Skip to main content

டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம்... பெண்கள் உள்பட 20 பேர் கைது...

Published on 18/05/2020 | Edited on 18/05/2020

 

madurai


மதுரை ஆரப்பாளையம் பகுதியில் மதுபானக் கடை திறப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பொதுமக்கள் முற்றுகைப் போராட்டம் நடத்தினர். இதனால் பெண்கள் உட்பட 20 பேர் கைது செய்யப்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
 


தமிழகம் முழுவதும் கரோனா தொற்று வேகமாகப் பரவி வருகிறது. இதைக் கட்டுப்படுத்த தமிழக அரசும் மத்திய அரசும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். 50 நாட்களுக்கும் மேலாக ஊரடங்கு உத்தரவு நீடித்து வருகிறது. நீதிமன்றம் உத்தரவுபடி தமிழகம் முழுவதும் மதுபானக் கடையில் திறக்கப்பட்டன. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பொதுமக்கள் போராடி வருகின்றனர்.
 

இந்த நிலையில் மதுரை ஆரப்பாளையம் பொன்நகர் பகுதியில் உள்ள மதுபானக் கடையை அப்பகுதி பொதுமக்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்கள் மதுபானக் கடையை முற்றுகையிட்டு இனிமேல் இப்பகுதியில் மதுபானக்கடை திறக்கக் கூடாது என்று கடை முன் அமர்ந்து கடையைத் திறக்க விடமால் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். மதுக்கடைக்கு எதிரான முழக்கங்களை எழுப்பினர். 
 


அவர்களை கரிமேடு காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தைக் கைவிடுமாறு அறிவுறுத்தினர். அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து மீண்டும் மதுக்கடைக்கு எதிரான முழக்கங்களை எழுப்பினர் இதனால் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உட்பட 20க்கும் மேற்பட்டோரைக் குண்டு கட்டாகத் தூக்கி, கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. 
 

போராட்டத்தில் ஈடுபட்ட ராஜேஸ்வரி, ''இந்தப் பகுதியில் மதுக்கடை இருப்பதால் பொதுமக்களுக்குப் பல்வேறு இடையூறுகள் ஏற்படுகிறது. இந்தக் கடையை அப்புறப்படுத்துவதற்கான வேலையை இந்த அரசு இதுவரைக்கும் செய்யவில்லை. கரோனா கால நேரத்தில் இந்தக் கடையைத் தமிழக அரசு திறந்துள்ளது. இந்தக் கடையைச் சுற்றி வீடுகள் இருக்கிறது. குடித்துவிட்டு இங்குள்ள வீடுகள் முன்பு உட்காருவது மது அருந்துவது, பாட்டிலை உடைத்துப்போடுவது, வாந்தி எடுப்பது, யூரின் போவது, ஸ்நாக்ஸ் சாப்பிடும் பேப்பர், குடிப்பதற்குப் பயன்படுத்தும் டம்பளர்களை அங்கேயே விட்டுவிட்டு போவது. இந்தப் பகுதி மக்கள் காலையில் எழுந்தவுடன் இதனைச் சுத்தப்படுத்துவது கஷ்டமாக இருப்பதாக வருத்தப்படுகிறார்கள். மாலை 5 மணிக்கு மேல் இந்தப் பகுதியில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை. இந்தப் பகுதியில் 'மங்கையர்கரசி பெண்கள் மேல்நிலைப்பள்ளி' இருக்கிறது. இன்னும் இரண்டு பள்ளிகள் இருக்கிறது. சர்ச் இருக்கிறது. இந்த டாஸ்மாக் கடையால் பள்ளி, கல்லூரி செல்பவர்கள், வழிபாட்டுத்தலங்களுக்குச் செல்வோர், குடியிருப்பு வாசிகளுக்கு பெரிய பாதிப்பாக இருக்கிறது. ஆகையால் இந்த டாஸ்மாக் கடையை நிரந்தரமாக மூட வேண்டும்'' என்றார். 
 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கள்ளழகர் திருவிழாவில் நிகழ்ந்த சோகம்; போலீசார் தீவிர விசாரணை!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Tragedy at the Kalalhagar festival Police serious investigation

உலகப்புகழ் பெற்ற மதுரை சித்திரை விழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு பெரும் விமரிசையாக ஆண்டு தோறும் நடைபெற்று வருகிறது. இதனை லட்சக்கணக்கான மக்கள், பக்தர்கள் நேரில் கண்டு களிப்பர்.  தங்கக் குதிரையில் கம்பீரமாக வலம் வரும் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த சித்திரை விழாவின் ஒரு பகுதியான மீனாட்சி - சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நேற்று முன்தினம் (21.04.2024)  நடைபெற்றது. அதாவது சித்திரைத் திருவிழாவின் 10ஆம் நாளில் முக்கிய நிகழ்வான மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் திரளான பக்தர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து மீனாட்சி - சுந்தரேஸ்வரர் தேரோட்டம் நேற்று (22.04.224) கோலாகலமாகத் தொடங்கியது. இதனையொட்டி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரை  உற்சாகத்துடன் வடம் பிடித்து இழுத்து பரவசம் அடைந்தனர். இதற்காக அதிகாலை முதல் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்த வண்ணம் இருந்தனர். அதே சமயம் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வுக்காக கள்ளழகர் மதுரை வந்தடைந்தார். கள்ளழகர் உடன் பாரம்பரியமாகக் கொண்டு வரப்படுகின்ற அழகர் கோயிலின் உண்டியல்கள் 3 மாட்டு வண்டிகளில் எடுத்து வரப்பட்டது.

