Skip to main content

டாஸ்மாக் கடையில் கொள்ளை முயற்சி... போலீசார் மீது தாக்குதல்!

Published on 16/03/2022 | Edited on 16/03/2022

 

tasmac shop

                                                                       கோப்புப்படம்

டாஸ்மாக் கடை கொள்ளையைத் தடுத்து நிறுத்த முயன்ற போலீசார் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே கீழவலத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் பூட்டை உடைத்து கொள்ளையடிக்க 5 பேர் கொண்ட மர்ம கும்பல் முயன்றுள்ளது. இதனை ரோந்து பணியில் இருந்த காவலர்கள் தடுக்க முயன்றுள்ளனர். இதில் காவலர்களை அந்த மர்ம கும்பல் தாக்க முயன்றது. இந்த சம்பவத்தில் காவலர்கள் ராஜேஷ், சதீஷ் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். 

 

அதன்பிறகு அவ்விடத்தை விட்டு அந்த நபர்கள் ஓட்டம் பிடித்த நிலையில், கொள்ளையர்கள் விட்டுச் சென்ற இரண்டு இருசக்கர வாகனங்களை போலீசார் கைப்பற்றினர். அந்த இரு சக்கர வாகனங்களைக் கொண்டு டாஸ்மாக்கில் கொள்ளையடிக்க முயன்ற நபர்கள் குறித்து போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர் போலீசார்.

 

 

சார்ந்த செய்திகள்