Skip to main content

ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வு அட்டவணை வெளியீடு!

Published on 21/06/2019 | Edited on 21/06/2019

 

ஆசிரியர்கள் பொது மாறுதல், பணி நிரவல், பதவி உயர்வுக்கான கலந்தாய்வு அட்டவணையை தமிழக பள்ளிக்கல்வித்துறை இன்று (ஜூன் 21, 2019) வெளியிட்டுள்ளது.

ட்


பொது மாறுதல் கலந்தாய்வில் பங்கேற்க விரும்பும் ஆசிரியர்கள் அதற்கான விண்ணப்பங்களை ஜூன் 21 (இன்று) முதல் வரும் 28ம் தேதிக்குள் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.


மாவட்டத்திற்குள் மாறுதல் பெற விரும்பும் வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கான கலந்தாய்வு ஜூலை 8ம் தேதி காலையிலும், மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் பெறும் வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கு அன்று மாலையிலும் கலந்தாய்வு நடக்கிறது. 


ஜூலை 9ம் தேதியன்று காலை, நடுநிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வும், அன்று மாலையில் அவர்களுக்கு பதவி உயர்வு கலந்தாய்வும் நடக்கிறது. 


ஒன்றியத்திற்குள் பணி நிரவல் கோரி விண்ணப்பித்துள்ள பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஜூலை 10ம் தேதி காலையிலும், வருவாய் மாவட்ட அளவில் பணி நிரவல் கோரியவர்களுக்கு அன்று மாலையிலும் கலந்தாய்வு நடக்கிறது. 


பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஒன்றியத்திற்குள்ளான பொது மாறுதல் கலந்தாய்வு ஜூலை 11ம் தேதி காலையிலும், அன்று மாலையில் அவர்களுக்கு பதவி உயர்வு கலந்தாய்வும் நடக்கிறது.


வருவாய் மாவட்டத்திற்குள் இடமாறுதல் பெற விரும்பும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஜூலை 11ம் தேதி மாலையில் கலந்தாய்வு நடக்கிறது.


தொடக்கப்பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு ஜூலை 12ம் தேதி காலையிலும், அவர்களுக்கு பதவி உயர்வு கலந்தாய்வு அன்று மாலையிலும் நடைபெறுகிறது.


ஒன்றியத்திற்குள்ளான பணி நிரவல் கோரும் இடைநிலை ஆசிரியர்களுக்கு ஜூலை 13ம் தேதி காலையிலும், வருவாய் மாவட்டத்திற்குள் மாறுதல் கோரும் இடைநிலை ஆசிரியர்களுக்கு அதே நாளில் மாலையிலும் கலந்தாய்வு நடத்தப்படுகிறது. 


அதேபோல் ஒன்றியத்திற்குள் இடமாறுதல் கோரும் இடைநிலை ஆசிரியர்களுக்கு ஜூலை 14ம் தேதி காலையிலும், வருவாய் மாவட்டத்திற்குள்ளான பொது மாறுதல் கலந்தாய்வு அன்று மாலையிலும் நடக்கிறது. 


மாவட்டம் விட்டு மாவட்டம் இடமாறுதல் கேட்டு விண்ணப்பித்துள்ள பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஜூலை 15ம் தேதி காலையிலும், மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் பெற விரும்பும் இடைநிலை ஆசிரியர்களுக்கு அதே நாளில் மாலையிலும் கலந்தாய்வு நடக்கிறது.

 

ட்


யார் யாருக்கு முன்னுரிமை?:


ஒரே இடத்திற்கு பலர் விண்ணப்பம் செய்திருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு பின்வரும் நிபந்தனைகளின் அடிப்படையில் முன்னுரிமை அளித்து, மாறுதல் அளிக்கலாம். அவையாவன...


1. முற்றிலும் கண்பார்வையற்ற அனைத்து வகை ஆசிரியர்கள்


2. 50 சதவீதம் மற்றும் அதற்கு மேல் ஊனமுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான சான்றிதழ் பெற்றவர்கள்


3. 40 சதவீதம் மற்றும் அதற்கு மேல் ஊனமுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான சான்றிதழ் பெற்றவர்கள்


4. மனவளர்ச்சி குன்றிய, மாற்றுத்திறனாளி குழந்தைகள் உள்ள பெற்றோர் மற்றும் பெற்றோரை இழந்த மனவளர்ச்சி குன்றிய, மாற்றுத்திறன் குழந்தைகளின் சட்ட ரீதியான பாதுகாவலர் ஆசிரியர்களாக இருப்பவர்கள். 


5. சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மற்றும் மூளைக்கட்டி அறுவை சிகிச்சை செய்தவர்கள்.


6. இருதய அறுவை சிகிச்சை, மூளைக்கட்டி அறுவை சிகிச்சை செய்தவர்கள்.


7. கடுமையாக பாதிக்கப்பட்ட புற்றுநோயாளிகள்.


8. ஜூன் 1, 2019ம் தேதி நிலவரப்படி, 5 ஆண்டுகளுக்கு மேல் ஆசிரியர்களாக பணியாற்றும் ராணுவ வீரர்களின் மனைவி.


9. விதவைகள் மற்றும் 40 வயதைக் கடந்த திருமணம் செய்யாத முதிர் கன்னியர்கள்.


10. ஜூன் 1, 2019ம் தேதிப்படி, 5 ஆண்டுகளுக்குக் கீழ் ஆசிரியர்களாக பணியாற்றும் ராணுவ வீரர்களின் மனைவி.


11. கணவன் / மனைவி பணிபுரிபவர்கள் கணவர் பணியாற்றும் இடத்தில் இருந்து மனைவி பணியாற்றும் இடமும் அல்லது மனைவி பணியாற்றும் இடத்தில் இருந்து கணவர் பணியாற்றும் இடமும் 30 கி.மீ. சுற்றளவுக்கும் அதிகமாக இருக்கும்பட்சத்தில் அவர்களை தனித்தனியாக வசிப்பதாகக் கருதி, கணவன் / மனைவி பணிபுரிபவர்கள் என்ற அடிப்படையில் முன்னுரிமை அளிக்கப்படலாம். 


12. ஒரே இடத்தில் குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகள், அதற்கு மேலும் பணியாற்றிய ஆசிரியர்கள்.


இவ்வாறு பள்ளிக்கல்வித்துறை செயலர் பிரதீப் யாதவ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த போர் வீரனின் நடுகல் கண்டுபிடிப்பு!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
17th century warrior headstone Kantipudi

சேலம் மாவட்டம், மாதநாயக்கன்பட்டி பெருந்தலைவர் காமராசர் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் தலைவர் தலைமை ஆசிரியர், பொறுப்பு ஆசிரியர்களாக அன்பரசி, விஜயகுமார் ஆகியோர் உள்ளனர். இப்பள்ளி மாணவர்கள் கொடுத்த தகவலின்படி ஆசிரியர்களும், மாணவர்களும் களப்பயணத்தின் போது வீரனின்  நடுகல்  ஒன்று கண்டறியப்பட்டது.

பொது ஆண்டு 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த நடுகல்லில் எழுத்துகள் எதுவும் இல்லை. கல்பூமியின் மேற்பரப்பில் 2 அடி உயரமும் 1.5  அடி அகலம் கொண்டது. இந்த நடுகல்லை சுற்றி கல்திட்டை போன்ற அமைப்பும் உள்ளது . நடுகல்லில் போர் வீரனின் சிற்பம்  உள்ளது.
வேட்டைக்கு சென்று இறந்ததற்காக எடுக்கப்பட்ட நடுகல்லாக இருக்கலாம். ஆலிடாசனம் நிலையில் வில்லில் நாணில் அம்பு எய்துவது போன்றும், இடுப்பில் குரு வாளும், காதில் பத்ர குண்டலமும்,   கழுத்தில் சரப்பளி, சவுடி, முத்தாரம் அணிகலன் அணிந்திருப்பது  போன்றும் கையில் தோள்வளை  இருப்பது போன்ற உருவமைப்பு உள்ளது.

17th century warrior headstone Kantipudi

இப்பகுதி தாருகாவனத்திற்க்கு அருகில் இருப்பதால்  இந்த வீரன் வேட்டுவ தலைவனாக இருக்கலாம். இந்த நடுகல் எல்லாம் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் வைக்கப்பட்டதாகும்.  தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் சார்பாக தொல்லியல் சார்ந்த வரலாற்று தகவல்களையும், அதனை பற்றிய விழிப்புணர்வையும் இன்றை இளைய தலைமுறை மாணவர்களுக்கு கொண்டு சேர்ப்பது தான் தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் நோக்கமாகும் என்கின்றனர் தொன்மை பாதுகாப்பு மன்ற ஆசிரியர்கள்.