இதனையடுத்து மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வு இன்று (23.04.2024) நடைபெற்றது. கள்ளழகரை தரிசிக்க ஆயிரக்கணக்கான மக்கள் வைகை ஆற்றில் குவிந்தனர். இதனையடுத்து பச்சைப் பட்டு உடுத்தி தங்கக் குதிரையில் கள்ளழகர் வைகை ஆற்றின் கரைக்கு வருகை புரிந்தார். கள்ளழகர் வைகையாற்றில் இறங்குவதற்கு முன்பு ஆற்றங்கரையில் மாலை அணிவித்து அழகருக்கு மரியாதை செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து பக்தர்களின் கோஷம் விண்ணை முட்ட, தங்கக்குதிரையில் பச்சைப்பட்டு உடுத்தி வைகையாற்றில் கள்ளழகர் இறங்கினார். 

Tragedy at the Kalalhagar festival Police serious investigation

இந்நிலையில் மதுரை சித்திரை திருவிழாவில் இளைஞர்கள் பட்டாக்கத்தியுடன் மோதிக்கொண்டதில் ஒருவர் கொலை செய்யப்பட்டார். சித்திரைத் திருவிழா நடந்த மதுரை மாவட்டம் ஆழ்வார்புரம் பகுதியில் ஏற்பட்ட மோதலில் கத்தியால் ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டனர். இதில் ஆழ்வார்புரத்தைச் சேர்ந்த கார்த்திக் மற்றும் சிவகங்கையைச் சேர்ந்த சோனையை மர்ம நபர்கள் கத்தியால் குத்தினர். இதனையடுத்து மருத்துவமனையில்  சிகிச்சை பெற்று வந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலை சம்பவம் குறித்து மதுரை மாநகர போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். 

Next Story

மதுரை வைகை ஆற்றில் எழுந்தருளினார் கள்ளழகர்! 

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Madurai Vaigai River woke up Kallazhakar

உலகப்புகழ் பெற்ற மதுரை சித்திரை விழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு பெரும் விமரிசையாக ஆண்டு தோறும் நடைபெற்று வருகிறது. இதனை லட்சக்கணக்கான மக்கள், பக்தர்கள் நேரில் கண்டு களிப்பர். தகதகக்கும் தங்கக் குதிரையில் கம்பீரமாக வலம்வரும் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் மிகவும் பிரசித்தி பெற்றது.

இந்த சித்திரை விழாவின் ஒரு பகுதியான மீனாட்சி - சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நேற்று முன்தினம் (21.04.2024)  நடைபெற்றது. அதாவது சித்திரைத் திருவிழாவின் 10ஆம் நாளில் முக்கிய நிகழ்வான மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் திரளான பக்தர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மீனாட்சி - சுந்தரேஸ்வரர் தேரோட்டம் நேற்று (22.04.224) கோலாகலமாகத் தொடங்கியது. இதனையொட்டி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரை  உற்சாகத்துடன் வடம் பிடித்து இழுத்து பரவசம் அடைந்தனர். இதற்காக அதிகாலை முதல் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்த வண்ணம் இருந்தனர். அதே சமயம் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வுக்காக கள்ளழகர் மதுரை வந்தடைந்தார். கள்ளழகர் உடன் பாரம்பரியமாகக் கொண்டு வரப்படுகின்ற அழகர் கோயிலின் உண்டியல்கள் 3 மாட்டு வண்டிகளில் எடுத்து வரப்பட்டது.

இந்நிலையில் மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்வு இன்று (23.04.2024) நடைபெற்றது. கள்ளழகரை தரிசிக்க ஆயிரக்கணக்கான மக்கள் வைகை ஆற்றில் குவிந்தனர். இதனையடுத்து பச்சைப் பட்டு உடுத்தி தங்கக் குதிரையில் கள்ளழகர் வைகை ஆற்றின் கரைக்கு வருகை புரிந்தார். கள்ளழகர் வைகையாற்றில் இறங்குவதற்கு முன்பு ஆற்றங்கரையில் மாலை அணிவித்து அகழருக்கு மரியாதை செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து பக்தர்களின் கோஷம் விண்ணை முட்ட, தங்கக்குதிரையில் பச்சைப்பட்டு உடுத்தி வைகையாற்றில் கள்ளழகர் இறங்கினார். கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்வைக் காண சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக்கிளை நீதிபதிகள் ஆர். சுரேஷ்குமார், புகழேந்தி, ஆதி கேசவலு மற்றும் அருள் முருகன் உள்ளிட்டோர் வருகை புரிந்திருந்தது குறிப்பிடத்தக்கது.