Skip to main content

ஒன்றியக்குழு கூட்டத்தை ஒட்டுமொத்தமாகப் புறக்கணித்த குழு உறுப்பினர்கள்!

Published on 26/10/2021 | Edited on 26/10/2021

 

Team members who boycotted the Union Committee meeting altogether

 

கடலூர் மாவட்டம் நல்லூர் ஊராட்சி ஒன்றிய தலைவராக உள்ளவர் பாமகவைச் சேர்ந்த செல்வி ஆடியபாதம். இந்த ஒன்றியத்தின் குழு உறுப்பினராக உள்ளவர்கள் அதிமுகவைச் சேர்ந்த ஜான்சிமேரி, பச்சமுத்து, பத்மாவதி, முத்து, வள்ளி ,மனோகரன், ராஜலட்சுமி ஆகியோர் ஆவர். திமுக சார்பில் முத்துக்கண்ணு, ஏழுமலை ,தனலட்சுமி ,செல்வமணி, வளர்மதி, வெண்ணிலா ஆகிய 6 பேர். பாமக சார்பில் செல்வி, மற்றும் செல்வகுமார், விசிக தரப்பில், மேகராஜன், சுயேச்சை உறுப்பினர்கள் சிவகுமார், ஜெயசுதா, ராஜா,குமாரி, அன்னை மணி, ஆகிய 5 பேர் உட்பட மொத்தம் 21 ஒன்றியக்குழு உறுப்பினர்கள் உள்ளனர்.

 

இந்த நிலையில் நேற்று காலை 10 மணி அளவில் ஒன்றியத்தில் உள்ள திட்டப் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டு ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் சேர்மன் செல்வி ஆடியபாதம் தலைமையில் கூட்டம் கூடியது. காலை 11 மணி அளவில் ஒன்றியக் குழுத் தலைவர் செல்வி ஆடியபாதம் துணைத் தலைவர் ஜான் மேரி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராமச்சந்திரன், சிவகுருநாதன் அதிமுகவைச் சேர்ந்த பச்சமுத்து ஆகியோர் மட்டுமே கூட்டத்திற்கு வருகை தந்தனர். மற்ற 18 குழு உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு வரவே இல்லை. குழு உறுப்பினர்கள் வருவார்கள்...வருவார்கள் என நீண்ட நேரம் காத்திருந்தும் குழு உறுப்பினர்கள் வராததால் கூட்டத்தை மீண்டும் வரும் ஒன்பதாம் தேதி நடத்துவது என ஒத்திவைப்பதாகக் குழு தலைவர் செல்வி ஆடியபாதம் அறிவித்தார்.

 

ஏன் 18 குழு உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்துகொள்ளாமல் புறக்கணித்தனர், என்ன காரணம் என்று விசாரித்தனர். அப்போது ஒன்றியத்தில் போதிய அளவு நிதி இருந்தும் ஒன்றிய கவுன்சிலர்கள் பகுதிகளில் மக்களுக்கான திட்டப் பணிகளைச் செய்வதற்குக் குறைவான அளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதனால் அதிக அளவு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்ததை அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. எனவே அதிக நிதி ஒதுக்கீடு செய்யும் வரை  கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் புறக்கணிக்கப் போவதாகக் குழு உறுப்பினர்கள் பலர் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஒன்றிய குழு கூட்டத்தை 18 உறுப்பினர்கள் புறக்கணித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“எதிரணியாக இருந்தாலும் அடையாளம் காட்டுங்கள் வாக்கு சேகரிக்கிறேன்” - தங்கர்பச்சான்

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
Cuddalore Constituency pmk  candidate director Thangabachan launched  campaign

கடலூர் தொகுதி பாமக வேட்பாளர் இயக்குநர் தங்கபாச்சன் அவரது மாந்தோப்பில் பிரச்சாரத்தை துவக்கி பாமக மற்றும் கூட்டணி கட்சியினரை உற்சாகப்படுத்தினார்.

