Advertisment

தமிழகத்தில் 2 நாட்களுக்கு டாஸ்மாக் மூடல்!

hjk

Advertisment

தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு டாஸ்மாக் மூடப்படும் என்று டாஸ்மாக் மேலாண் இயக்குநர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் முக்கிய தலைவர்களின் பிறந்த தினம் மற்றும் குறிப்பிட்ட பண்டிகைகளின் போது தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் வழக்கமாக மூடப்படும். அந்த வகையில் வரும் அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்தி அன்றும், 17ம் தேதி மிலாடி நபி அன்றும் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருக்கும் என்று தற்போது அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இதனால் மது பிரியர்கள் விடுமுறை தினத்தின் முந்தைய தினம் கடைகளில் குவிய வேண்டாம் என்றும், அது கரோனா தொற்றுக்கு வழிவகுக்கும் என்றும் அரசு தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும், விடுமுறை தினத்தில் கள்ளச் சந்தையில் விற்பனை செய்வதற்காக யாரேனும் அதிகப்படியாக மது வாங்கினால் அவர்கள் கண்காணிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மதுக்கடைகளில் விடுமுறை தினத்துக்கு முந்தைய தினம் காவல்துறையினர் பகல் நேரங்களில் ரோந்து செல்வார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.

TASMAC
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe