Skip to main content

மக்களை மட்டுமா? கோவில் திருவிழாக்களையும் முடக்கிய கரோனா

Published on 26/03/2020 | Edited on 26/03/2020

 

கரோனாவின் படையெடுப்பால் மக்கள் மட்டுமல்ல அரசாங்கமே ஆடிப்போய் உள்ளது. அதனைக் கட்டுப்படுத்த இந்தியாவில் ஒவ்வொரு மாநில அரசும் இரவு பகலாகப் போராடி வருகிறது. நாடு இதுவரையும் கண்டிராத தொடா் ஊரடங்கில் உ்ள்ளது. இதனால் மக்கள் வீட்டுக்குள்ளே முடங்கியுள்ளனா். மக்களைக் காப்பாற்றுவதற்காக அரசாங்கமும் மருத்துவத் துறையும் தினம் தினம் திட்டத்தை வகுக்கிறார்கள். 
 

இதற்கு மேல் பெரும்பாலானோர் நம்பிக்கை வைத்துள்ள கடவுள்களைக் கூட கரோனா அச்சத்தால் பார்க்க முடியாத நிலையில் உள்ளனா். இதனால் மக்களோடு கடவுள்களையும் முடங்கியிருக்கிறது கரோனா. இந்து கடவுள்களில் பெரும்பாலான கோவில்களில் ஆண்டுதோறும் மாசி, பங்குனி, சித்திரை மாதங்களில் தான் ஊா் மக்கள் சோ்ந்து திருவிழா எடு்ப்பது வழக்கம்.  தற்போது கரோனா அச்சத்தால் பிரசித்திப் பெற்ற பல கோவில்களில் திருவிழா நிறுத்தப்பட்டுள்ளது. 


 

Kumari District





இதில் குமரி மாவட்டத்தில் பல லட்சங்களை செலவு செய்து இந்த மாதம் நடக்க இருந்த கொல்லங்கோடு ஸ்ரீ பத்திரகாளியம்மன் கோவில் திருவிழா நிறுத்தப்பட்டுள்ளது. இங்கு முக்கிய நிகழ்ச்சியான குழந்தைகளைக் கையில் ஏந்தி தூக்க நோ்சை வழிப்பாடு பிரதானமானதாகும். இதைப் பார்ப்பதற்கு கேரளா மற்றும் குமரி மாவட்டத்தில் இருந்து லட்ச கணக்கான மக்கள் கூடுவார்கள். இதனால் இந்த கோவிலின் திருவிழாவை நிறுத்த மாவட்ட நிர்வாகம் கேட்டு கொண்டதால் கோவில் நிர்வாகம் திருவிழாவை நிறுத்தியுள்ளது.
 

இதேபோல் இட்டக வேலி முடிப்புரை நீலகேசி அம்மன் கோவில் திருவிழாவும் பெரும் விமா்சையாக நடத்தப்படும். இங்கும் ஆயிரக்கணக்கான மக்கள் கூடுவார்கள். இங்கேயும் திருவிழாவை கோவில் நிறுத்தியுள்ளது. அதே போல் கிறிஸ்தவ திருவிழாவான ஆறுகாணி குருசுமலை திருபயணம் கேரளா மற்றும் குமரி மாவட்டத்தால் இணைந்து நடத்தபடுவது. மலை உச்சியில் இருக்கும் இந்த ஆலயத்தில் லட்ச கணக்கான பக்தா்கள் கலந்து கொள்வார்கள். இந்த திருவிழாவும் நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் அடுத்த மாதம் நடை பெறும் ஆறுகாணி காளிமலை கோவில் திருவிழாவும் நடக்குமா? என்ற கேள்விக் குறியில் பக்தா்கள் இருக்கிறார்கள்.
 

