தமிழகத்தில் ஊரடங்கானது படிப்படியாகத் தளர்த்தப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் இன்று (28.06.2021) முதல் மாநிலத்தின் பல இடங்களில் அனைத்து வழிபாட்டுத் தளங்களும் திறக்கப்பட்டது. இதனையொட்டி தி.நகர் திருப்பதி கோயிலில் பூஜைகள் நடத்தப்பட்டது. இதில் பொதுமக்கள் வருகை தந்து வழிபட்டனர். அதே போல் குறிப்பிட்ட கடைகளைத் திறப்பதற்கு தமிழக அரசு அனுமதித்துள்ள நிலையில் தி.நகரில் இன்று காலை முதல் ஜவுளிக் கடைகள் மற்றும் நகைக் கடைகள் திறக்கப்பட்டன.

Advertisment