Skip to main content

தொலைக்காட்சி சீரியல் குழந்தைகளை தவறான பாதைக்கு அழைத்து செல்கிறதா?

Published on 19/06/2018 | Edited on 19/06/2018

கடந்த திங்கள் கிழமை கடலூர் மாவட்ட காவல்துறை அதிகாரி விஜயக்குமாருக்கு 4-ம் வகுப்பு படிக்கும் தங்கள் குழந்தையை பள்ளிக்கு செல்லும் போது காரில் கடத்திவிட்டார்கள் என்ற தகவல் வந்துள்ளது. உடனே மாவட்டத்திலுள்ள அனைத்து காவல் நிலையங்களை அலாட் செய்து கார் உள்ளிட்ட வாகனங்களை காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். இந்த திடீர் சோதனையால் ஒரே பரபரப்பாக இருந்தது.

 

Is the television serial taking children to the wrong direction?



 

இந்தநிலையில் சிதம்பரம் எஸ்பி கோயில் தெருவில் வசிக்கும் ஒருவர் கடத்தப்பட்டதாக கூறப்படும் குழந்தையை சிதம்பரம் காவல்நிலையத்துக்கு அழைத்து வந்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தார். அப்போது அங்கிருந்த காவல்துறையினர் அந்த குழந்தையை அழைத்து நைசாக பேசினார்கள்.

 

 

 

என் பெயர் ஹென்சிகா(9) (பெயர் மாற்றப்பட்டுள்ளது) கடலூர் புதுநகர் தனியார் பள்ளியில் 4-வது படிக்கிறேன். எங்க வீடு கடலூர் முதுநகரில் உள்ளது. எனது அப்பா அமானுல்லா என்றார். நான் காலையில் பள்ளிக்கு செல்லும் போது 4 பேர் என்னை காரில் கடத்தினார்கள். அப்போது நான் சத்தம் போட்டேன். கார் கதவுகள் சாத்தப்பட்டு இருந்ததால் யாருக்கும் கேட்கவில்லை. பின்னர் அவர்கள் சிதம்பரம் பஸ் நிலையம் அருகே காரை நிறுத்தினார்கள். அதிலிருந்து தப்பித்து வந்துவிட்டேன் என்று கூறினார்.

 

 


குழந்தை கூறுவதில் சந்தேகம் ஏற்பட்ட காவல் துறையினர் உன்பாக்கெட்டில் என்ன இருக்கு என்று எடுக்க சொன்னபோது கடலூர்-சிதம்பரம் வந்த பேரூந்து பயணசீட்டு இருந்துள்ளது. இதுகுறித்து கேட்டபோது சிறிது தயங்கியவாறு பேசிய சிறுமி, அங்கிள் காலையில் செல்போனில் கேம் விளையாடியதற்காக ஸ்கூல் செல்லும்போது அப்பா திட்டினார். அதனால் எனக்கு ஆத்திரம் தாங்க முடியல பள்ளிக்கு ஆட்டோவில் சென்றுவிட்டேன். பள்ளிக்கு உள்ளே செல்லாமல் கடலூர் பேரூந்து நிலையத்திற்கு வந்து பேரூந்து மூலம் சிதம்பரம் மாமா வீட்டிற்கு வந்துவிட்டேன். ஆனால் மாமா கேக்கும் போது என்னை காரில் கடத்தியதாக பொய் சொன்னதால் என்னை காவல்நிலையத்தில் அழைத்து வந்துட்டாரு என அழுதுள்ளார்.

 

 

 

இதுமாதிரி வருவதற்கு எப்படி உனக்கு தோன்றியது என்று கேட்டதற்கு பள்ளிவிட்டு வந்தவுடன் அம்மா பொம்ம டீவி பார்க்க விடமாட்டாங்க. ஆனா அம்மா டீவியில சீரியல் பார்ப்பாங்க. அதனை நானும் பார்ப்பேன் அதில் ஒரு தொலைக்காட்சி சீரியலில் அம்மா திட்டியதற்காக அந்த பசங்க கோவித்துகொண்டு கிராமத்தில் உள்ள சொந்தக்காரங்க வீட்டுக்கு பஸ் ஏறி போவதை பார்த்தேன். அப்பா திட்டியவுடன் எனக்கு அது நினைவுக்கு வந்துச்சி. அதனால் தான் இப்படி வந்துவிட்டேன் என கண்ணீர் விட்டார்.

அதன் பிறகு தான் பரபரப்பாக காணப்பட்ட காவல்துறையினருக்கு பெருமூச்சே வந்தது. பெண்கள் தான் சீரியலில் முழ்கியுள்ளனர் என்று நினைத்தால், குழந்தைகளும் சீரியலில் வரும் கதாபாத்திரத்தை நினைவில் வைத்து கொண்டு இப்படியா செய்வது என பேசிக்கொண்டனர். 
 

சார்ந்த செய்திகள்

Next Story

“சின்னத்தை முடக்க முயற்சிப்பது மோடியின் மோடி மஸ்தான் வேலை” - அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Minister MRK Panneerselvam criticized BJP

தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், வருகிற ஏப்ரல் 6 ஆம் தேதி இந்தியா கூட்டணியின் சிதம்பரம் மக்களவைத் தொகுதி வேட்பாளரும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான தொல். திருமாவளவன், மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் சுதா ஆகியோரை ஆதரித்து சிதம்பரத்தில் நடைபெறும் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.

