Skip to main content

ஹெச்.எம். திட்டியதால் மன உளைச்சல்; அரசுப் பள்ளி ஆசிரியர் எடுத்த விபரீத முடிவு

Published on 10/11/2023 | Edited on 10/11/2023

 

teacher who was upset because of the headmaster is scolding

 

அரசுப் பள்ளியில் தலைமை ஆசிரியர் திட்டியதால் மன உளைச்சல் அடைந்த முதுகலை ஆசிரியர் தூக்கிட்டுத் தற்கொலை செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.    

 

தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 700க்கும் மேற்பட்ட  மாணவர்கள் படிக்கின்றனர். லோகநாதன் என்பவர் தலைமை ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். இங்கு, பாலக்கோட்டைச் சேர்ந்த கிருஷ்ணன்(53) என்பவர், வேளாண்மை பாடப்பிரிவு ஆசிரியராகப் பணியாற்றுகிறார். இவர், மாணவர்களுக்குச் சரியாக பாடம் நடத்துவதில்லை என்று புகார்கள் வந்தன.     

 

இந்நிலையில், நவ. 8ம் தேதி காலை, கிருஷ்ணன் வழக்கம்போல் பள்ளிக்கு வந்தார். இறை வழிபாட்டுக் கூட்டத்தில் வைத்து தலைமை ஆசிரியர் லோகநாதன் அவரைக் கண்டித்துள்ளார். மாணவர்கள் மற்றும் சக ஆசிரியர்கள் முன்பு தன்னை தலைமை ஆசிரியர் அவமானப்படுத்தி விட்டதாக வருந்திய கிருஷ்ணன், பள்ளி வளாகத்தில் இருந்த மரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்ய முயன்றார். இதைப் பார்த்து பதறிய சக ஆசிரியர்கள், அவரை உடனடியாக மீட்டு பென்னாகரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த பென்னாகரம் காவல்நிலைய காவல்துறையினர், பள்ளிக்குச் சென்று விசாரணை நடத்தினர். 

 

வேளாண்மை பாட முதுகலை ஆசிரியர் கிருஷ்ணன் பாடம் நடத்துவது தொடர்பாக தலைமை ஆசிரியருக்கு அதிருப்தி இருந்துள்ளது. இது தொடர்பாக அவர்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் நடந்து வந்துள்ளது. இதையடுத்து கிருஷ்ணன் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்திற்கு தலைமை ஆசிரியர் கடிதம் எழுதியுள்ளார். அதன்பேரில் கிருஷ்ணனிடம் உயர் அலுவலர்கள் நேரில் விசாரணை நடத்திவிட்டுச் சென்றுள்ளனர். 

 

இந்த நிலையில், காலை இறை வழிபாட்டுக் கூட்டத்திலேயே வைத்து தலைமை ஆசிரியர் அவரைக் கண்டித்ததால் மன உளைச்சல் அடைந்த கிருஷ்ணன், தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயன்றிருப்பது தெரிய வந்தது. சிகிச்சையில் இருக்கும் ஆசிரியர் கிருஷ்ணனிடமும் காவல்துறையினர் விசாரித்தனர். அப்போது அவர், ''தலைமை ஆசிரியர் லோகநாதன் என்னை மரியாதைக் குறைவாக நடத்துகிறார். சின்ன சின்ன விஷயங்களுக்காக எல்லாம் திட்டுகிறார். இதனால் மன உளைச்சலில் தற்கொலைக்கு முயன்றேன்" என்று கூறியுள்ளார்.    

 

இந்த சம்பவம் குறித்து, அந்தப் பள்ளியில் பணியாற்றி வரும் மற்ற ஆசிரியர்களிடமும், கிருஷ்ணனிடம் படித்து வரும் பிளஸ் 1, பிளஸ் 2  மாணவர்களிடமும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளி வளாகத்தில் பலர் முன்னிலையில் ஆசிரியர் ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயன்ற சம்பவம், தர்மபுரி மாவட்ட பள்ளிக் கல்வித்துறை  வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஆவடியில் இரட்டைக் கொலை; போலீசாரிடம் சிக்கிய செல்போன்!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
aavadi siddha doctor and his wife incident Cell phone caught by the police

