Skip to main content

கள்ளக்குறிச்சி: டாஸ்மாக் கடை பூட்டை உடைத்து கொள்ளை!!!

Published on 01/08/2020 | Edited on 01/08/2020
Tasmac

 

கள்ளக்குறிச்சி அருகே நள்ளிரவில் டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து மது பாட்டில்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.

 

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை நகரத்தில் இருந்து திருவெண்ணைநல்லூர் செல்லும் சாலையில் கிரி மாதா அம்மன் கோயில் அருகே உள்ளது அரசு டாஸ்மாக் மதுபானக்கடை. இந்த மதுபானக் கடையில் மது பாட்டில்கள் அமோக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த மதுபானக் கடை நகரத்தை விட்டு அரைகிலோ மீட்டர் தொலைவில் ஒதுக்குப்புறமான பகுதியில் உள்ளது.

 

இரவு நேரங்களில் இந்த பகுதியில் ஆட்கள் நடமாட்டம் மிகவும் குறைவாகவே இருக்கும் உளுந்தூர் பேட்டையில் இருந்து திருவெண்ணைநல்லூர் சாலையில் இரவு நேரங்களில் எப்போதாவது சில வாகனங்கள் செல்லும் மற்றபடி அந்த சாலை இரவு நேரங்களில் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி கிடக்கும் அந்தப் பகுதியில் உள்ள இந்த டாஸ்மாக் மதுபானக்கடையை கொள்ளையர்கள் பல நாட்கள் நோட்டமிட்டு வந்துள்ளனர்.

 

மேலும் இந்த கடைக்கு இரவு காவலராக ஹரிதாஸ் என்பவர் இரவு நேரங்களில் காவலுக்கு இருந்து வருகிறார். சம்பவத்தன்று இரவு 2 டூவீலர்களில் மூன்று அடையாளம் தெரியாத நபர்கள் டாஸ்மாக் கடைக்கு வந்துள்ளனர். அப்போது இரவு காவலர் ஹரிதாஸ் சத்தம் கேட்டு எழுந்து வந்துள்ளார். அவரை கடைக்கு முன்பாகவே அடித்து உதைத்து கட்டிப் போட்டுவிட்டு டாஸ்மாக் மதுபான கடையின் பூட்டை உடைத்து உள்ளே இருந்த ஐநூறுக்கும் மேற்பட்ட மதுபாட்டில்களை சாக்கு மூட்டைகளில் அள்ளிப்போட்டு கட்டிக்கொண்டு டூவீலர்களில் பரந்து சென்றுள்ளனர்.

 

அப்போது தற்செயலாக நகரில் ரோந்து வந்த போலீசார் சந்தேகப்படும் வகையில் சாக்கு மூட்டைகளோடு இரண்டு டூவீலர்களில் மூன்று பேர் அதிவேகமாக செல்வதை பார்த்துள்ளனர் உடனடியாக அவர்கள் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் எழிலரசியை தொடர்புகொண்டு தகவல் கூறியுள்ளனர் உடனே அவர் அனைத்து போலீசாரையும் உஷார்படுத்தியுள்ளார்.

 

இதில் இன்ஸ்பெக்டர் சக போலீசாருடன் சாக்குமூட்டையில் மதுபாட்டில்கள் கடத்திய அந்த மூவரையும் துரத்தி சென்று அதில் ஒருவரை மட்டும் மதுபாட்டில்களோடு பிடித்துள்ளளார் மற்ற இருவர் தப்பி ஓடிவிட்டனர். தப்பி ஓடிய இருவரையும் தீவிரமாக தேடி வருகின்றனர். டாஸ்மாக் மதுபானக் கடை காவலாளியை கட்டிப்போட்டு விட்டு மதுபாட்டில்கள் கொள்ளையடிக்கப்பட்ட தகவல் மாவட்ட எஸ்பி ஜியாவுல் ஹக் அவர்களுக்கு தெரிவிக்கப்பட்டது.

