Skip to main content

‘டீ பாலிடிக்ஸ்’ சுவையோ சுவை! -லேட்டஸ்ட் வரவு மம்தா பானர்ஜி!

Published on 22/08/2019 | Edited on 22/08/2019

 

டீ, ஏதோ ஒருவிதத்தில் இந்திய அரசியலோடு தொடர்புடையதாகிவிட்டது. பிரதமர் நரேந்திரமோடி சிறு வயதில் குஜராத் – வத்நகர் ரயில் நிலையத்தில் டீ விற்றார். தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் இந்நாள் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம்,  தேனி மாவட்டம் - பெரியகுளத்தில் டீ கடையே நடத்தி வந்தார்.

ம்

 

தமிழக சட்டமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், அவ்வப்போது சாலையோர கடைகளில் டீ குடிப்பதுண்டு. அரசியலில் உச்சம் தொட்டாலும், மக்களிடமிருந்து விலகாமல் இருக்கிறோம்; அவர்களில் ஒருவராகத்தான் வாழ்கிறோம்   என்று சொல்லாமல் சொல்வதற்கு  இந்த  ‘டீ பாலிடிக்ஸ்’  பெரிதும் கை கொடுக்கிறது. இந்த வரிசையில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் இடம் பெற்றிருக்கிறார். 

 

ச்

 

ட்விட்டரில் மம்தா பானர்ஜி பதிவிட்டிருக்கும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதில்,  முதலமைச்சர் என்ற முறையில் திகா என்ற கடற்கரை கிராமத்துக்குச் சென்று திடீர் ஆய்வு நடத்துகிறார்.

           

க்

 

அப்போது, அம்மா ஒருவரிடமிருந்து பெண் குழந்தையைக் கையில் வாங்கி கொஞ்சிப் பேசுகிறார்.   அங்கு கடையில் தொங்கிக்கொண்டிருந்த கேக் பாக்கெட்டைத் தானே பிய்த்தெடுத்து,  அந்தக் குழந்தையிடம் தருகிறார். மம்தா விசிட்டால் அந்தக் கடையே பரபரப்பாகிவிடுகிறது. ஆளாளுக்கு மம்தாவின் நடவடிக்கைகளைத் தங்களது செல்போனில் வீடியோ எடுக்கின்றனர்.  அதனைத் தொடர்ந்து, அந்தக் கடைக்குள் சென்று அவரே டீ தயாரித்து சிறு டம்ளர்களில் ஊற்றி, தட்டில் வைத்து அங்கிருந்தவர்களுக்குக் கொடுக்கிறார். 

 

ட்

 

7 நிமிடங்கள் 38 விநாடிகள் ஓடும் அந்த வீடியோவை டிவிட்டரில் பதிவிட்டு ‘சில நேரங்களில் சின்னதான சந்தோஷங்களே  வாழ்க்கையை மகிழ்ச்சியானதாக ஆக்கிவிடும்.  டீ தயாரிப்பதும், அதனைப் பிறருக்குத் தருவதும் அவற்றில் ஒன்று.’ என்று  குறிப்பிட்டிருக்கிறார் மம்தா பானர்ஜி.  

அ

சாமான்யர்கள் தொடங்கி அரசியல் தலைவர்கள் வரையிலும்,  பாகுபாடின்றி சுவையில் ஆழ்த்தி, உற்சாகம் கொள்ளவும் வைக்கிறது டீ!  


சார்ந்த செய்திகள்

Next Story

தமிழக முதல்வருடன் மேற்குவங்க முதல்வர் மம்தா திடீர் சந்திப்பு

Published on 02/11/2022 | Edited on 02/11/2022

 

West Bengal Chief Minister Mamata has a surprise meeting with Tamil Nadu Chief Minister

 

