Advertisment

விடுதி மாணவர்களுக்கு பாலியல் தொல்லை; ஆசிரியர் போக்சோவில் கைது

Teacher arrested under pocso in nagapattinam

நாகப்பட்டினத்தில் ஆதி திராவிடர் நல மாணவர் விடுதியில் சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தற்காலிக ஆசிரியரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்துள்ளனர்.

Advertisment

நாகப்பட்டினம், கோட்டைவாசல்படி பகுதியில் அரசு ஆதி திராவிடர் நல மாணவர் விடுதி இயங்கி வருகிறது. கீழ்வேளூர் தாலுக்கா, காக்கழனி நுகத்தூர், தெற்கு தெருவைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (28). இவர் இந்த விடுதியில் தனியார் தொண்டு நிறுவனத்தின் மூலம் தற்காலிக ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். இவர், கடந்த செப்டம்பர் மாதம் முதல் விடுதியில் தங்கி படிக்கும் 5 மாணவர்களுக்கு இரவு நேரத்தில் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

Advertisment

இது குறித்து பாதிக்கப்பட்ட மாணவர்கள் நாகப்பட்டினம் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேசனில் புகார் செய்தனர். இதன் பேரில் இன்ஸ்பெக்டர் சந்தானமேரி வழக்குப் பதிவு செய்து ஆறுமுகத்தை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.

Nagapattinam POCSO police
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe