Skip to main content

காய்கறி பெட்டிக்குள் ஹான்ஸ்! டாஸ்மாக் குடோனை உடைத்து மதுபாட்டில்கள் கொள்ளை! 

Published on 19/04/2020 | Edited on 20/04/2020

 

கடலூர் மாவட்டம் மங்கலம்பேட்டை காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ராஜதாமரை பாண்டியன் தலைமையிலான போலீசார் நேற்று பில்லூர் சோதனை சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது விருத்தாசலத்தில் இருந்து உளுந்தூர்பேட்டை நோக்கி வந்த ஒரு டெம்போ வேனை வழிமறித்து சோதனை செய்தனர்.  அப்போது ஓட்டுனரிடம் 'என்ன ஏற்றி வருகிறீர்கள்?' என்று கேட்டதற்கு, 'காய்கறிகள் மற்றும் கறிவேப்பிலை போன்றவற்றை ஏற்றி வருவதாக அவர் கூறினார்.  அதில் சந்தேகமடைந்த போலீசார் காய்கறிகளை சோதனை செய்தனர். 

 

Cuddalore



காய்கறி பெட்டிக்குள் ஹான்ஸ் மற்றும் குட்கா பாக்கெட்டுகள் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதையடுத்து டெம்போவில் வந்தவரை பிடித்து விசாரணை செய்ததில் அவர் விழுப்புரம் அண்ணாமலை நகரைச சேர்ந்த மாரியப்பன் (43) என்பது தெரிய வந்தது.  அவரை கைது செய்த போலீசார்  7000 ரூபாய்  மதிப்புடைய  நான்கு மூட்டை ஹான்ஸ் பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். மேலும் மாரியப்பனிடம் விசாரணை செய்ததில் அவர் விருத்தாசலம் பகுதியில் உள்ள ஒரு தனியார் கடையில் ஹான்ஸ் பாக்கெட்டுகளை வாங்கி கடத்தி சென்றது தெரிய வந்தது. 

 

Cuddalore


அதனைத் தொடர்ந்து விருத்தாசலம் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் அந்த கடையில் சோதனை செய்தனர். அங்கு 16 ஆயிரம் மதிப்புள்ள ஹான்ஸ் மற்றும் குட்கா பாக்கெட்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதையடுத்து கடையின் உரிமையாளர் அக்பர்(73),  பஜார் தெருவை சேர்ந்த மங்காராம்(26),  பனாராம்(29),  கணேஷ்ராம்(20) ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Cuddalore


இதேபோல் கரோனா தடுப்பு நடவடிக்கையாக புதுச்சேரியில் உள்ள மதுபான கடைகள்,  மதுபானக் குடிப்பகங்கள்,  குடோன்கள் அனைத்தும் மூடி 'சீல்' வைக்கப்பட்டுள்ளன.  இந்நிலையில் விதிகளை மீறி திறந்த 25-க்கும் மேற்பட்ட கடைகளின் உரிமத்தை கலால்துறை ரத்து செய்துள்ளது. மேலும் மதுபான விற்பனையில் ஈடுபட்ட 30 பேரை போலீசார்  கைது செய்துள்ளனர். இதனிடையே புதுச்சேரி மறைமலை அடிகள் சாலையில் தாவரவியல் பூங்கா அருகில் மதுபாட்டில்கள் அடைத்து  வைக்கப்பட்டிருந்த மதுபான குடோனை நேற்று அதிகாலை மர்மநபர்கள்  உடைத்து உள்ளே புகுந்து பெட்டி பெட்டியாக மது பாட்டில்களை தூக்கி சென்றுள்ளனர். அத்துடன்  குடோனுக்கு அருகில் உள்ள ஒரு மரத்தடியில் 6 மதுபான பெட்டிகளையும்,  ஆங்காங்கே மறைத்து வைக்கப்பட்ட நிலைய இருந்தது.
 

 இதை பார்த்த கடை  உரிமையாளரான ராம்மூர்த்தி அதிர்ச்சி அடைந்து ஓதியன்சாலை காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். அதையடுத்து ஐ.ஜி சுரேந்தர் சிங்,  சீனியர் எஸ்பி அகர்வால், எஸ்.பி  இரவிக்குமார், இன்ஸ்பெக்டர் வெற்றிவேல் தலைமையிலான போலீசார் கொள்ளை நடந்த பகுதியை  பார்வையிட்டனர்.  கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன.. மதுபான குடோனில் அனைத்து பகுதியிலும் சோதனை நடத்தப்பட்டது.  மேலும் மதுபான குடோனில் ஏழு சி.சி.டி.வி கேமராக்கள் உள்ள நிலையில் கேமராக்களை அதிகாரிகள் ஆய்வு செய்த போது இரண்டு மர்ம ஆசாமிகள் முகக் கவசம் அணிந்த நிலையில் குடோனுக்குள் நுழைந்து மதுபான பெட்டிகளை ஒவ்வொரு அறையாக சென்று கொள்ளையடித்து செல்லும் காட்சி பதிவாகியிருந்தது.  அவர்களை அடையாளம் கொண்ட சிறப்பு அதிரடிப்படை போலீசார் கண்டக்டர் தோட்டத்தை சேர்ந்த ஜெயமூர்த்தி(எ)கபாலி(22)      சந்துரு(23) ஆகிய இரண்டு பேரையும் மடக்கி அவர்களிடமிருந்து 555 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.