Skip to main content

வீடுகளுக்கு நடுவில் டாஸ்மாக் கடை... பெண்கள் போராட்டம்!

Published on 17/09/2019 | Edited on 17/09/2019

தேசிய நெடுஞ்சாலைகளையொட்டி இருந்த டாஸ்மாக் கடைகளை உச்சநீதிமன்றம் உத்தரவையடுத்து அந்த கடைகள் மாற்றப்பட்டது. இதனால் தமிழகத்தில் பெரும்பாலான கடைகள் மூடப்பட்டன. இதனால் அடுத்தடுத்து இருந்த கடைகள் மூடப்பட்டதால் குடிமகன்கள் பெரும் அவதிப்பட்டன. இதனால் பல்வேறு ஊர்களில் குடிமகன்கள் பல கி.மீ தூரத்திற்கு சென்று மது குடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் பூட்டப்பட்ட அந்த கடைகளை மாற்று இடங்களில் திறக்க தமிழக அரசும் டாஸ்மாக் நிர்வாகமும் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக குடியிருப்புகள், பள்ளி கல்லூரிகள், வழிப்பாட்டு தலங்கள் உள்ள இடங்கள் இருந்தாலும், அதைப்பற்றி கவலைப்படாமல் டாஸ்மாக் கடைகளை திறக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதற்கு பொதுமக்கள் தரப்பில் இருந்து கடுமையான எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.

tasmac issue womens strike nagercoil district


அதன் தொடர்ச்சியாக நாகர்கோவில் கோட்டார் செட்டித்தெருவில் தனியார் கட்டிடத்தில் டாஸ்மாக் கடை திறக்க அதிகாரிகள் அனுமதி அளித்ததால், அங்கு கடை திறக்க ஊழியர்கள் நடவடிக்கை எடுத்தனர். அந்த கடை திறக்க இருந்த பகுதி நெருக்கமான குடியிருப்புகளும், கல்வி நிலையங்களும் உள்ள பகுதி என்பதாலும், டாஸ்மாக் கடையை கடந்து தான் செல்ல வேண்டியிருக்கும். இதனால் அங்குள்ள மக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் கடை திறக்ககூடாது என்று மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து மனுவும் கொடுத்துள்ளனர். ஆனால் ஆட்சியர் அதை கொஞ்சமும் பொருட்படுத்தால் கடையை திறக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த பெண்கள் கடை முன் திரண்டு கடையை திறக்க விடாமல் தடுத்தனர்.
 

இதன் காரணமாக அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் குவிக்கப்பட்டு, கடையை முற்றுகையிட்ட பெண்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் அந்த பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இது குறித்து பெண்கள் கூறுகையில், டாஸ்மாக் கடை திறந்தால் போதை ஆசாமிகளால் குடியிருப்புகளுக்கு இடையூறு ஏற்படுவதுடன் பெண்களுக்கும் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கும் பாதுகாப்பு கேள்வி குறியாகிவிடும் என்றனர். இதற்கிடையே மது பானத்தை ஏற்றி வந்த டெம்போவை போலீசார் திருப்பி அனுப்பினார்கள். இதனால் டாஸ்மாக் கடைக்கு வந்த ஊழியர்கள் ஏமாற்றத்துடன் சென்றனர்.
 

சார்ந்த செய்திகள்

Next Story

பெற்றோர் உதவியுடன் மாணவியை கடத்தி பாலியல் வன்கொடுமை; வெளியான அதிர்ச்சி தகவல்!

Published on 08/03/2024 | Edited on 08/03/2024
Misbehaviour of student with the help of parents in nagercoil

நாகர்கோவில் மாவட்டம் கீரிப்பாறை அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் 12ஆம் வகுப்பு மாணவி. இவர், தனது குடும்பத்துடன் பூதப்பாண்டி பகுதியில் தங்கி இருந்து பள்ளியில் படித்து வருகிறார். இந்த நிலையில், கடந்த பிப்ரவரி 19ஆம் தேதி பள்ளி மாணவி, மாலை நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதில் சந்தேகமடைந்த மாணவியின் பெற்றோர் பூதப்பாண்டி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

