Advertisment

சென்னையில் 18ம் தேதி முதல் டாஸ்மாக் திறப்பு!

m,

Advertisment

உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகிறது. இதுவரை இரண்டு கோடிக்கும் அதிகமானவர்களை இந்த நோய்த் தாக்கியுள்ளது. ஏழு லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உயிரிழந்துள்ளனர்.

உலகின் பல நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனைத் தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. பல நாடுகள் தங்கள் நாடுகளில் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளன. மராட்டியத்திற்கு அடுத்ததாக தமிழகத்தில் கரோனா தொற்று அதிகளவு இருந்து வருகிறது. தமிழகத்தில் இதுவரை கரோனா உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை மூன்று லட்சத்தை கடந்துள்ளது. ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பலியாகி உள்ளார்கள். சென்னையில் கரோனா வேகமாக பரவி வருகின்றது. இதன் காரணமாக டாஸ்மாக் கடைகள் கடந்த 5 மாதங்களாக மூடப்பட்டு உள்ளது. இந்நிலையில் சென்னையில் வரும் 18ம் தேதி முதல் மதுக்கடைகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை மதுக்கடைகள் செயல்படும் என்றும், நோய் கட்டுப்பாடு பகுதிகளில் உள்ள மதுபானக்கடைகள் இயங்காது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

corona virus
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe