Skip to main content

மாவட்டம் விட்டு மாவட்டத்திற்கு மது கடத்தல்... மன்னார்குடி பிரமுகர்கள் கைது!

Published on 19/06/2021 | Edited on 19/06/2021

 

 

tasmac liquor pudukkottai district police seizure and arrested the persons


தமிழகத்தில் கரோனா தொற்று அதிகமுள்ள மாவட்டங்களைத் தவிர மற்ற மாவட்டங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வு கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் 27 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளும் திறக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாததால் கள்ளச் சந்தையில் அதிக விலைக்கு மது விற்பனை செய்யப்படுகிறது. 

 

இதற்காக அருகில் உள்ள புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து மொத்தமாக மதுப்பாட்டில்கள் வாங்கிச் செல்கின்றனர். இந்த நிலையில் இன்று (19/06/2021) மாலை புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகில் உள்ள ஆலங்காடு டாஸ்மாக் கடையில் இருந்து ஒரு காரில் 8 பெட்டி குவாட்டர் மதுபாட்டில்களும், 3 ஆஃப், 2 பீர் பாட்டில்களும் வாங்கிக் கொண்டு புறப்பட்ட போது தகவல் அறிந்து சென்ற ஆலங்குடி மதுவிலக்கு காவல்துறையினர் கார், மதுப்பாட்டில்கள், காரில் மதுப்பாட்டில்களைக் கடத்திய திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி வ.உ.சி ரோட்டைச் சேர்ந்த பாண்டியன் என்பவரின் மகன் மணிகண்டன் (வயது 28), மன்னார்குடி சுந்தரக்கோட்டை பிள்ளையார்கோயில் தெருவைச் சேர்ந்த சண்முகம் என்பவரின் மகன் மகேந்திரன் (வயது 28), மன்னார்குடி அசேசம் பெருமாள் என்பவரின் மகன் மணிகண்டன் (வயது 28) ஆகியோரையும் இவர்களுக்கு வழிகாட்டிய கொத்தமங்கலம் கலைச்செல்வன் ஆகியோரையும் காவல்துறையினர் பிடித்து வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

tasmac liquor pudukkottai district police seizure and arrested the persons

அதேபோல், கறம்பக்குடி, புதுப்பட்டி டாஸ்மாக் கடையில் இருந்து 89 மதுப்பாட்டில்களை வாங்கி மூட்டையாகக் கட்டிக்கொண்டு செல்ல முயன்ற மன்னார்குடி கட்டக்குடி பாரதிதாசன் தெருவைச் சேர்ந்த செல்லத்துரை மகன் முரளி (வயது 35) என்பவரை காவல்துறையினர் கைது செய்ததோடு, அவரிடம் இருந்த  மதுப்பாட்டில்களையும் கைப்பற்றினர்.

 

கடந்த வாரம் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டது முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாத மாவட்டத்தைச் சேர்ந்த ஏராளமானவர்கள் இப்படி மதுப்பாட்டில்களை மொத்தமாக வாங்கிச் செல்வது வழக்கமாக உள்ளதால் கறம்பக்குடி நகரில் உள்ள டாஸ்மாக் கடைகளில் ஆதார் அட்டையைக் கேட்படுகிறது. இதனால் அவர்கள் கிராம கடைகளுக்கு செல்கின்றனர். மது வாங்க வருவோர் விபத்தில் சிக்கி பலியான சம்பவங்களும் நடந்துள்ளது.
 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அனைத்து ஏற்பாடுகளும் தயார்; வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்ட ஈவிஎம்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
All arrangements are ready; EVM sent to polling stations

தமிழகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பாராளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் அரசியல் கட்சியினர், சுயேட்சைகள் என 31 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதியில் 198 மண்டலங்களில் 2,222 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, காங்கேயம் தாராபுரம் குமாரபாளையம் ஆகிய சட்டசபை தொகுதிகளில் 15 லட்சத்து 38 ஆயிரத்து 778 வாக்காளர்கள் உள்ளனர்.

தேர்தல் பாதுகாப்பு பணியில் 2,325 மத்திய பாதுகாப்பு படையினர், 1,571 உள்ளூர் போலீசார் என 3,896 பேர் ஈடுபடுகின்றனர். மாவட்டத்தில் 5 மாநில சோதனை சாவடி உள்பட 12 சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தி உள்ளனர். 191 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஈரோடு பாராளுமன்றத் தொகுதிக்குள் 1,112 வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இப்படி வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்படுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரம், வி வி பேட் மற்றும் வாக்குச் சாவடிக்குத் தேவையான பயன்பாட்டுப் பொருட்களைத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் லாரி மற்றும் வேன்களில் மண்டல குழுவினர் தலைமையில் பொருட்கள் கருவிகள் எடுத்துச் செல்லப்பட்டன. இந்த வாகனங்களில் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்பட்டு இருந்தது. மேலும் வாக்குச்சாவடிகளில் 10,970  ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பணி செய்ய உள்ளனர். இது தவிர ஒருங்கிணைப்பு பணியில் 2,500 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். தேர்தல் பணியில் ஈடுபடுவோர் ஏற்கெனவே மூன்று கட்ட பயிற்சி பெற்ற பயிற்சி மையம் சென்று ஓட்டு சாவடி பணி நியமன ஆணையைப் பெற்று இன்று மாலைக்குள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையத்துக்கு சென்று விடுவார்கள். ஒவ்வொரு வாக்கு சாவடிகளிலும் முதியோர், மாற்றுத்திறனாளிக்காக சக்கர நாற்காலி, சாய்வு தளம், நிழல் வசதி, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்தும் ஏற்படுத்தி தயார் நிலையில் உள்ளனர். தற்போது மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் வசதிக்காக சாமியானா பந்தலும் போடப்பட்டுள்ளது.

நாளை காலை சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு  தொடங்குகிறது. வாக்கு பதிவு செய்ய வருபவர்கள் தங்களது 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காட்டி வாக்கு பதிவு செய்து கொள்ளலாம் என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும் முன்னதாக காலை 5:30 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும். ஈரோடு மாவட்டம் பர்கூர் , தாளவாடி, கடம்பூர் ஆகிய மலைப்பகுதி வாக்குச்சாவடிகளில் தொலைபேசி, இன்டர்நெட் வசதி இல்லை. அங்கு வனத்துறையினரின் மைக் மூலம் தொடர்புகள் ஏற்படுத்தப்படும். மேலும் ஈரோடு மாவட்டம் மலைப்பகுதியில் 120 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன. வெப் கேமரா வசதி செய்ய முடியாத வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு பணிகள் முழுமையாக வீடியோவாக பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.