Skip to main content

மது வாங்க வரிசையில் நின்றவருக்குக் கரோனா... அச்சத்தில் கூட்டத்திலிருந்த குடிமகன்கள்!

Published on 10/05/2020 | Edited on 10/05/2020
tasmac


 

tasmac333



மே. 7 மதுக்கடைகள் திறக்கப்பட்டதால் 40 நாட்களுக்குப் பின்பு மதுக்கடைகளில் பாட்டல்கள் வாங்குவதற்காக முண்டியடித்த கூட்டத்திலிருந்தவருக்குக் கரோனா தொற்று உறுதியானதால் அவரோடு கூட்டத்தில் இருந்த குடிமகன்கள் அச்சத்திலிருக்கின்றனர்.
 

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் தலுகாவிற்குட்பட்ட சேர்ந்தமரம் கள்ளம்புளி ரோடு கிராமத்தைச் சேர்ந்த 35 வயது நபர் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் லோடு மேன் வேலையிலிருந்தார். கரோனா தொற்று காரணமாக கோயம்பேடு மார்க்கெட் மூடப்பட்டதால் தனது சொந்த கிராமத்திற்குத் திரும்பியவர் 4 லாரிகளில் மாறி மாறிப் பயணம் செய்து சங்கரன்கோவில் வந்தவர், பின்பு அங்கிருந்து நடந்தே கடந்த 6ம் தேதியன்று சேர்ந்தமரம் வந்து சேர்ந்திருக்கிறார். வந்தவர் நண்பர்கள் உறவினர்களுடன் தொடர்பிலிருக்க தகவல் போய் தென்காசி சுகாதாரத்துறையினர் 7ம் தேதி காலை அவரது சளி, ரத்த மாதிரி எடுத்து அவரைத் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தி அனுப்பினர்.

 

 

ஆனால் அவர் அதனைப் புறக்கணித்துவிட்டு ஊரணித் தெருவைச் சேர்ந்த தனது நண்பர்களுடன் அந்தப் பகுதியின் டாஸ்மாக் கடைக்குச் சென்று முண்டியடித்து 500 ரூபாய் நோட்டு மூன்றை மாற்றி பாட்டல்கள் வாங்கி அருந்தியுள்ளார். இந்த நிலையில் அவருக்குக் கரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டதால் சுகாதாரத் துறையினர் அவரை ஆம்புலன்சில் தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கரோனா சிறப்பு வார்டில் அனுமதித்தனர். 
 

அவரது வீடு மற்றும் சுற்றுப்பகுதிகள் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டது. மேலும் பாதிக்கப்பட்டவரின் சகோதரரும் அவரிடம் பணம் வாங்கி அங்குள்ள மளிகைக் கடையில் பொருட்கள் வாங்கியது தெரியவர, அந்தப் பகுதி காவல் துறையினரால் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டது. சேர்ந்தமரத்தின் நான்கு எல்லைகளும் மூடி சீல் வைக்கப்பட்டன. கோயம்பேட்டிலிருந்து கரோனாத் தொற்றுடன் சேர்ந்தமரம் வந்தவருக்கு தொற்று உறுதியானதால் டாஸ்மாக் பாட்டல் வாங்க அவரோடு வரிசையில் கூட்டமாக முண்டியடித்த குடிமகன்கள் மத்தியில் பீதி பரவியிருக்கிறது. அவருடன் தொடர்பிலிருந்த 20 பேர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

3 நாள்கள் விடுமுறை; மதுக்கடைகளில் குவிந்த மதுப்பிரியர்கள்!

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
Drinkers gathered in bars for holiday due to election

மக்களவைத் தேர்தலையொட்டி 3 நாள்கள் விடுமுறை அளிக்கப்பட்டதையொட்டி செவ்வாய்க்கிழமை (16-04-24) இரவு மதுக்கடையில் மதுப்பிரியர்களின் கூட்டம் அதிகமாகக் காணப்பட்டது.

மக்களவைத் தேர்தலையொட்டி தமிழகத்தில் ஏப்ரல் 17, 18, 19 ஆகிய 3 நாட்கள் அரசு (டாஸ்மாக்) மதுக்கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி டாஸ்மாக் கடையுடன் இணைந்து செயல்படும் மதுக்கூடங்கள், ஏப்ரல் 2 முதல் எப்ரல் 11 வரை (ஏப்ரல் 6 நீங்கலாக) அனைத்து மதுக்கூடங்களும் மூடப்படும். இந்த 3 நாள்களில் மதுபானங்களை விற்பனை செய்தாலோ அல்லது வேறு இடங்களுக்கு மதுபாட்டில்களை கொண்டு சென்றாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்த நிலையில், நேற்று (16-04-24) இரவுடன் மதுக்கடைகள் 3 நாள்களுக்கு மூடப்படும் என்பதால், திருச்சியில் மதுப்பிரியர்கள் தங்கள் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளில் குவிந்தனர். ஏராளமானோர் கடைகளை முற்றுகையிட்டு 3 நாள்களுக்குத் தேவையான மதுவகைகளை வாங்கிச்சென்றனர். இதனால் அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் கூட்டம் நிரம்பி வழிந்தது.

Next Story

மக்களவைத் தேர்தல்; மதுப்பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி!

Published on 08/04/2024 | Edited on 08/04/2024
Lok Sabha elections; Orders to close liquor shops!

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. 

அதில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளுக்கும் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்த நிலையில், மக்களவைத் தேர்தலை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளை மூட டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இது குறித்து டாஸ்மாக் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளுக்கும் ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் நடைபெறவிருக்கிறது. 

இந்த நாடாளுமன்றத் தேர்தலை ஒட்டி ஏப்ரல் 17,18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இது குறித்த சுற்றறிக்கை, அனைத்து மண்டல மேலாளர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வாக்கு எண்ணிக்கை நாளான ஜூன் 4ஆம் தேதியும் மதுக்கடைகளை மூட டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.