Skip to main content

மகாபிரதோஷ வழிபாட்டில் பெண்களிடம் நகைகள் கொள்ளை!

Published on 10/03/2020 | Edited on 10/03/2020

படைக்கும் பரமேஸ்வரராகிய ஆதிசிவன் சங்கரநாராயணராகவும், உலகமாதா உமையவள் பார்வதிதேவியாரும் இரு பெரும் மூலஸ்தானங்களில் அமர்ந்து அருள் பாலிக்கும் தென்காசி மாவட்டத்தின் சங்கரன்கோவில் நகரிலிருக்கும் சங்கரநாராயணர் ஆலயம் தென் மாவட்டத்தில் பிரபலம்.
 

மேலும் சக்திவாய்ந்த பிரபலமான சிவஷேத்திரம் என்பதால் இந்த ஆலயத்தில் நடக்கிற மகாபிரதோஷ வழிபாடுகளிலும், சிவபெருமானுக்கும் நந்திக்கும் தனிச் சிறப்பான பூஜைகள் நடக்கும். சிவ வழிபாடுகளில் முக்கியமான இந்தப் பிரதோஷ பூஜை 15 தினங்களுக்கு ஒரு முறை குறிப்பிட்ட நட்சத்திர காலத்தில் நடப்பதால், அந்தப் பூஜைக்கு ஆண்கள் பெண்கள் என்று அக்கம் பக்கமுள்ள கிராமங்களிலிருந்தெல்லாம் ஆயிரக்கணக்கில் பக்தர்களின் கூட்டம் திரளும் குறிப்பாக அதில் பெண்களே அதிக அளவில் கலந்து கொள்வர். காரணம் பிதோஷ வழிபாடு சிவபெருமானுக்காக நடத்தப்படுவது. அதிலும் அந்த ஆதிப் பரம்பொருளான ஆதிசிவனே இங்கு குடிகொண்டிருப்பது கூடுதல் விசேஷம்.

temple festival day peoples gold chains police investigation

வழக்கமாக இந்தப் பிரதோஷம் நேற்று முன்தினமான சனிக்கிழமையன்று வந்ததால் சிறப்பான சனி மகாபிரதோஷ பூஜை. பக்தர்கள் ஆயிரக்கணக்கானோர் திரண்டு விட்டனர். பக்தர்கள் சிவ, நந்தி பூஜையில் கவனமாக இருக்க, வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு உள்ளே ஊடுருவியிருந்த மர்ம நபர்கள் பெண்களின் நகையைக் குறிவைத்து, முடிச்சு வெட்டியுள்ளர் நகைகளை அபேஸ் செய்துள்ளனர்.


பக்திப் பரவசத்திலிருந்த அந்தப் பெண்கள் வெளியே வந்து பார்த்த போது தான் தங்களின் நகை அபேஸ் செய்யப்பட்டிருந்தது கண்டு பதறியிருக்கிறார்கள். இரண்டிற்கும் மேற்பட்ட சம்பவம் என்பதால் பரபரப்பு கூடி விட்டது.
 

சங்கரன்கோவில் பக்கமுள்ள பனவடலிசத்திரத்தின் வண்ணான் பொட்டலைச் சேர்ந்த முத்துப்பாண்டியனின் மனைவி மகாலட்சுமி (48) மற்றும் சங்கரன்கோவிலின் குமரன் தெரு சுடலை மனைவி ரதி (27) இருவரிடமிருந்த தலா 5 பவுன் தங்கச் சங்கிலிகள் என 10 பவுன் நகைகள் அபேஸ் செய்யப்பட்டிருக்கின்றன. இது குறித்து சங்கரன்கோவில் டவுண் போலீசார் வழக்குப் பதிவு செய்து மர்ம நபர்களைத் தேடத் தொடங்கியுள்ளனர்.

temple festival day peoples gold chains police investigation

அன்றைக்கு முக்கிய நிகழ்வு பக்தர்களின் கூட்டம், குறிப்பாகப் பெண்களின் கூட்டம் அதிகம் இருந்தது. ஆனால் அதற்கேற்ப போலீஸ் பாதுகாப்பு மிகக் குறைவு. கொள்ளையடித்த நகைகளின் மதிப்பு இரண்டரை லட்சமென்றாலும், அன்றைய தினம் இரண்டிற்கும் மேற்பட்ட பெண்களிடமிருந்து மர்ம நபர்கள் கொள்ளையடித்துள்ளனர். ஆனால் காவல்துறையில் 2 பேர் மட்டுமே புகார் கொடுத்துள்ளனர். மற்றவர்கள் புகார் கொடுக்காமல், போனது போனது தானே என்றிருந்து விட்டனர். என்கிறார்கள்.


