style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="7632822833" data-ad-format="auto" data-full-width-responsive="true">
அங்கன்வாடிகளில் பணி நிரவல், மாற்றுப்பணிக்கான ஆசிரியர்கள் இன்றைக்குள் பணியில் சேரவேண்டும் என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. வரும் திங்கள் முதல் 2,381 அங்கன்வாடிகளில் எல்.கே.ஜி வகுப்புகள் தொடங்கவுள்ளதால் பணி ஒதுக்கப்பட்ட ஆசிரியர்கள் ஆணையை பெற்றுக்கொண்டு உடனே பணியில் சேர வேண்டும் என்றும், அதேபோல் ஆசிரியர்கள் பணியமர்த்துவதில் தாமதம் ஏற்பட்டால் மாணவர் சேர்க்கையில் சுணக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது என்றும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.