style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
சென்னை திருவல்லிக்கேணியில் செய்தியாளர்களைச் சந்தித்த பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேசுகையில், மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு போராட்டத்தில்ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் உடனே பணிக்கு திரும்பவேண்டும். ஆசிரியர்களின் வேலை நிறுத்த போராட்டம் ஒரு சிலரால் தவறாகக் தூண்டி விடப்படுகிறது. வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசு தயாராக உள்ளது எனக் கூறினார்.