Skip to main content

'நீர்வழி பாதை ஆக்கிரமிப்பாலேயே கோவில் இடிப்பு... அவதூறு பரப்பினால் நடவடிக்கை...'-தாம்பரம் காவல் ஆணையர் எச்சரிக்கை!

Published on 11/01/2022 | Edited on 11/01/2022

 

'Temple demolition due to waterway occupation ... Action against those who disrupt reconciliation ...' Tambaram Police Commissioner warns!

 

தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட மணிமங்கலத்தில் நீர் வழிப்பாதையில் கட்டப்பட்டிருந்த ஆஞ்சநேயர் கோவில் இடிக்கப்பட்ட நிலையில் இதுகுறித்து சமூக வலைத்தளத்தில் தவறான கருத்துக்களை பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என  தாம்பரம் காவல் ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

 

தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட மணிமங்கலத்தில் நீர்வழிப்பாதையில் ஆஞ்சநேயர் கோவில் கட்டப்பட்டுள்ளதாக 2015 அன்று பெரு வெள்ளத்தின் போது சிறப்பு அதிகாரியான அமுதா வருவாய்த்துறை அதிகாரிகள் உதவியுடன் ஆக்கிரமிப்பில் உள்ள கோவிலை இடித்து அகற்றினார். ஆனால் மீண்டும் அதே நீர்வழிப்பாதையில் அங்கு கோவில் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதனைத்தொடர்ந்து மீண்டும் நீர்வழிப்பாதையில் கட்டப்பட்ட ஆஞ்சநேயர் கோவில் இடிக்கப்பட்டது. அதேபோல் அதே நீர்வழிப்பாதையை ஆக்கிரமித்திருந்த தேவாலயம் ஒன்றின் சுற்றுசுவரும் இடித்து அகற்றப்பட்டது. கோவிலை இடிக்கும் வீடியோ காட்சிகளை விஷமிகள் சிலர் இந்து கோயில்கள் இடிக்கப்படுவதாகச் சமூகவலைத்தளத்தில் சமூக நல்லிணக்கத்தைக் கெடுக்கும் வகையில் பதிவிட்டு வரும் நிலையில் இவ்வாறு தவறாக பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் தாம்பரம் காவல் ஆணையர் என எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுவரை இது தொடர்பாக 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பாபநாசம் பட பாணியில் கொலை; போலீசாரே அதிர்ந்த சம்பவம்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Papanasam film style incident; The incident shocked the police

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ளது மாதாரி குளம் கிராமம். அங்கே உள்ள பூங்கா பகுதியில் வசித்து வந்தவர் ரோஷம்மா. கடந்த புதன்கிழமை அன்று ரோஷம்மா திடீரென மாயமானார். இதனால் பல இடங்களில் அவரை உறவினர்கள் தேடி வந்தனர். எங்கு தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியாததால் இறுதியாக காவல் நிலையத்தில் உறவினர்கள் புகார் அளித்தனர்.

போலீசார் ரோஷம்மா தொடர்பான நபர்களிடம் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் ரோசம்மாவின் உறவினர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது ரோசம்மாவின் சகோதரர் பென்னி என்பவரிடத்தில் போலீசார் விசாரித்த போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கொடுத்தார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் விசாரணையை தீவிரப்படுத்தினர். அப்பொழுது சுத்தியலால் ரோசம்மாவை அடித்து கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்தது தெரிய வந்தது.

புதைத்த இடத்தை பென்னி அடையாளம் காட்டிய நிலையில் ரோஷம்மாவின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது. கைப்பற்றப்பட்ட சடலமானது பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. கொலைக்கான காரணம் குறித்து பெண்ணிடம் விசாரித்த போது கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த ரோசம்மாவுக்கும் பென்னிற்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் கடந்த புதன்கிழமை ஏற்பட்ட தகராறின் போது ஆத்திரத்தில் சுத்தியலால் ரோசம்மாவை அடித்து கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்தது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. பாபநாசம் பட பாணியில் நடந்த இந்தக் கொலை போலீசாருக்கே அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

Next Story

15 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம்; கலாச்சேத்ரா முன்னாள் பேராசியருக்கு காப்பு

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Kalachetra former teacher arrested on complaint

அண்மையில் கலாச்சேத்ரா கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மாணவிகள் போராட்டம் நடத்திய நிலையில் புகார் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டு இருந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில் அதே கலாச்சேத்ரா கல்லூரியில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு ஆசிரியராக பணியாற்றிய நடன ஆசிரியர் தற்பொழுது பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு கலாச்சேத்ராவில் பணியாற்றிய பேராசிரியர் ஸ்ரீஜித் என்பவர் பணியில் இருந்த போது பாலியல் தொல்லை கொடுத்ததாக சமீபத்தில் வெளிநாட்டில் இருந்து ஒரு புகார் சென்னை காவல் துறைக்கு கொடுக்கப்பட்டிருந்தது. அந்தப் புகாரின் அடிப்படையில் சென்னை காவல்துறை விசாரணை மேற்கொண்டது. இதில் புகார் கொடுத்த பெண்ணிடம் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பாலியல் தொந்தரவு கொடுக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது அதனடிப்படையில் 15 வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவத்தை வைத்து நடன பேராசிரியர் ஸ்ரீஜித்தை போலீசார் கைது செய்துள்ளனர்.