publive-image

குடிகாரன் எனக்கூறிய கடைக்காரரை பார்த்து மது அருந்துவோர் எனக் கூற வேண்டும் என அதட்டிப் பேசும்நபர் வீடியோ பதிவு இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Advertisment

கடைகாரக்கு எதோ வாங்கப் போனவரை கடைக்காரட்குடிகாரர் என்றுகூறியதை கேட்டு மது அருந்திய நபர் சண்டையிட பக்கத்தில் இருந்த நபர் அதை வீடியோ எடுத்துள்ளார். அந்த பதிவில் அந்த போதை ஆசாமி, “ யாருயா குடிகாரன். நீ வாங்கி கொடுத்தியா எனக்கு. மது அருந்துவோர் ( மாரில் தட்டிக்கொள்கிறார்) எங்கள குடிகாரன்னு கேவலப்படுத்துறியா. மது அருந்துவோர்னு சொல்லுங்க. மது அருந்துவோர். வீட்லயும் மரியாத இல்ல. ரோட்லயும் மரியாத இல்ல. இந்த கவர்மெண்ட காப்பாத்துறது நாங்கயா” என ஆவேசமாக பேசுகிறார். இதனைத்தொடந்து இந்த பதிவு சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

Advertisment

அரசே மதுபானக் கடைகளை நடத்தி வருகிற சூழலில் குடிப்பவர்களை மது பிரியர்கள், மது அருந்துவோர் என மரியாதையாக நடத்த வேண்டும் என்று சொல்லப்படுவதுகுறிப்பிடத்தக்கது