அந்த புகாரின் பேரில், பூதப்பாண்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அந்த விசாரணையில், அந்த மாணவி சில மாதங்களுக்கு முன்பு பள்ளி விடுமுறைக்காக கீரிப்பாறை பகுதியில் உள்ள தனது பாட்டி வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கே, ஆரல்வாய்மொழி பாரதிநகர் பகுதியைச் சேர்ந்த தொழிலாளி பிரகாஷ் (23) என்பவரின் பாட்டி வீடு, மாணவியின் பாட்டி வீடு அருகே உள்ளது. அந்த வகையில், பிரகாஷும், தனது பாட்டி வீட்டுக்கு சென்றுள்ளார். 

பக்கத்து வீடு என்பதால், மாணவிக்கும் பிரகாஷுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இவர்களது பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இந்த நிலையில், சம்பவம் நடந்த அன்று பிரகாஷ் தனது பெற்றோர் உதவியுடன் மாணவியை கடத்தி திருப்பூர் அழைத்துச் சென்றுள்ளார். மேலும் அவர், அங்கு தனியாக வீடு எடுத்து, மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனையடுத்து, மாணவி மாயமான வழக்கில் பிரகாஷ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு பிரகாஷை தேடி வருவதை அறிந்த பிரகாஷின் பெற்றோர், திருப்பூர் மாவட்டத்திற்கு சென்று மாணவியை அழைத்து வந்துள்ளனர். மேலும் அவர்கள், நேற்று முன் தினம் (06-03-24) மாணவியை பூதப்பாண்டி அருகே உள்ள கிராமத்தில் மாணவியின் வீட்டு முன்பு விட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். இந்த வழக்கில் பிரகாஷும் தலைமறைவாகி விட்டார் என்பது தெரியவந்தது.

இதற்கிடையே, மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து தலைமறைவாகியுள்ள பிரகாஷை பற்றி போலீசார் மேற்கொண்ட கூடுதல் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் கிடைத்தது. அதில், கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன்பு, பிரகாஷுக்கும், திருமணமான பெண் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் திருமணத்தை மீறிய காதலாக மாறியுள்ளது.

இதனையடுத்து, அந்த பெண்ணை, அவரது குழந்தையுடன் அழைத்துக் கொண்டு ஆரல்வாய்மொழி பகுதியில் வீடு எடுத்து குடும்பம் நடத்தி வந்துள்ளார். அப்போது, பிரகாஷ், அந்த பெண்ணை கொடுமை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதை தாங்காமல், அந்த இளம்பெண் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. மேலும், பிரகாஷ் இது போல் பல பெண்களை கடத்தி வந்து திருமணம் செய்யாமலேயே குடும்பம் நடத்தி அவர்களை கொடுமை செய்து துரத்தி விடுவதை வழக்கமாக கொண்டுள்ளார் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில், தலைமறைவான பிரகாஷை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Next Story

மாட்டின் தலையை வைத்து ரயிலைக் கவிழ்க்க சதி? போலீசார் விசாரணை

Published on 21/02/2024 | Edited on 21/02/2024
Conspiracy to overturn a train with a cow's head in nagercoil

காந்திதாம் சந்திப்பில் இருந்து திருநெல்வேலி சந்திப்பு வரை செல்லும் காந்திதாம் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று (20-02-24) இரவு நாகர்கோவில் மாவட்டம் அருகே பார்வதிபுரம் பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது, அந்த ரயில் திடீரென கற்களின் மீதி மோதியதால் பலத்த சத்தம் கேட்டுள்ளது. இதில் பதற்றமடைந்த ரயில் ஓட்டுநர், ரயிலை நிறுத்தி, கீழே இறங்கி சென்று பார்த்தார். அப்போது, தண்டவாளத்தில் கற்கள் மற்றும் இறந்த மாட்டின் மண்டை ஓடு இருந்தது தெரியவந்தது.

உடனடியாக, ரயில் ஓட்டுநர் இந்த சம்பவம் குறித்து நாகர்கோவில் சந்திப்பு ரயில்வே போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்து விரைந்து வந்த ரயில்வே போலீசார், அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.