Skip to main content

தலைமை ஆசிரியரை வெளியேற்றிய பள்ளி நிர்வாகிக்கு பெற்றோர்கள் கண்டனம்

Published on 02/07/2019 | Edited on 02/07/2019

 


கடலூர் மாவட்டம் கம்மாபுரம் அருகேயுள்ளது பெரு வரப்பூர் கிராமம்.   இங்கு அரசு உதவி பெரும் தொடக்கப் பள்ளி ஒன்று நடைபெற்று வருகிறது. இந்த பள்ளியில் சுமார் 100 பிள்ளைகள் படிக்கின்றனர்.  இங்கு ஏற்கனவே தலைமையாசிரியர்,  உதவி ஆசிரியர் என இருவர் பணியில் இருந்தனர்.  இதில் உதவி ஆசிரியர் கடந்த 2017ம் ஆண்டு பணி நிறைவு பெற்று ஓய்வு பெற்று சென்று விட்டார்.   இதன் பிறகு தலைமையாசிரியை பார்வதி மட்டுமே இங்கு பணி செய்துள்ளார்.  இவரும் கடந்த ஜூன் 30ம் தேதியுடன் பணி ஓய்வு பெற்றுள்ளார்.  இருந்தும் கல்வி ஆண்டுக்கு இடையில் ஆசிரியர்கள் பணி ஓய்வு பெற்றாலும் கூட அந்த கல்வி அண்டு முழுவதும் பணி செய்யலாம் என்பது அரசு விதி.  

 

te

 

இதன் அடிப்படையில் கம்மாபுரம் வட்டார கல்வி அலுவலர் அறிவழகன், தலைமையாசிரியை பார்வதியை 1.7.2019 முதல் 31 .5.2020 வரை பணி நீட்டிப்பு செய்து அதற்கான  உத்தரவை அளித்துள்ளார்.    ஆனால் பள்ளி நிர்வாகி ரங்கசாமி என்பவர் இந்த பணி ஆணையை ஏற்க முடியாது என 1.7.2019 அன்று பள்ளிக்கு வந்த ஆசிரியை பார்வதியை உள்ளே விடாமல் தடுத்து வெளியே அனுப்பியுள்ளார்.  


 கல்வி அதிகாரியின் இந்த முறையான உத்தரவை காட்டியும் பள்ளி தாளார் கரார் காட்டினார்.  இதனால் கோபமுற்ற ஆசிரியை பார்வதி பள்ளி முன்பு அமர்ந்து காத்திருப்பு  போராட்டத்தில் ஈடுபட்டார்.  விஷயம் பரவியதும் ஊர் மக்கள் போலீசார் கல்வி அதிகாரிகள்  என அனைவரும் பள்ளிக்குள் குவிந்தனர். 

 

 அதிகாரிகள் பள்ளி நிர்வாகியுடன் பேச்சு வார்த்தை நடத்தினர்.  முடிவில் வருகைப்பதிவேட்டில் ஆசிரியை கையெழுத்து போடாமல் பிள்ளைகளுக்கு பாடம் நடத்த அனுமதிக்கப்பட்டார்.     ஏன் இந்த குளறுபடி சோழியன் குடுமி சும்மா ஆடாது என்பது போல,  பணி இடம் காலியானால் புது ஆசிரியர்களை நிய மதிக்க ஆவலாக உள்ளது கல்வி அதிகாரிகளோ அரசின் நிதி நெருக்கடி காரணமாக இருப்பதை கொண்டு சரி செய்து பள்ளி நடத்த வேண்டும் என்று கூறுகிறது.  இப்படி இரு தரப்பு பிடிவாதங்களால் பிள்ளைகள் படிப்பு பாழாக கூடாது.  இப்போது 85பிள்ளைகள் உள்ளனர். அவர்களுக்கு ஒரே ஒரு ஆசிரியை மட்டுமே உள்ளார்.   எனவே அவரையும் நிர்வாகம் துரத்த பார்க்கிறது.  எனவே கூடுதல் ஆசிரியரை நியமித்து பள்ளியை சிறப்பாக நடத்த வேண்டும் பிள்ளைகள் படிப்பு பாதிக்க கூடாது என்கிறார்கள் பிள்ளைகளின் பெற்றோர்கள்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஆசிரியர் நடத்திய கொடூர சோதனை; அவமானம் தாங்காமல் மாணவி எடுத்த விபரீத முடிவு!