 

அவரும் உளுந்தூர்பேட்டை டிஎஸ்பி விஜயகுமார் உட்பட போலீசார் கொள்ளையடிக்கப்பட்ட டாஸ்மாக் மதுபானக்கடைக்கு நேரில் வந்து பார்வையிட்டுள்ளனர் மேலும் தனிப்படை அமைத்து தப்பி ஓடிய இருவரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர் மாட்டிக்கொண்ட ஒருவரிடம் தீவிர விசாரணையும் போலீசார் நடத்தி வருகிறார்கள் காவலாளியை கட்டிப்போட்டு விட்டு, டாஸ்மாக் மதுபாட்டில்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் உளுந்தூர்பேட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

குடித்துவிட்டு அடிக்கடி தகராறு; தந்தையைக் கொன்ற 15 வயது சிறுவன்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
incident in thoothukudi; police investigation

கன்னியாகுமரியில் பேரனின் மதுப்பழக்கத்தைத் தட்டிக்கேட்ட பாட்டி, தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், அதேபோல் மது போதையில் தாயை அடித்து துன்புறுத்தி வந்த தந்தையை 15 வயது மகனே கொலை செய்த சம்பவம் தூத்துக்குடியில் மேலும் பரபரப்பை கிளப்பி உள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் செல்சீனி காலனி பகுதியில் வசித்து வருபவர்கள் சக்தி-அனுசியா தம்பதியினர். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். கணவர் சக்தி சமையல் செய்யும் வேலை செய்து வருகிறார்.  குடிப்பழக்கத்திற்கு அடிமையான சக்தி மது அருந்திவிட்டு அடிக்கடி மனைவி அனுசியாவை துன்புறுத்தி வந்துள்ளார். இந்நிலையில்  நேற்று இரவு வணக்கம் போல மது அருந்திவிட்டு வந்த சக்தி, மனைவி அனுசியாவை அடித்து காயப்படுத்தியுள்ளார்.

தந்தையின் இந்தச் செயலால் மன உளைச்சலில் இருந்த மூத்த மகனான 15 வயது சிறுவன், ஆத்திரத்தில் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து தந்தை சக்தி மீது சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே சக்தி உயிரிழந்தார். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பாக தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய போலீசார் சிறுவனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

குடிப்பழக்கத்தை தட்டிக்கேட்ட பாட்டியை கொன்ற பேரன்

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
Grandson attack grandmother for drunkenness

குடிப்பழக்கத்தை கண்டித்த பாட்டியை பேரனே கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கன்னியாகுமரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் அருகே உள்ளது சாரூர். இந்த பகுதியில் வசித்து வந்தவர் தாசம்மாள் (80). இவருடைய மகன் புஷ்பராஜ் என்பவருக்கு அஜித் மகன் இருக்கிறார். அவருக்கு வயது 23.

குடும்ப பிரச்சனை காரணமாக புஷ்பராஜின் மனைவியை பிரிந்து சென்று விட்டார். இதனால் புஷ்பராஜூம் அவருடைய மகன் அஜித்தும் தாசம்மாளுடன் வசித்து வந்தனர். அண்மையில் உடல்நிலை சரியில்லாமல் புஷ்பரஜ் இறந்து விட்டார் .

அதன் பிறகு பாட்டியுடன் அஜித் மட்டும் வசித்து வந்தார். அந்த பகுதியில் பெயிண்டிங் வேலைகளுக்கு சென்று வந்த அஜித் குடிப்பழக்கத்திற்கு நாளடைவில் அடிமையாகி விட்டார். இந்நிலையில் பாட்டி  தாசம்மாள் பெயரில் உள்ள 15 சென்ட் நிலத்தை தன்னுடைய பெயருக்கு எழுதி வைக்கும்படி அஜித் மது அருந்திவிட்டு ரகளை செய்து வந்துள்ளார்.

வழக்கம்போல் நேற்று இரவு 11 மணிக்கு மது குடித்துவிட்டு வந்த அஜித் பாட்டி தாசதாசம்மாளிடம் இது தொடர்பாக சண்டை போட்டுள்ளார். அப்பொழுது பாட்டி தட்டி கேட்டுள்ளார். மதுபோதையில் இருந்த அஜித் தாசம்மாளை கீழே தள்ள, சுவரில் தலை மோதி சம்பவ இடத்திலேயே தாசம்மாள் உயிரிழந்தார். தான் தாக்கியதால் பாட்டி இறந்ததை அறிந்துகொண்ட அஜித் பயத்தில் அவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் கன்னியாகுமரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.