இதற்காக சிதம்பரம் புறவழிச்சாலையில் உள்ள லால்புரம் என்ற இடத்தில் பிரம்மாண்ட மேடை மற்றும் பொதுக்கூட்ட பந்தல் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த பணிகளை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் வியாழக்கிழமை(28.4.2024) பார்வையிட்டு ஆய்வு செய்தார். பொதுக்கூட்ட மேடை அமைய உள்ள இடத்திற்கு வந்த அமைச்சர் பன்னீர்செல்வம், மேடை அமைந்துள்ள பகுதி, தொண்டர்கள் அமர உள்ள இடம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை நடந்து சென்று பார்வையிட்டார். அப்போது மேடை அமைக்கும் பணிகள் குறித்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "வருகிற ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி சிதம்பரம் தொகுதி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் தொல். திருமாவளவன், மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி வேட்பாளர் உள்ளிட்டோரை ஆதரித்து சிதம்பரத்தை அடுத்த புவனகிரி கிழக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட லால்புரம் பகுதியில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறார். இதில் வாக்காளர்கள், பொதுமக்கள், தொகுதிகளைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் கலந்து கொள்வார்கள். மாநாடு போன்று இந்த கூட்டம் நடைபெற இருக்கிறது.

முதலமைச்சர் நேரடியாகச் சென்று பிரச்சாரம் செய்து வருகிறார். 3 ஆண்டு காலத்தில் செய்துள்ள சாதனைகள், பணிகள் குறித்து முதல்வர் பேசி வருகிறார். சுமார் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்கும் வகையில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. 75 ஆயிரம் பேர் வருவார்கள் என எதிர்பார்க்கிறோம். முந்தைய தேர்தலில் எதிர்க்கட்சியாக இருக்கும்போது மக்களைச் சந்தித்து வாக்கு கேட்டு 39 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கிறோம். இந்த ஆட்சியில் தனி நபர்கள் பண பலன்களைப் பெற்றுள்ளனர். ஒரு கோடியே 15 லட்சம் பேருக்கு மகளிர் உரிமைத்தொகை நேரடியாகச் செல்கிறது. மகளிருக்கு இலவச பேருந்து பயணம், மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டம் போன்ற திட்டங்கள் எந்த உலகத்திலும் இல்லை. பெண் கல்வியை ஊக்குவிப்பதற்காகக் கல்லூரியில் படிக்கும் மாணவிகளுக்கு உதவித்தொகை என அனைத்து உதவிகளும் நேரடியாக பயனாளிகளுக்குச் செல்கிறது.

திமுக கூட்டணி கொள்கை உள்ள கூட்டணி. இந்த கூட்டணிக்கு மக்கள் ஆதரவு இருக்கிறது. இது 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும். திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் கேட்கும் சின்னங்களை முடக்குவதன் மூலமாக அவர்களது வெற்றியை தடுக்க முயற்சிக்கின்றனர். இது மோடியின் மோடி மஸ்தான் வேலை. இது எதிர்க்கட்சிகளை முடக்குவதற்கு செய்கின்ற வேலை. இந்த ஆட்சி இ.டி., சி.பி.ஐ போன்றவற்றை வைத்துக் கொண்டு ஆட்சி புரிகின்றார்கள். ஆனால் தமிழக முதலமைச்சர் மக்கள் நலத்திட்டங்களை செய்து விட்டு, அதை முன்னெடுத்து பிரச்சாரம் செய்து வருகிறார். மக்கள் சக்தியாக ஒன்று திரண்டு வெற்றி பெறச் செய்வார்கள். 100 நாள் வேலைத் திட்டத்தில் கூலியை உயர்த்தியது அவரது பயத்தை காட்டுகிறது. இவற்றையெல்லாம் பார்த்து மக்கள் ஏமாற மாட்டார்கள். திரண்டு வந்து திமுக கூட்டணிக்கு வாக்களிப்பார்கள்” எனக் கூறினார்.

Next Story

சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியில் திருமாவளவன் உள்ளிட்ட 14 பேர் போட்டி!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
14 contests including Thirumavalavan in Chidambaram Parliamentary Constituency

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் கட்டமாக பாராளுமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இதனையொட்டி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளான புதன்கிழமை சிதம்பரம் தொகுதியில் 27 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும் அரியலூர் மாவட்ட ஆட்சியருமான ஆணிமேரி ஸ்வர்னா தலைமையில் வேட்பு மனுக்கள் பரிசீலனை வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில் திமுக கூட்டணி தலைமையில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், அதிமுக வேட்பாளர் சந்திரகாசன், பாஜக வேட்பாளர் கார்த்தியாயினி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜான்சிராணி, பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் நீலமேகம், நாடாளும் மக்கள் கட்சியின் வேட்பாளர் மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

இதில் சுயேச்சையாக போட்டியிட்ட முன்னாள் அதிமுக எம்பி சந்திரகாசி மனு நிராகரிக்கப்பட்டது.  மேலும் மாற்று வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் மனுக்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில் சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியில் அங்கீகரிக்கப்பட்ட மற்றும் பதிவு செய்யப்பட்ட பிரதான கட்சி வேட்பாளராக 6 பேரும் 8  சுயேச்சை வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர். இதில் இறுதி வேட்பாளர் பட்டியல் 30-ந்தேதி வெளியிடப்படுகிறது. இன்னும் வேட்பாளர்கள் குறையும் என்று கூறப்படுகிறது.