கடலூர் மக்களவை தொகுதி பாமக வேட்பாளர் இயக்குநர் தங்கர்பாச்சன் செவ்வாய்க்கிழமை அவரது சொந்த ஊரான பத்திரக்கோட்டையில் உள்ள அவரது மாந்தோப்பில் தேர்தல் பிரச்சாரத்தை துவக்கினார். அப்போது அவர் பேசியதாவது கும்பல், கும்பலாக கூடி பேசாமல், தனித்தனியாக வீடு, வீடாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட வேண்டும். இந்த தேர்தல் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும், என்னிடம், எதிரணியராக இருந்தாலும் அடையாளம் காட்டுங்கள், அவர்களிடம் நான் பேசி வாக்கை பெறுகிறேன்.

நான் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக பாட்டாளி மக்கள் கட்சியுடன் தொடர்பில் இருந்து வருகிறேன். தற்போது  அரசியலுக்காக வெளியே வந்துள்ளேன். பாட்டாளி மக்கள் கட்சியின் வெற்றிக்கு அனைவரும் உறுதி ஏற்க வேண்டும். சமூக வலைத்தளங்களில் பரப்புவதை மட்டும் நமது நோக்கமாக இருக்கக் கூடாது, அது வாக்காக மாறாது. கட்சியின் கொள்கைகளை மக்களிடத்தில் கொண்டு போய் சேர்த்தால் பல லட்சம் வாக்குகளாக மாறும். இந்தத் தொகுதியில் அன்புமணி மைத்துனர் நிற்பதாக கூறி வருகிறார்கள். யார் நிற்பதை பற்றியும் கவலைப்பட தேவையில்லை. தேர்தல் பணியை மேற்கொள்ளுங்கள் என்றார். இவருடன் பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் ஜெகன் மற்றும் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Next Story

கடலூர் பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் வேட்பு மனு தாக்கல்

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
Cuddalore Parliamentary Constituency Congress candidate filing nomination

கடலூர் பாராளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணியில் திமுக தலைமையில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் எம்.கே.விஷ்ணு பிரசாத் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.  இதனைத் தொடர்ந்து இவர் கடலூர் மாவட்டத்தில் உள்ள தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர், தொழிலாளர் நலத்துறை அமைச்சர், காங்கிரஸ் கட்சியினர், கூட்டணி கட்சியினர் உள்ளிட்ட அனைத்து முக்கிய நிர்வாகிகளையும் சந்தித்து ஆதரவு திரட்டினார்.

இதனைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை மதியம் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் அலுவலரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். இவருடன் தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம், தமிழக தொழிலாளர் நலன் மற்றும் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ கணேசன் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் கே எஸ் அழகிரி, காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற உறுப்பினர் சிந்தனைச் செல்வன் ஆகியோர் உடன் இருந்தனர்.

இதனைத் தொடர்ந்து  வேட்பாளர் வேட்பாளர் எம். கே. விஷ்ணு பிரசாத் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், “கடலூர் பாராளுமன்ற தொகுதியான நெய்வேலி சட்டமன்ற தொகுதியில் உள்ள என்.எல்.சி இந்தியா நிறுவனத்தில் வெளிமாநிலத்தில் உள்ளவர்கள் அதிக அளவில் பணியில் உள்ளனர். இதில் தமிழகத்தில் உள்ளவர்களை பணியாற்ற நடவடிக்கை எடுப்பேன். மேலும் கடலூர் தொகுதிக்கு நான் புதியது என்றாலும் இங்குள்ள அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் மற்றும் சி.வெ கணேசன் ஆகியவரின் அறிவுறுத்தல் படி  தேவையான அனைத்து திட்டங்களையும் செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்வேன்” என கூறினார்

இந்நிகழ்வில் எம்எல்ஏக்கள் கடலூர் ஐயப்பன்,  நெய்வேலி சபா ராஜேந்திரன், விருதாச்சலம் ராதாகிருஷ்ணன், கடலூர் மாநகராட்சியின் துணை மேயர் தாமரைச்செல்வன், திமுக நகர செயலாளர் ராஜா மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.