Skip to main content

ஆசிரியரிடம் லஞ்சம் வாங்கிய மாவட்ட கல்வி அதிகாரி கைது!

Published on 11/06/2020 | Edited on 11/06/2020


 

teacher money dindigul district police


திண்டுக்கல்லில் ஆசிரியரிடம் லஞ்சம் வாங்கிய மாவட்ட கல்வி அதிகாரியை போலீசார் அதிரடி கைது செய்தனர்.
 


திண்டுக்கல் அருகே உள்ள தாமரைபாடியைச்  சேர்ந்தவர் டேஸ்மி கிறிஸ்டினா. இவர் வட மதுரையில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளி ஒன்றில் ஆசிரியராகப் பணியாற்றி வந்தார். இந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதம் திண்டுக்கல் முத்தழகுபட்டி அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிக்கு அவர் இடமாற்றம் செய்யப்பட்டார். ஆனால் அவருக்கு ஆறு மாதங்களாக சம்பளம் கிடைக்கவில்லை. இது குறித்து அவர் கல்வித்துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தார். ஆனாலும் அவருக்கு சம்பளம் கிடைக்கவில்லை இந்த நிலையில் மாவட்ட கல்வி அதிகாரி சுப்பிரமணியிடம், இது குறித்து டேஸ்மி கிருஷ்டினா புகார் தெரிவித்தார்.

அப்போது அவர் உங்களுக்குச் சேர வேண்டிய நிலுவை சம்பளத் தொகை மற்றும் பணம் பலன்கள் கிடைக்க வேண்டும் என்றால் தனக்கு 5 ஆயிரம் லஞ்சம் தர வேண்டும் என்று கேட்டதாகத் தெரிகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த டேஸ்மி கிருஷ்டினா, இதுகுறித்து திண்டுக்கல் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் தெரிவித்தார். அதன் அடிப்படையில் மாவட்ட கல்வி அதிகாரியை கையும் களவுமாகப் பிடிக்க லஞ்ச ஒழிப்பு போலீசார் முடிவு செய்தனர். இதற்காக ஆசிரியையிடம் ரசாயனம் தடவிய நோட்டுகளை லஞ்ச ஒழிப்பு போலீசார் கொடுத்து அந்தப் பணத்தை மாவட்ட கல்வி அதிகாரிகளும் கொடுக்கும்படி கூறினார். இதற்கிடையில் நேற்று திண்டுக்கல்லில் உள்ள ஒரு பள்ளியில் மாவட்ட கல்வி அதிகாரி சுப்பிரமணி ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டு இருந்தார்.
 

 


அப்போது அங்குச் சென்ற ஆசிரியை டேஸ்மி கிருஷ்டினா தான் கொண்டுவந்த ஐந்து ஆயிரத்தை சுப்பிரமணியிடம் கொடுத்தார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸ் துணை சூப்பிரண்டு நாகராஜ் இன்ஸ்பெக்டர் சுந்தர்ராஜ் மற்றும் போலீசார் அவரை சுற்றி வளைத்துப் பிடித்துக் கைது செய்தனர். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த மாவட்ட கல்வி அதிகாரி சுப்பிரமணி திடீரென தனக்கு நெஞ்சு வலிக்கிறது என்று கூறியதன் பேரில் உடனடியாக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றன. 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பட்டப்பகலில் பெண் படுகொலை; போலீசார் விசாரணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
nn

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் வீட்டில் தனியாக இருந்த பெண் ஒருவர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியைச் சேர்ந்தவர் குமார். ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரான இவர் நேற்று வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் ஹாலில் அவருடைய மனைவி சரஸ்வதி வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த குமார் கூச்சலிட்டுள்ளார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து உடனடியாக சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த சரஸ்வதியின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மர்ம நபர்கள் சரஸ்வதியை வெட்டிப் படுகொலை செய்துவிட்டு அவர் கழுத்தில் இருந்த தங்க நகையைப் பறித்துச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. இருப்பினும் இந்த கொலை, நகைக்காக நடந்ததா அல்லது வேறு ஏதேனும் முன் விரோதப் பிரச்சனை காரணமாக நிகழ்ந்ததா என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Next Story

'எல்லாருமே திருடங்கதான்... சொல்லப் போனா...' - பாடலுக்கு நடனமாடியபடி வந்த சுயேச்சை வேட்பாளர்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Independent candidate danced to the song 'ellarume Thirudangathan... sollpona...'

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில் இன்று மனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட இருக்கிறது. நேற்று முக்கிய கட்சிகளின் பிரமுகர்கள் முதல் சுயேச்சை வேட்பாளர்கள் எனப் பலர் இறுதி நாள் என்பதால் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்தனர். வேட்புமனு தாக்கல் செய்ய வரும் சுயேச்சை வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சியைச் சேர்ந்த வேட்பாளர்கள் சிலர் நூதன முறைகளில் வந்து வேட்புமனு தாக்கல் செய்வது முன்னரே பல தேர்தல்களில் நடந்துள்ளது.

தேர்தல் நேரங்களில் இதுபோன்ற நூதன சம்பவங்கள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் திண்டுக்கல்லில் வேட்புமனு தாக்கல் செய்ய வந்த சுயேச்சை வேட்பாளர் ஒருவர் 'எல்லாருமே திருடங்கதான் சொல்லப்போனால் குருடங்கதான்' என்ற பாடலை ஒலிக்கவிட்டபடி சாலையில் நடனமாடிக்கொண்டே வேட்புமனு தாக்கல் செய்ய வந்தார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.