Next Story

'ஐயம் களையப்பட வேண்டும்'- ஆசிரியர் மன்ற மாநில பொதுச்செயலாளர் கோரிக்கை

Published on 14/04/2024 | Edited on 14/04/2024
nn

'மக்களவைத் தேர்தல் பணியில் ஈடுபடும் அனைத்து ஆசிரியர் மற்றும் அரசு அலுவலர்களின் வாக்குரிமை பாதுகாக்கப்படவேண்டும். எனவே அஞ்சல் வாக்கு மற்றும் தேர்தல் பணிச்சான்று கிடைக்கப்பெறாத ஆசிரியர், அரசு அலுவலர்களின் ஐயம் களையப்படவேண்டும்' என தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாநில பொதுச் செயலாளர் மன்றம் நா.சண்முகநாதன் தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அலுவலருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது, 'தமிழ்நாட்டில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் எதிர்வரும் 19.04.2024 அன்று ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இதற்கு மக்களவைத் தேர்தல் பணிகளில் தமிழ்நாட்டின் ஆசிரியர் மற்றும் அரசு அலுவலர்கள் வாக்குச்சாவடி அலுவலர் பொறுப்புகள் பணியமர்த்தப்பட்டு உள்ளனர். இவ்வாறு வாக்குச்சாவடி அலுவலர்களாக பணியமர்த்தப்பட்டுள்ள ஆசிரியர் மற்றும் அரசு அலுவலர்கள் அஞ்சல் வாக்கு(postal vote) உரிமையின் மூலமாகவும் , தேர்தல் பணிச் சான்று(election duty certificate) கிடைக்கப்பெற்று பணியாற்றும் வாக்குச்சாவடிகளில் வாக்கினை செலுத்துவது மூலமாகவும் தங்களது ஜனநாயக கடமையை செவ்வனே ஆற்றி வந்துள்ளனர் என்பது காலம் காலமாக இருந்து வரும் நடைமுறை மரபாகும்.

ஆனால் தற்போதைய மக்களவைத் தேர்தலுக்கான இவ்வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு இதுவரையிலும் மூன்று கட்ட பயிற்சி வகுப்புகள் நடைபெற்று முடிந்துள்ள நிலையிலும் அஞ்சல் வாக்குகள் கோரியவருக்கு அஞ்சல் வாக்குகளும் வழங்கப்படவில்லை.தேர்தல் பணிச்சான்று கோரியவருக்கும் தேர்தல் பணிச்சான்றும் வழங்கப்படவில்லை. மாநிலத்தின் பெரும்பாலான மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்களின் இதற்கு மெத்தனப்போக்கு காரணமாகும்.  வாக்குரிமை பறிப்புக்கு இணையானதாகும் என்று வலுவாகப் பேசப்படுகிறது.

nn

தமிழ்நாட்டின் ஆசிரியர் மற்றும் அரசு அலுவலர்களிடம் பரவலாக பரவி வரும் பேரச்சம் மற்றும் பெரும் ஐயம், மனப்பதற்றம், மனக்கொந்தளிப்பினை அதிகரித்துள்ளது. புதுக்கோட்டை  மாவட்டத்தில் மறியல் போராட்டம் வரை சென்றுள்ளது. நூறு சதவிகிதம் வாக்குப் பதிவினை முதன்மை நோக்கங்களில் ஒன்றாக கொண்டுள்ள தேர்தல் ஆணையத்தின் இலக்கினை நிறைவேற்றும் வகையில் தேர்தல் பணிகளில் பணியமர்த்தப்படும் ஆசிரியர் மற்றும் அரசு அலுவலர்களுக்கு அஞ்சல் வாக்குச்சீட்டும், தேர்தல் பணிசான்றும் உடன் கிடைக்கப் பெறச்செய்து வாக்கு உரிமையை பாதுகாத்துத் தந்திட வேண்டுமாய் தமிழ்நாடு தலைமைத்தேர்தல் அலுவலரிடம் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது' என தெரிவித்துள்ளார்.