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்துள்ள மிட்டனமல்லியில் சித்த மருத்துவர் சிவன் நாயர் என்பவரும், அவரது மனைவி பிரசன்னகுமாரி ஆகியோர் வசித்து வந்துள்ளனர். இத்தகைய சூழலில் அவரது இல்லத்திற்கு சிகிச்சைக்கு வருவதுபோல் நேற்று (28.04.2024) இரவு வீட்டிற்குள் மர்ம நபர்கள் நுழைந்துள்ளனர். அதன்பின்னர் சித்த மருத்துவர் சிவன் நாயரையும் அவரது மனைவி பிரசன்னகுமாரியையும் மர்ம நபர்கள் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்துள்ளனர். அதனைத் தொடர்ந்து மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பியோடியுள்ளனர்.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் தீவிர விசாராணை மேற்கொண்டனர். அப்போது இந்த இரட்டைக் கொலை நடந்த இடத்தில் செல்போன் ஒன்று கைப்பற்றப்பட்டது. இது தொடர்பாக ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த மகேஷ் என்பவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதோடு கொலையான மருத்துவரிடம் சிகிச்சை பெற வந்தவர்களிடமும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மேலும் கொலையாளிகள் பல லட்சம் மதிப்பிலான தங்க நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனரா என்ற கோணத்திலும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஆவடி அருகே சித்த மருத்துவர் மற்றும் அவரது மனைவி கழுத்து அறுத்து கொடூரக் கொலை செய்யப்பட்ட சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

தேவகவுடா மகன் மீது பாலியல் குற்றச்சாட்டு!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
Deve Gowda's son issue in karnataka 

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று முன்தினம் (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 28 தொகுதிகள் கொண்ட கர்நாடகா மாநிலத்தில் ஏப்ரல் 26 ஆம் தேதி 14 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. மே 7 ஆம் தேதி மற்ற 14 தொகுதிகளில் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

இந்தத் தேர்தலில், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில், முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் ஜனதா தளம் (எஸ்) கட்சி போட்டியிடுகிறது. கர்நாடகாவில் ஆளும் கட்சியான காங்கிரஸ் இந்தத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுகிறது. இத்தகைய சூழலில் தேவகவுடாவின் பேரனும், ஹாசன் மக்களவைத் தொகுதியின் எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்துள்ளது. தன்னிடம் உதவி கேட்டு வந்த ஏராளமான பெண்களை பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் தேவைகளுக்காக பயன்படுத்திக் கொண்டதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களுடன் இருப்பது போன்ற ஆபாச காட்சிகள் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பிரஜ்வல் ரேவண்ணா மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் மாநில மகளிர் ஆணையம் கர்நாடக அரசுக்கு கடிதம் எழுதி இருந்தது.

Deve Gowda's son issue in karnataka 

இதனையடுத்து இந்தப் புகார் குறித்து சிறப்பு புலானாய்வுக் குழு அமைத்து விசாரணை தொடங்க முடிவெடுக்கப்பட்டது. இதற்கான உத்தரவை கர்நாடக முதல்வர் சித்தராமையா வெளியிட்டிருந்தார். அதே சமயம் இந்தப் புகார் குறித்த நெருக்கடி அதிகரிப்பால் பிரஜ்வல் ரேவண்ணா கர்நாடகாவில் இருந்து ஜெர்மனிக்கு தப்பியோடியதாவும் தகவல் வெளியாகி இருந்தது. இதற்கிடையே காங்கிரஸ் கட்சியின் மகளிர் அணியினர் அவரைக் கைது செய்ய வலியுறுத்தி போராட்டத்திலும் ஈடுபட்டனர். பிரஜ்வால் ரேவண்ணா மீது ஹோலேநரசிப்பூர் காவல் நிலையத்தில் ஐபிசி 354 ஏ, 354 டி, 506, மற்றும் 509 ஆகியவற்றின் கீழ் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரிக்கும் சிஐடி பிரிவின் எஸ்ஐடி (சிறப்பு புலனாய்வுக் குழு) குழு ஐபிஎஸ் அதிகாரி விஜய் குமார் சிங் தலைமையில் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. மேலும் இந்தக் குழுவில் சிஐடி டிஜி சுமன் டி பென்னேகர் மற்றும் ஐபிஎஸ் அதிகாரி சீமா லட்கர் ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டது. அதே சமயம் இந்த மக்களவைத் தேர்தலில் ஹாசன் தொகுதியில் பாஜக கூட்டணி வேட்பாளராக பிரஸ்வால் ரேவண்ணா ப்ரஜ்வால் மீண்டும் போட்டியிடும் ஹசான் தொகுதியில் கடந்த 26ம் தேதி தேர்தல் நடைபெற்று முடிவடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

Deve Gowda's son issue in karnataka 

இந்நிலையில் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மகனும், முன்னாள் அமைச்சருமான எச்.டி.ரேவண்ணா மீது பாலியல் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எச்.டி.ரேவண்ணா வீட்டில் பணியாற்றும் சமையலர் அளித்த புகாரின் பேரில் ரேவண்ணா மீது பாலியல் சீண்டல், மிரட்டல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து ஹோலேநர்சிபூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். எச்.டி. ரேவண்ணாவின் மகன் பிரஜ்வால் மீது ஏற்கெனவே பாலியல் புகார் உள்ள நிலையில் தற்போது தந்தை மீதும் பாலியல் புகார் எழுந்துள்ள சம்பவம் கர்நாடகாவில் பெரும் அதிர்வலையையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.