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி இன்று சந்தித்தார். சென்னையில் உள்ள முதல்வரின் வீட்டில் இந்த சந்திப்பானது நடைபெற்றது. இந்த சந்திப்பிற்குப் பிறகு மேற்குவங்க முதல்வருடன் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ''மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி பலமுறை சென்னைக்கு வந்திருக்கிறார். இன்னும் சிறப்போடு சொல்ல வேண்டும் என்று சொன்னால் கலைஞருடைய திருவருட் சிலையை முரசொலி அலுவலகத்தில் அவர் திறந்து வைத்தது உள்ளபடியே எங்களுக்குப் பெருமையாக இருந்தது. கலைஞரைப் பெருமைப்படுத்தியது. திமுகவை, தமிழகத்தைப் பெருமைப்படுத்தியது. மேற்கு வங்க கவர்னராக இருக்கக்கூடிய இல.கணேசன் வீட்டில் நடைபெறக்கூடிய நிகழ்ச்சிக்கு சென்னைக்கு வந்திருக்கும் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி என்னுடைய இல்லத்திற்கும் வந்து என்னை சந்தித்துள்ளார். அதே சமயம் நீங்கள் மேற்கு வங்கத்திற்கு விருந்தினராக வரவேண்டும் என அழைத்திருக்கிறார்கள். அந்த அழைப்பை நானும் ஏற்றுக் கொண்டேன்'' என்றார்.

 

அப்பொழுது 'நாடாளுமன்றத் தேர்தல் பணிகளை திமுக தொடங்கி இருக்கிறது...' என செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்ப முயன்ற நிலையில் குறுக்கிட்ட முதல்வர், '' இது மரியாதை நிமித்தமான சந்திப்பு தான் தேர்தல் சந்திப்பு அல்ல. அவரே இதைச் சொல்வார்” என்றார்.
 

 

 

Next Story

“இடம், நாள், நேரத்தை நீங்களே முடிவு செய்யுங்கள். நான் வருகிறேன்” - பாஜக தலைவர்களுக்கு சவால் விடுத்த அபிஷேக் பானர்ஜி!

Published on 06/09/2021 | Edited on 06/09/2021

 

Abhishek Banerjee challenges BJP leaders

 

மேற்கு வங்காளத்தில் நடந்த நிலக்கரி சுரங்க முறைகேடு தொடர்பாக சி.பி.ஐ.யும், அமலாக்கத்துறையும் வழக்குப் பதிவு செய்துள்ளன. இந்த வழக்கில் முதல் மந்திரி மம்தா பானர்ஜியின் சகோதரர் மகனும், திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவருமான அபிஷேக் பானர்ஜி எம்.பி.க்கு தொடர்பு இருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது. அதனால் டெல்லியில் ஆஜராகுமாறு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. டெல்லி செல்வதற்காக கொல்கத்தா விமான நிலையம் வந்த அவர், நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, “நான் எந்த வகையான விசாரணையையும் சந்திக்கத் தயார்.

 

இது கொல்கத்தா வழக்காக இருந்தாலும், டெல்லி வரவழைத்துள்ளனர். மேற்கு வங்காள சட்டசபை தேர்தலில் தோற்றுவிட்டதால், பா.ஜனதா பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. விசாரணை அமைப்புகளைத் தனது அரசியல் ஆதாயத்துக்குப் பயன்படுத்துவதைத் தவிர பா.ஜனதாவுக்கு வேறு வேலை இல்லை. நான் கடந்த நவம்பர் மாதம், பொதுக்கூட்டங்களில் சொன்னதையே மறுபடியும் சொல்கிறேன். நான் 10 காசு சட்டவிரோத பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக எந்த மத்திய அமைப்பாவது நிரூபித்தால் சி.பி.ஐ.யோ, அமாலாக்கத்துறையோ விசாரணை நடத்தவே தேவையில்லை.

 

நானே மேடை மீது ஏறி, பகிரங்கமாக தூக்கில் தொங்குவேன். நான் பா.ஜனதா தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கிறேன். கடந்த 5 ஆண்டுகளில் விசாரணை அமைப்புகள் என்ன சாதித்தன என்பது பற்றியோ, மோடி ஆட்சியில் நாட்டின் கதி பற்றியோ என்னுடன் விவாதிக்க வரத்தயாரா? இடம், நாள், நேரத்தை நீங்களே முடிவு செய்யுங்கள். நான் வருகிறேன். விவாதத்தில் பா.ஜனதாவை தோற்கடிக்காவிட்டால், அதன் பிறகு நான் அரசியலில் கால் பதிக்கமாட்டேன்” என அவர் கூறினார்.