Skip to main content

கொலையில் முடிந்த கோவில் தகராறு... சடலத்துடன் சாலை மறியல்..!

Published on 12/05/2019 | Edited on 12/05/2019

ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளியை சேர்ந்தவர் ராமசந்திரன்(55). இவர் மீனவர் பிடி தொழில் செய்த்தோடு, கோவில் நிர்வாகியாகவும் இருந்தார்.  இந்நிலையில், நேற்று  உச்சிபுளி பேருந்து நிலையத்தில் இருந்து ஆட்டோவில் ஏறி சென்ற போது முன் விரோதம் காரணமாக கார்த்தி மற்றும் முனீஸ்வரன் ஆகிய இருவரும்  கம்பியால் தாக்கியதில் படுகாயம் அடைந்த ராமச்சந்திரன் சம்பவ இடத்திலே உயிரிழந்தார்.

 

PROTEST

 

கோவிலை நிர்வாகம் செய்வதில் ஏற்பட்ட மோதலில் கொலை நிகழ்ந்தாக சொல்லப்படுகிறது.  இச்சம்பவம் குறித்து உச்சிபுளி போலிஸார் வழக்கு பதிவு செய்து  கார்த்தி, முனீஸ்வரன் ஆகிய இருவரையும் கைது செய்தனர். இராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வு செய்த பின் ராமச்சந்திரன் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால் 2017 முதல் தொடர்ந்து இந்த பிரச்சனை நிலவி வருகிறது. அடுத்து கொலை சம்பவம் நிகழாமல் தடுக்க கொலையாளிகளை குண்டாஸ் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும், உயிரிழந்த ராமசந்திரன்  குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க கோரி  உச்சப்புளி அருகே நாகாச்சி என்ற இடத்தில்  மதுரை-தனுஸ்கோடி தேசியநெடுஞ்சாலையில் சடலத்தை வைத்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

 

 

PROTEST

 

சம்பவ இடத்திற்கு  விரைந்து சென்ற இராமேஸ்வரம் துனை கண்காணிப்பாளர் மகேஷ் கோட்டாட்சியர் சுமன் ஆகியோர் உறவினர்களிடன் பேச்சுவார்த்தை நடத்தி, அரசின் கவனத்திற்கு கோரிக்கைகளை கொண்டு செல்வதாக உத்திரவாதம் அளித்ததையடுத்து போராட்டம் விலக்கி கொள்ளப்பட்டது.. 

 

இதனால் இப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவுகிறது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திரௌபதி அம்மன் கோவில் இன்று திறப்பு; போலீசார் குவிப்பு

Published on 22/03/2024 | Edited on 22/03/2024
Draupadi Amman temple opens today; Police build up

விழுப்புரம் திரௌபதி அம்மன் கோவில் இன்று திறக்கப்படுகிறது.

விழுப்புரம் அருகே உள்ள மேல்பாதி கிராமத்தில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்த திரௌபதி அம்மன் தீமிதி திருவிழாவில் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் கோவிலுக்கு சீல் வைத்தது. கோவிலில் இதுவரை யாரும் அனுமதிக்கப்படவில்லை. எட்டு கட்டமாக சமாதான பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையில் இரு தரப்பும் நீதிமன்றத்தை நாடி இருந்தது.

இந்நிலையில் 22 ஆம் தேதியான இன்று கோவிலைத் திறந்து பூஜை நடத்துவதற்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தி இருந்தது. பொதுமக்கள் யாரும் அனுமதிக்கப்படாத நிலையில், ஒரு கால பூஜை மற்றும் பூசாரியால் செய்யப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இன்று அதிகாலை முதலே கோவிலை சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற்ற நிலையில், தற்போது கட்டிங் மெஷின் மூலம் கோவில் பூட்டு உடைக்கப்பட்டு கோவிலைத் திறக்கும் பணி நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் தடுத்து நிறுத்தப்பட்டிருக்கும் நிலையில், பாதுகாப்புப் பணிக்காக அதிகப்படியான போலீசார் அங்கு குவிக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story

தொடங்கிய வெயிலின் தாக்கம்; அறநிலையத்துறை வெளியிட்ட குளுகுளு அறிவிப்பு

Published on 14/03/2024 | Edited on 14/03/2024
Free Water Butter in 48 Temples

வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் தமிழகத்தில் உள்ள 48 கோயில்களில் இலவச நீர் மோர் வழங்கும் திட்டம் நாளை முதல் அமலுக்கு வரும் என அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

தற்போதே கோடை காலத்திற்கான வெயிலின் தாக்கம் தொடங்கியுள்ளதால், பல இடங்களில் தன்னார்வ நிறுவனங்கள் மற்றும் அரசியல் கட்சியினர் சார்பாக தண்ணீர் பந்தல், நீர் மோர் பந்தல் ஆகியவை அமைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் வெயிலின் தாக்கத்தைத் தணிக்க தமிழக அறநிலையத்துறை சார்பில் தமிழகத்தில் உள்ள 48 முதல்நிலை கோவில்களில் நாளை முதல் நீர்மோர் வழங்கும் திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது. இதனையொட்டி நாளை சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் இலவச நீர்மோர் வழங்கும் திட்டத்தை அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைக்க இருக்கிறார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.