Skip to main content

அரசுப் பள்ளிகளில் மாணவர்களைச் சேர்க்க ஆசிரியர்கள் பிரச்சாரம்

Published on 28/04/2023 | Edited on 28/04/2023

 

Teachers campaign to enroll students in government schools

 

அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை வலியுறுத்தி ஆசிரியர்கள் துண்டுப் பிரசுரம் வழங்கினர்.

 

ஈரோடு, எஸ்.கே.சி.ரோடு மாநகராட்சி நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியை சுமதி தலைமையில் ஈரோடு, ஸ்டோனி பாலம், அண்ணா நகர், சாந்தாங்கருக்கு மற்றும் கிராமடை ஆகிய பகுதிகளில் அரசுப் பள்ளியில் மாணவர் சேர்க்கையை வலியுறுத்தி பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.

 

இப்பிரச்சாரத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு அரசு வழங்கும் சலுகைகளான இலவச சீருடை, இலவச நோட்டுப் புத்தகங்கள், ஆங்கில வழிக் கல்வி மற்றும் காலை உணவு உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் குறித்து எடுத்துக் கூறியும், அரசுப் பள்ளிகள் பெருமையின் அடையாளம் என்பதை வலியுறுத்தியும் அரசுப் பள்ளியில் மாணவர்களைச் சேர்ப்பதன் பயன்கள் போன்றவற்றை எடுத்துக் கூறியும் பிரச்சாரம் செய்யப்பட்டது.

 

Teachers campaign to enroll students in government schools

 

மேலும், அதுகுறித்த துண்டுப் பிரசுரங்களும் பொதுமக்களிடம் வழங்கப்பட்டன. தற்போது எல்.கே.ஜி. முதல் 8 ஆம் வகுப்பு வரை தமிழ் மற்றும் ஆங்கில வழிக் கல்விக்கான சேர்க்கை நடைபெற்று வருவதால் பொதுமக்கள் தங்களது குழந்தைகளை உடனடியாக அரசுப் பள்ளிகளில் சேர்த்து பயன்பெறலாம் என்றும் எடுத்துரைக்கப்பட்டது. இந்தப் பிரச்சாரத்தில் ஈரோடு, எஸ்.கே.சி.ரோடு மாநகராட்சி நடுநிலைப் பள்ளி ஆசிரியைகள் மற்றும் இல்லம் தேடிக் கல்வித் திட்ட தன்னார்வலர்கள் கலந்துகொண்டனர்.

 

 

கடக்கும் முன் கவனிங்க...

கடக்கும் முன் கவனிங்க...

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

சார்ந்த செய்திகள்

Next Story

பணிச்சுமை காரணமாக டான்சி நிறுவன ஊழியர் எடுத்த விபரீத முடிவு

Published on 01/12/2023 | Edited on 01/12/2023

 

tansi company employee  lost their life due to workload

 

ஈரோடு, மாணிக்கம்பாளையம் ஹவுசிங் யூனிட் பகுதியைச் சேர்ந்தவர் ரங்கசாமி (53). இவரது மனைவி ராதா (48). இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். இருவரும் வெளியூரில் வேலை பார்த்து வருகின்றனர். ரங்கசாமி கோவையில் உள்ள தமிழ்நாடு அரசின் டான்சி நிறுவனத்தில் போர்மேனாக வேலை பார்த்து வந்தார்.

 

கடந்த சில மாதங்களாகவே தனக்கு பணிச்சுமை அதிகமாக இருப்பதாக ரங்கசாமி தனது மனைவியிடம் கூறி புலம்பி வந்துள்ளார். இந்த நிலையில், நேற்று முன்தினம்(29.11.2023) காலையில் ரங்கசாமி பணிக்குச் சென்றார். மனைவி ராதா அவர்களது உறவினர் வீட்டுக்குச் சென்றிருந்தார். மீண்டும் மாலையில் ராதா வீட்டுக்கு வந்தபோது வீடு உள்பக்கமாக தாழ்ப்பாள் போடப்பட்டிருந்திருக்கிறது. ரங்கசாமியின் செல்போனுக்கு அழைத்தபோது அவர் போனை எடுக்கவில்லை. 

 

இதையடுத்து சந்தேகமடைந்த ராதா, அக்கம்பக்கத்தினரின் உதவியுடன், மாடிக்குச் சென்று பார்த்தபோது, அங்குள்ள குளியல் அறையில் நைலான் கயிற்றால் தூக்கில் தொங்கிய நிலையில் ரங்கசாமி இருந்துள்ளார். உடனடியாக அவரை மீட்டு ஈரோடு அரசுத் தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர், ஏற்கனவே ரங்கசாமி இறந்துவிட்டதாகத் தெரிவித்தார். டான்சி நிறுவனத்தின் உயர் அதிகாரி செய்த தொந்தரவால்தான் ரங்கசாமி தற்கொலை செய்து கொண்டுள்ளார் எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்

Next Story

ஓடும் ரயிலில் பாலியல் தொல்லை; கட்டடத் தொழிலாளி கைது

Published on 29/11/2023 | Edited on 29/11/2023

 

nn

 

ஓடும் ரயிலில் பெண் பயணிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கட்டிட தொழிலாளி ஈரோட்டில் கைது செய்யப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.

 

சென்னையில் இருந்து மங்களூர் செல்லும் விரைவு ரயிலில் முன்பதிவு பெட்டியில் கேரளாவை சேர்ந்த பெண் பயணி ஒருவர் பயணம் செய்துள்ளார். ரயில் இன்று அதிகாலை சேலத்தில் இருந்து ஈரோடு நோக்கி சென்ற போது முன்பதிவு பெட்டியிலிருந்த பெண் பயணியிடம் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த கருணாகரன் கட்டிடத் தொழிலாளி என்பவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் பயணி நடந்த சம்பவம் குறித்து டிக்கெட் பரிசோதகர் மூலம் ரயில்வே காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த ஈரோடு ரயில்வே காவல்துறையினர் கட்ட தொழிலாளியான கருணாகரனை கைது செய்து ஈரோடு கிளை சிறையில் அடைத்தனர்.

 

 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்