புதுச்சேரியில் வீட்டில் இருந்த இளம்பெண் 17 வயது சிறுவனால் கொலை செய்யப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

the teenage women was murdered and sexually abused

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

புதுச்சேரியில்குயவர்பாளையத்தை சேர்ந்த திருமணம் நிச்சயக்கப்பட்டஒரு பெண்ணக்கு அடுத்த மாதம் 27 ஆம் தேதி திருமணம் நடவிருக்கின்ற நிலையில், கடந்த 18 ஆம் தேதி அவர் வீட்டிலேயே கொலைசெய்யப்பட்டு கிடந்தார். அவரது உடலை கைப்பற்றிய போலீசார் உடலை பிரேதபரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். பிரேதபரிசோதனை அறிக்கையில் அந்த பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதும் தெரியவந்தது. இதனை அடுத்து அந்த பெண்ணின் எதிர்வீட்டு உறவினர்கள், இளைஞர்கள் என அனைவரையும் போலீசார் பிடித்து விசாரித்து வந்தனர். ஒருகட்டத்தில்இந்த விசாரணை வளையத்தில் அதே தெருவை சேர்ந்த புறா வளர்க்கும் 17 வயதுசிறுவன் ஒருவன் சிக்க அவனிடம் நடத்திய விசாரணையில் அந்த 17 வயது சிறுவன்தான் அந்த இளம்பெண்ணை கொன்றான், மேலும் பாலியல் வன்கொடுமை செய்தான் எனும் திடுக்கிடும் உண்மை தெரிவந்தது.

Advertisment

சம்பந்தபட்ட சிறுவன் அந்த வீட்டின் மாடிக்கு இதற்கு முன்னே திருட்டுத்தனமாக செல்லும் பழக்கம் கொண்டவனாக இருந்துள்ளான். சம்பவத்தன்று அவன் வளர்த்து வந்த புறா அந்த வீட்டில் நுழைய அந்த சிறுவன் மீண்டும் அந்த வீட்டின் மாடி வழியாக வீட்டிற்குள் சென்றுள்ளான். அப்போது அங்கே வீட்டில் தனியாக இருந்த திருமணம் நிச்சயிக்கப்பட்ட அந்த இளம்பெண்ணுக்கு அந்த சிறுவனுக்கும் வாக்குவாதம் ஏற்பட அந்த பெண்ணை தாக்கி கொலைசெய்துள்ளான்.மேலும் அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமைக்கும் ஆளாக்கி விட்டு தப்பிச்சென்றுள்ளான்.

the teenage women was murdered and sexually abused

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

Advertisment

இதுபற்றி புதுச்சேரி முதுநிலை காவல் கண்காணிப்பாளர் ராகுல் அல்வால் கூறுகையில், 17 வயது சிறுவன் இப்படி இளம்பெண்ணாய் கொன்று பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி இருப்பது பெரும் அதிர்ச்சியை தந்துள்ளது. வீட்டில் நுழைந்த புறாவை பிடிக்க சென்ற சிறுவனை அந்த இளம்பெண் திட்டியுள்ளார். அதனை அடுத்து வாக்குவாதம் முற்ற அந்த அந்த சிறுவன் செங்கல்லை கொண்டு அந்த இளம்பெண்ணை தங்கியுள்ளான்.மேலும் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியுள்ளான் எனக்கூறினார்.