இது குறித்து நகரின் ஆர்.எஸ்.எஸ்.சின் நகர் சேவா பிரமுக் அமைப்பைச் சேர்ந்த செந்தூர்பாண்டியன் குறிப்பிடுவது, பிரதோஷத்தில் பக்தர்கள் ஆயிரக்கணக்கில் வருவது இயல்பு. ஆனால் ஆலய நிர்வாகம் ஏற்பாடுகளை முறையாகச் செய்யவில்லை. ஆலயத்திலுள்ள சி.சி.டி.வி. கேமராக்கள் பெயரளவிலேயே உள்ளன. ஆனால் அவைகள் வேலை செய்யவில்லை என்பது பெரியகுறை. முறையான பாதுகாப்பிருந்தால் இது போன்ற சம்பவத்திற்கு வாய்ப்பில்லை என்கிறார்.


ஆனால் குற்ற நிகழ்வுகளைக் கண்காணிக்கிற போலீசாரின் கவனமோ, வாகன ஒட்டிகளைப் பிடிப்பது. வாகனத்தை வழிமறித்து சோதனையிடுவதிலேயே குறியாக இருக்கிறது என்றும் சொல்கிறார்கள்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஈஷா யோகா மையம் தொடர்பான விவகாரம்; வெளியான பகீர் தகவல்!

Published on 21/03/2024 | Edited on 21/03/2024
Matter relating to Isha Yoga Centre; Released information

தென்காசி மாவட்டம் குலசேகரப்பட்டியைச் சேர்ந்த விவசாயியான திருமலை என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், ‘தன் சகோதரர் கணேசன் என்ற சுவாமி பவதத்தா தன்னார்வலராக கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் கடந்த 2007 ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வந்தார். இத்தகைய சூழலில் கடந்த ஆண்டு மார்ச் 2 ஆம் தேதி ஈஷா யோகா மையத்தில் இருந்து தொடர்பு கொண்டவர்கள் கணேசன் சொந்த ஊருக்கு வந்துள்ளார்களா என்று கேட்டதுடன் கடந்த 3 நாட்களாக கணேசன் ஈஷா யோகா மையத்திற்கு வரவில்லை என கூறினர்.

இது தொடர்பாக கடந்த ஆண்டு மார்ச் 5 ஆம் தேதி  ஈஷா யோகா மைய பொறுப்பாளர் தினேஷ் ராஜா கோவை மாவட்டம் பாரந்துறை காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். இந்த புகார் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்த பாரந்துறை காவல் நிலைய போலீசார் உரிய விசாரணை மேற்கொள்ளாமல் இருக்கின்றனர். எனவே இது குறித்து உரிய விசாரணை நடத்தி காணாமல் போன தனது சகோதரர் கணேசனை மீட்டுத் தர நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும்’ எனத் தெரிவித்திருந்தார்.

Matter relating to Isha Yoga Centre; Released information

இந்நிலையில் இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதிகள், எம்.எஸ். ரமேஷ், சுந்தர் மோகன் அமர்வு முன்பு இன்று (21.03.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது காவல் துறை சார்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ராஜதிலக், “கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் ஈஷா மையத்தில் பணியாற்றியவர்களில் வெவ்வேறு தேதிகளில் தற்போது வரை 6 பேர் மாயமாகியுள்ளனர்” எனத் தெரிவித்தார். இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், “காணாமல் போனவர்கள் பற்றிய வழக்கை துரிதப்படுத்தி விசாரிக்க காவல்துறைக்கு உத்தரவிடப்படுகிறது. மேலும் இந்த வழக்கு ஏப்ரல் 8 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது” எனத் தெரிவித்தனர். 

Next Story

சாதுரியமாகச் செயல்பட்ட முதிய தம்பதியினர்; வீட்டிற்குச் சென்று பாராட்டிய ரயில்வே அதிகாரி!

