தமிழகத்தில் கரோனாவின் வேகம் அதிகரித்திருக்கிறது. பல துறையினரையும் அது பாடாய்ப்படுத்தி வருகிறது. சென்னையில் ஊடகத்துறையினர் மூவர் கரோனா தொற்றுக்கு ஆளாகி சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தனியார் தொலைக்காட்சியான சத்யம் தொலைக்காட்சியின்உதவி ஆசிரியர் ஒருவரும் கரோனா தொற்றுக்கு ஆளாகி இருப்பதால், அந்தத்தனியார் தொலைக்காட்சி அலுவலகத்தை மூன்று நாட்களுக்கு மூடும்படி அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர். இதையடுத்து அந்த தொலைக்கட்சி, தவிர்க்க முடியாத காரணங்களால் வேறொரு இடத்தில் இருந்து நிகழ்ச்சிகளை ஒளிபரப்பு செய்யப்படுகிறது என தெரிவித்துள்ளது.