Skip to main content

40 பேரை ஏமாற்றிய ஆசிரியர்; இளம்பெண் கொடுத்த புகாரில் கைது! 

Published on 25/10/2022 | Edited on 25/10/2022

 

Teacher arrested by police who fraudulent 95 lakhs

 

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணைநல்லூரைச் சேர்ந்த தங்கமயில் என்பவரின் தந்தை கலியமூர்த்தி. இவர் திருவெண்ணைநல்லூரில் உள்ள மின்சார வாரிய அலுவலகத்தில் முகவராக பணிபுரிந்து கடந்த 2009 ஆம் ஆண்டு ஓய்வு பெற்றுள்ளார். அதன் பின் அதே பணியில் ஒப்பந்த ஊழியராக 2017ம் ஆண்டு வரை பணிபுரிந்துள்ளார். அந்த காலகட்டத்தில் அப்பகுதியில் உள்ள டி. புதுப்பாளையத்தைச் சேர்ந்த ஆசிரியர் சங்கரன்(51) என்பவர் கலியமூர்த்திக்கு அறிமுகம் ஆகியுள்ளார். 

 

சங்கரன் சித்தலிங்கமடம் என்ற ஊரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பட்டதாரி ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த 2019ம் ஆண்டு மின்வாரியத்தில் பல பணிகள் காலியாக உள்ளன என்றும், அந்தப் பணி கிடைக்க ஒரு நபருக்கு மூன்று லட்ச ரூபாய் கொடுத்தால் விரைவில் வேலை வாங்கித் தருவதாகவும் கலியமூர்த்தியிடம் கூறியுள்ளார். இதை நம்பிய கலியமூர்த்தி, தனக்கு தெரிந்தவர்கள் சுமார் 40 பேரிடம் மின்வாரியத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி  தலா 2 லட்சம் ரூபாய் வீதம் வசூல் செய்து மொத்தம் சுமார் 95 லட்சத்தை ஆசிரியர் சங்கரனிடம் கொடுத்துள்ளார். ஆனால் அவர்கள் யாருக்கும் வேலை கிடைக்கவில்லை. 

 

இந்த நிலையில், கடந்த 2020ம் ஆண்டு கலியமூர்த்தி திடீரென இறந்துவிட்டார். அதேசமயம், கலியமூர்த்தியிடம் பணம் கொடுத்தவர்கள் அவரின் மகளான தங்கமயிலிடம் வேலையும் வரவில்லை; பணமும் வரவில்லை. வேலைகூட வேண்டாம் பணம் மட்டும் திருப்பி கொடுங்கள் என கேட்டுள்ளனர். இதையடுத்து தங்கமயில், ஆசிரியர் சங்கரனை சந்தித்து வேலை கேட்டு பணம் கொடுத்தவர்கள் பணம் கேட்டு தொந்தரவு செய்வதாகவும் உடனே சம்பந்தப்பட்டவர்களுக்கு பணத்தை திருப்பித் தர வேண்டும் என்றும் கேட்டுள்ளார். 

 

அப்போது சங்கரன், பணம் கொடுத்த அனைவருக்கும் விரைவில் வேலை கிடைத்துவிடும் என்று கூறியுள்ளார். ஆனால் அவர் கூறியபடி வேலை வாங்கித் தரவில்லை. இதையடுத்து தங்கமயில், பணம் கொடுத்தவர்கள் அனைவருக்கும் பணத்தை திருப்பிக் கொடுக்குமாறு கேட்டுள்ளார். அதன்பின் சங்கரன், சுமார் 24 லட்சம் ரூபாய் பணத்தை மட்டும் தங்கமயிலிடம் கொடுத்துள்ளார். மீதி ரூ 70 லட்சத்தை திருப்பித் தரவில்லை. பலமுறை கேட்டுப் பார்த்தும் சங்கரன் பணம் தராமல் ஏமாற்றி வந்துள்ளார். சங்கரன் ஏமாற்றும் நோக்கத்தில் இருப்பதை அறிந்த தங்கமயில், விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு காவல் துறையிடம் சங்கரன் மீது மோசடி புகார் அளித்துள்ளார். அவரது புகாரின் பேரில் விசாரணை செய்து வழக்குப் பதிவு செய்த போலீசார், சங்கரனை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பட்டப்பகலில் பெண் படுகொலை; போலீசார் விசாரணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
nn

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் வீட்டில் தனியாக இருந்த பெண் ஒருவர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியைச் சேர்ந்தவர் குமார். ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரான இவர் நேற்று வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் ஹாலில் அவருடைய மனைவி சரஸ்வதி வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த குமார் கூச்சலிட்டுள்ளார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து உடனடியாக சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த சரஸ்வதியின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மர்ம நபர்கள் சரஸ்வதியை வெட்டிப் படுகொலை செய்துவிட்டு அவர் கழுத்தில் இருந்த தங்க நகையைப் பறித்துச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. இருப்பினும் இந்த கொலை, நகைக்காக நடந்ததா அல்லது வேறு ஏதேனும் முன் விரோதப் பிரச்சனை காரணமாக நிகழ்ந்ததா என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Next Story

நீரோடையில் மிதந்த சடலம்; போலீசார் விசாரணையில் அதிர்ச்சி

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
A body lying in a stream; Police investigation shocked

தந்தையைக் கொலை செய்தவரைப் பழிக்குப் பழி கொலை செய்து நீரோடையில் வீசிய சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நெல்லை மாவட்டம் தெற்கு ஏறாந்தை கிராமத்தில் வசித்து வருபவர் தேவபாலன். லாரி ஓட்டி வந்த தேவபாலன் திடீரென காணாமல் போன நிலையில், உறவினர்கள் அவரைத் தேடி வந்தனர். இறுதியில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள நீரோடை ஒன்றில் சடலம் ஒன்று மிதப்பதாகத் தகவல் பரவியது. இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த திசையன்விளை போலீசார் ஆய்வு செய்ததில், வெட்டுக் காயங்களுடன் ஒருவர் கொலை செய்யப்பட்டு நீரோடையில் வீசப்பட்டது தெரிய வந்தது.

உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தியதில், அது காணாமல் போன தேவபாலன் என்பது தெரியவந்தது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், தேவபாலன் கொலை வழக்கு தொடர்பாக சாத்தூர் நீதிமன்றத்தில் உத்திரகுமார், சுரேஷ்குமார், சேர்மதுரை உள்ளிட்ட மூன்று பேர் சரணடைந்தனர். மூவரும் சகோதரர்கள். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பழிக்குப் பழியாக லாரி டிரைவரை கொலை செய்தது தெரியவந்தது.

2017 ஆம் ஆண்டு துரைபாண்டியன் என்பவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தேவபாலனுக்கு தொடர்பு இருந்ததாகத் தெரிகிறது. ஆனால் நீதிமன்றத்தில் குற்றம் நிரூபணம் ஆகாததால் அவர் விடுவிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், துரைபாண்டியனின் மகன்களான சுரேஷ்குமார், உத்திர குமார், சேர்மதுரை ஆகிய மூன்று பேரும் பல வருடங்கள் கழித்து தேவபாலனை வெட்டிக் கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்தது.