கரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருக்க ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. இதனால் டாஸ்மாக் கடைகளும் தமிழகத்தில் பூட்டப்பட்டுள்ளது. இந்த நிலையில், கோவையில் கள்ளத்தனமாக மது விற்பனை நடந்து கொண்டிருக்கிறது. போதுமான சாட்சிகள் இல்லாததால் யாரையும் பிடிக்க முடியவில்லை என்று போலீசார் கூறி வந்தனர்.
இந்த நிலையில், கோவை மாவட்டம், கணியூரில் கள்ளத்தனமாக மது விற்பனையில் ஈடுபட்ட கருப்பசாமி என்பவர் கைது செய்யப்பட்டார்.அந்த கருப்பசாமியிடமிருந்து 150 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்தனர்கோவை மாவட்ட மதுவிலக்கு போலீசார்.