Published on 01/03/2024 | Edited on 02/03/2024
An elderly couple who acted astutely Railway officer who went home and appreciated

தென்காசி மாவட்டம் செங்கோட்டை வட்டம் புளியரை கிராமம், 'எஸ்' - வளைவு என்ற தமிழக - கேரள எல்லைப் பகுதியில் கடந்த 25 ஆம் தேதி (25.02.2024) நள்ளிரவு 1.00 மணி அளவில் திருமங்கலம் - கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் லாரி ஒன்று சென்று கொண்டிருந்துள்ளது. அப்போது இந்த லாரி நிலை தடுமாறி 40 அடி உயரத்திலிருந்து கவிழ்ந்து கீழே செல்லும் செங்கோட்டை - கொல்லம் ரயில் மார்க்கத்திலுள்ள தண்டவாளத்தில் விழுந்து விபத்து ஏற்பட்டது. அப்போது அப்பகுதியில் வசித்து வந்த சண்முகையா - வடக்குத்தியாள் என்ற தம்பதியினர் செங்கோட்டையிலிருந்து புனலூர் நோக்கி வந்துகொண்டிருந்த பகவதியம்மன் கோவில் திருவிழா சிறப்புப் பயணிகள் ரயில் வரும் சத்தத்தைக் கேட்டு நிலைமையின் தீவிரத்தை உணர்ந்துள்ளனர். அதன் பின்னர் தண்டவாளத்தில் சிறிது தூரம் ஓடிச்சென்று கையில் வைத்திருந்த டார்ச் லைட் ஒளியின் மூலம் ரயில் ஓட்டுநரிடம் சைகை காண்பித்து ரயிலை நிறுத்தி ஏற்படவிருந்த பெரும் விபத்தை தடுத்துள்ளனர்.

மேலும் இது குறித்து உடனடியாகத் தகவலறிந்த காவல்துறையினர், தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து பொதுமக்களுடன் இணைந்து தண்டவாளத்தில் விழுந்து கிடந்த லாரியினை அப்புறப்படுத்தியுள்ளனர். அதே சமயம் சென்னையிலிருந்து கொல்லம் நோக்கிச் சென்ற விரைவு ரயிலும் செங்கோட்டை ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது. தங்களது முதிர்ந்த வயதையும், இருள் சூழ்ந்திருந்த நள்ளிரவு நேரத்தையும் பொருட்படுத்தாமல், பெரும் விபத்து நிகழ்வதைத் தடுத்து நிறுத்தும் ஒரே நோக்கத்துடன் தண்டவாளத்தில் ஓடிச்சென்று ரயிலை நிறுத்திய சண்முகையா - வடக்குத்தியாள் தம்பதியினரின் வீரதீரச் செயலைப் பாராட்டிய தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ. 5 லட்சம் வெகுமதி வழங்க உத்தரவிட்டிருந்தார்.

இதனையடுத்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த 27 ஆம் தேதி (27.2.2024) தலைமைச் செயலகத்தில் சண்முகையா - வடக்குத்தியாள் அத்தம்பதியரின் வீரதீரச் செயலை பாராட்டி, அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து 5 இலட்சம் ரூபாய்க்கான காசோலையை வெகுமதியாக வழங்கி பாராட்டினார். அப்போது தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா உடன் இருந்தார். இது குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் சமூக வலைத்தளப் பதிவில், “தென்காசி மாவட்டம் புளியரை அருகே தண்டவாளத்தில் லாரி விழுந்து விபத்து ஏற்பட்டதை அறிந்து, பொறுப்புடன் செயல்பட்டு அந்த வழியாக வந்த இரயிலை ‘டார்ச்’ லைட் சைகையால் நிறுத்தி, நிகழவிருந்த விபத்தைத் தடுத்த சண்முகையா – வடக்குத்தியாள் இணையரின் செயலுக்கு எனது பாராட்டுகள்!. எளியோரின் பேருள்ளத்துக்கு இணையேதுமில்லை!” எனக் குறிப்பிட்டிருந்தார்.

An elderly couple who acted astutely Railway officer who went home and appreciated

இந்நிலையில், மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் சரத் ஸ்ரீவத்சவா இந்த ரயில் விபத்தை தவிர்த்த செங்கோட்டையைச் சேர்ந்த சண்முகையா – வடக்குத்தியாள் தம்பதியரை புளியரையிலுள்ள அவரது வீட்டிற்கு நேரில் சென்று சந்தித்து வாழ்த்து தெரிவித்து பாராட்டினார். அதனைத் தொடர்ந்து பகவதிபுரம் ரயில் நிலையத்தில் நடந்த பாராட்டு விழாவில் இத்தம்பதியருக்கு பாராட்டு சான்றிதழும், ரொக்கப் பரிசும் வழங்கி சரத் ஸ்ரீவத்சவா கவுரவித்தார். இந்நிகழ்வில் மதுரை கோட்ட ரயில்வே முதுநிலை பொறியாளர் எம். பிரவீனா, கோட்ட ஊழியர்கள் நல அதிகாரி டி. சங்கரன் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.