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
A cruel experiment conducted by the teacher to student in karnataka

கர்நாடகா மாநிலம், பாகல்கோட்டை பகுதியில் அரசு பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 8ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர், பள்ளியில் இருந்து கடந்த 16ஆம் தேதி வீடு திரும்பினார். வீடு திரும்பிய அவர், வீட்டில் உள்ளவர்கள் யாரிடமும் பேசாமல் சோகமாக இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதனை தொடர்ந்து, வெளியே சென்ற மாணவியின் பெற்றோர், வீட்டுக்கு வந்து பார்த்த போது, தங்களது மகள் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பாகல்கோட்டை போலீசார், மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். 

அவர்கள் நடத்திய அந்த விசாரணையில், மாணவி படித்த பள்ளியில் ஆங்கில ஆசிரியராக ஜெயஸ்ரீ என்பவர் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில், ஜெயஸ்ரீ வைத்திருந்த பையில் இருந்த ரூ.2,000 பணத்தை காணவில்லை எனக் கூறப்படுகிறது. இதில் சந்தேகமடைந்த ஆசிரியர், 8ஆம் வகுப்பு படிக்கும் அந்த மாணவியை அழைத்து கேட்டுள்ளார். ஆனால், அந்த மாணவி, தான் அந்த பணத்தை எடுக்கவில்லை என்று கூறியுள்ளார். மாணவி உறுதியாக கூறியும் சந்தேகம் அடங்காத ஜெயஸ்ரீ, சக மாணவிகள் முன்னிலையில் மாணவியின் ஆடைகளை களைந்து சோதனை செய்துள்ளார்.

இதில், மன உளைச்சல் அடைந்த மாணவி, பள்ளி முடிந்ததும் மாலை வீடு திரும்பியுள்ளார். மேலும், அவர் சோகம் தாங்காமல் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்பது தெரியவந்தது. இதனையடுத்து, ஆங்கில ஆசிரியர் ஜெயஸ்ரீ மீது வழக்குப்பதிவு செய்து, போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம், அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

கல்வித்துறையில் மற்றொரு சாதனை; தனியார் பள்ளியின் புதிய முயற்சி!

Published on 07/03/2024 | Edited on 07/03/2024
Private school's introduced AI teacher in kerala

உலகம் முழுவதும் செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ) வளர்ச்சி அபரிமிதமாக இருக்கிறது. பெரும்பாலான துறைகளில் தற்போது செயற்கை நுண்ணறிவு தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இது நமது வேலைகளைச் சுலபமாகவும் திறம்படவும் செய்து முடிக்கிறது.

இந்த செயற்கை நுண்ணறிவு வரவால், தகவல் தொழில்நுட்ப உலகில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்பட்டன. குறிப்பாக, மனிதர்கள் தொழில்நுட்பத்தில் செய்யக்கூடிய வேலைகளை, செயற்கை நுண்ணறிவின் மூலம் மிகவும் எளிதாக செய்ய முடியும். மேலும், இது கவிதைகள், கட்டுரைகள் மற்றும் கதைகள் எழுதும் திறன் படைத்தது என்பதுடன் மனிதனைப் போன்று கணினி குறியீடுகளையும் இதனால் எழுத முடியும். இந்த ஏ.ஐ தொழில்நுட்பம் மூலம் கணினி உள்ளிட்ட இயந்திரங்களுக்கு மனிதர்களைப் போன்ற சிந்தனைகளைக் கொடுக்க விஞ்ஞானிகள் முயன்று வருகின்றனர். 

அந்த வகையில், இந்தியாவில் முதல் முறையாக கேரள மாநிலத்தில் உள்ள ஒரு பள்ளியில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட ‘ரோபோ’ ஆசிரியரை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 

கேரளா மாநிலம், திருவனந்தபுரத்தில்  தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு கற்பிக்கும் பணிக்காக ஏ.ஐ மூலம் உருவாக்கப்பட்ட ‘ரோபோ’ ஒன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. ‘ஐரிஸ்’ (IRIS) எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த ரோபோ ஆசிரியர், பள்ளி மாணவர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுப்பதோடு மட்டுமல்லாமல், மாணவர்களின் சந்தேகங்களையும் தீர்த்து வைக்கிறது. 

3 மொழிகளில் பேசவும், மாணவர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கவும் திறன் கொண்ட இந்த ரோபோவின் கால்களுக்கு அடியில் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த சக்கரங்கள் மூலம், ரோபோ ஆசிரியர் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு நகர்ந்து செல்ல முடியும். இந்த ரோபோவை ‘மேக்கர்ஸ் லேப்’ என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.