலம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியர் தலைமையில் நடைபெறும் சமாதான கூட்டத்தில் கலந்து கொண்டு அதன் பிறகு கும்பாபிஷேகம் நடத்துவது குறித்து முடிவு செய்யப்படும் என்று பேசி முடிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு அனைவரும் கோவிலில் இருந்து கலைந்து சென்றனர். போலீசார் முன்னிலையில் உருட்டுக்கட்டை எடுத்துக்கொண்டு அடிக்க சென்ற சம்பவம் வேப்பூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'கடைசி நேரத்தில் இடமாற்றம் செய்ய உத்தரவிட முடியாது'- நீதிமன்றம் பதில்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
'Can't order transfer at the last moment'- court reply

தமிழக கூடுதல் டிஜிபி அருண் ஒரு கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதாகவும் எனவே அவரை  இடமாற்றம் செய்ய வேண்டும் எனக்கோரி வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஐபிஎஸ் அதிகாரி அருணை இடமாற்றம் செய்ய தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட முடியாது. அதிகாரிகள் நடவடிக்கைகளைத் தேர்தல் ஆணையம் கண்காணித்து தவறு செய்தால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.  

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் எஸ்.கே.சாமி என்பவர், உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார். தேர்தல் ஆணையம் சார்பில் காவல்துறை கூடுதல் டிஜிபி ஆக இருக்கக்கூடிய காவல்துறை அதிகாரி அருண் ஒரு கட்சிக்காக செயல்படுகிறார். அவரை இடமாற்றம் செய்ய வேண்டும் என மனுதாரர் தரப்பில் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், 'தேர்தல் ஆணையத்தின் கண்காணிப்பில் அந்த அதிகாரி இருப்பதாகவும் ஆகவே எந்த அச்சமும் மனுதாரர் கொள்ள வேண்டாம். அதே நேரத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரி யாராக இருந்தாலும் தேர்தல் நடவடிக்கையை பொறுத்தவரை சரியான முறையில் இயங்கவில்லை என்றால் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தேர்தலை நியாயமாக நேர்மையாக நடத்த வேண்டியது தேர்தல் ஆணையத்தின் கடமை. கடைசி நேரத்தில் காவல்துறை அதிகாரியை இடமாற்றம் செய்ய உத்தரவிட முடியாது'  எனக் கூறி இந்த வழக்கை முடிவுக்கு கொண்டு வந்தனர். 

Next Story

ஐ.ஜே.கே கட்சி நிர்வாகி வீட்டின் கழிவறையில் ரூ.1லட்சம் பறிமுதல்!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
IJK party executive house toilet Rs 1 lakh seized

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே திருமங்கலம் ஊராட்சியில் உள்ள இந்திய ஜனநாயக கட்சி நிர்வாகி வீட்டின் பின்புறம் உள்ள கழிவறையில் ரூபாய் ஒரு லட்சம் பணம் மற்றும் துண்டறிக்கைகளை  தேர்தல் பறக்கும் படையினர் நேற்று (17.4.2024) இரவு பறிமுதல் செய்தனர்.

பாரதிய ஜனதா கட்சியின் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சி வேட்பாளராக இந்திய ஜனநாயக கட்சி நிறுவனர் பாரிவேந்தர் பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதியில் தாமரை சின்னத்தில் போட்டியிடுகின்றார்.இந்நிலையில் பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி லால்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருமங்கலம் மாதா கோயில் தெருவைச் சேர்ந்த சூசையப்பர் மகன் வினோத் சந்திரன்  ஐஜேகே கட்சியின் கிளைச் செயலாளராக உள்ளார். இவர் அந்தப் பகுதி வாக்காளர்களுக்கு ஓட்டுக்கு பணம் கொடுப்பதாக லால்குடி வருவாய் வட்டாட்சியர் முருகனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து லால்குடி வட்டாட்சியர் உத்தரவின் பெயரில் தேர்தல் பறக்கும் படை அலுவலர் செழியன் தலைமையிலான காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை நடத்தினர். அதில், வினோத் சந்திரன் வீட்டின் பின்புறம் உள்ள கழிவறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு லட்சம் ரூபாய் பணம், பணம் விநியோகிக்கக்கூடிய பெயர் பட்டியல் மற்றும் டாக்டர் பாரிவேந்தரின் பாராளுமன்றத் தொகுதி பணிகள் என்ற தலைப்பில் அச்சிடப்பட்ட 500 புத்தகங்கள் 100 துண்டு பிரசுரங்களை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இதனைத் தொடர்ந்தும் வினோத் சந்திரனிடம் நடத்திய விசாரணையில் பறிமுதல் செய்யப்பட்ட பணம் தன்னுடையது இல்லை என கூறியதை அடுத்து பறிமுதல் செய்த பணத்தினை பறக்கும் படை அலுவலர் செழியன் லால்குடி வருவாய் வட்டாட்சியர் முருகனிடம் ஒப்படைத்தார். அவர் பணத்தை லால்குடி கருவூலத்தில் வட்டாட்சியரிடம் ஒப்படைத்தார்.