இதற்கிடையில் ஓவ்வொரு கிராமத்திலும் உள்ள ஊா் கோவில் திருவிழாக்களிலும் ஏராளமானோர் கூடுவார்கள் என்பதால் குமரி மாவட்டத்தில் நூற்றுக்கு மேற்பட்ட ஊா் கோவில் திருவிழாக்களையும் ஊா்மக்கள் நிறுத்தியுள்ளனா். அந்தளவுக்கு கரோனாவின் தக்கம் எல்லாரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

13வது நோன்பு நாளில் சுடச்சுட ஆவி பறக்க தயாரான பிரியாணி

Published on 24/03/2024 | Edited on 24/03/2024
Ready-to-eat Biryani to bake on the 13th day of Lent

ஏப்ரல் மாதம் ரம்ஜான் பண்டிகை வருவதையொட்டி உலகம் முழுவதும் இஸ்லாமிய மக்கள் நோன்பு இருந்து வருகின்றனர். சூரியன் உதயம் முதல் அந்தி சாயும் வரை உணவு உண்ணாமல், நீர் அருந்தாமல் நோன்பு இருப்பர். மாலை 6 மணிக்கு மசூதிக்கு சென்று நமாஸ் செய்துவிட்டு உணவு உண்பார்கள். காலை 5 மணிக்கு முன்பாக உணவு உண்பதை நிறுத்திவிடுவர். நோன்பு காலத்தில் இயலாத மக்களுக்கு மதம் பார்க்காமல் உதவுவார்கள்.

வேலூர் கோட்டை எதிரே 400 கிலோ சிக்கன் கறி கொண்டு சுடச் சுட ஆவி பறக்க நோன்பு பிரியாணி தயார் செய்யப்பட்டது. வேலூர் மக்கான் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு 13 வது நோன்பு நாளில் பிரியாணி சமைத்து சுமார் 2000 வீட்டுக்கு பகிர்ந்து அளித்தனர்.

சனிக்கிழமை மாலை 5 மணியிலிருந்து பிரியாணி தயார் செய்யும் பணி தொடங்கிய நிலையில் நள்ளிரவு ஒரு மணி வரை பிரியாணி சமைக்கப்பட்டது. இந்தப் பணியில் சுமார் 130 பேர் ஈடுபட்ட நிலையில், மக்கான் பகுதியில் உள்ள வீடுகளுக்கு சுமார் அதிகாலை 2.30 மணிக்கு முன்பு பகிர்ந்தளிக்கப்பட்டது. ரம்ஜானை முன்னிட்டு 13 வது நோன்பு நாளில் அதிகாலையில் மக்கான் பகுதியில் உள்ள அனைத்து இஸ்லாமியர்களும் பிரியாணியை உண்டு மகிழ்ந்தனர்.

Next Story

திரௌபதி அம்மன் கோவில் இன்று திறப்பு; போலீசார் குவிப்பு

Published on 22/03/2024 | Edited on 22/03/2024
Draupadi Amman temple opens today; Police build up

விழுப்புரம் திரௌபதி அம்மன் கோவில் இன்று திறக்கப்படுகிறது.

விழுப்புரம் அருகே உள்ள மேல்பாதி கிராமத்தில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்த திரௌபதி அம்மன் தீமிதி திருவிழாவில் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் கோவிலுக்கு சீல் வைத்தது. கோவிலில் இதுவரை யாரும் அனுமதிக்கப்படவில்லை. எட்டு கட்டமாக சமாதான பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையில் இரு தரப்பும் நீதிமன்றத்தை நாடி இருந்தது.

இந்நிலையில் 22 ஆம் தேதியான இன்று கோவிலைத் திறந்து பூஜை நடத்துவதற்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தி இருந்தது. பொதுமக்கள் யாரும் அனுமதிக்கப்படாத நிலையில், ஒரு கால பூஜை மற்றும் பூசாரியால் செய்யப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இன்று அதிகாலை முதலே கோவிலை சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற்ற நிலையில், தற்போது கட்டிங் மெஷின் மூலம் கோவில் பூட்டு உடைக்கப்பட்டு கோவிலைத் திறக்கும் பணி நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் தடுத்து நிறுத்தப்பட்டிருக்கும் நிலையில், பாதுகாப்புப் பணிக்காக அதிகப்படியான போலீசார் அங்கு குவிக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.