Skip to main content

டாஸ்மாக்கில் நேற்று ரூபாய் 426.24 கோடிக்கு மதுவிற்பனை!

Published on 09/05/2021 | Edited on 09/05/2021

 

tasmac liquir sales in tamilnadu rs 426 crores

 

கரோனா தடுப்பு நடவடிக்கையாக, தமிழகத்தில் நாளை (10/05/2021) முதல் மே 24- ஆம் தேதி வரை 15 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக தமிழக அரசு அறிவித்திருந்தது. அதைத் தொடர்ந்து, பொதுமக்கள் தங்களது சொந்த ஊருக்கு செல்ல ஏதுவாக சென்னை கோயம்பேடு உள்ளிட்ட பேருந்து நிலையங்களில் இருந்து நேற்றும் (08/05/2021), இன்றும் (09/05/2021) 24 மணி நேரமும் பேருந்துகள் இயங்கும் என போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது. அதன்படி, நேற்று (08/05/2021) இரவு முதல் இன்று (09/05/2021) காலை வரை சென்னையில் இருந்து 3,325 பேருந்துகள் இயக்கப்பட்டு 1.33 லட்சம் பேர் பயணம் மேற்கொண்டுள்ளனர். மேலும், சென்னையில் இருந்து 4,816 சிறப்புப் பேருந்துகள் இன்றும் இயக்கப்பட உள்ளன.

 

இந்த நிலையில் முழு ஊரடங்கின் போது, தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகலும் மூடப்படும் என தமிழக அரசு தெரிவித்திருந்தது. மேலும், தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் இன்றும், நாளையும் (09/05/2021) கூடுதலாக, இரண்டு மணி நேரம் அதாவது மாலை 06.00 மணி வரை மதுபானங்கள் விற்பனை செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

 

இந்த அறிவிப்பால், டாஸ்மாக் கடைகளில் மதுப்பிரியர்கள் அதிகளவில் குவிந்தனர். இதனால் தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் மதுபானங்கள் விற்பனை அமோக நடைபெற்றுள்ளது. தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் நேற்று (08/05/2021) ஒரே நாளில் ரூபாய் 426.24 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகியுள்ளது. இதில், அதிகபட்சமாக சென்னை மண்டலத்தில் ரூபாய் 100.43 கோடிக்கும், திருச்சி மண்டலத்தில் ரூபாய் 82.59 கோடிக்கும் மதுபானங்கள் விற்பனையாகியுள்ளது. மேலும், மதுரை மண்டலத்தில் ரூபாய் 87.28 கோடிக்கும், சேலம் மண்டலத்தில் ரூபாய் 79.82 கோடிக்கும், கோவை மண்டலத்தில் ரூபாய் 76.12 கோடிக்கும் மதுபானங்கள் விற்பனையாகியுள்ளது. 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரான்ஸ் வீரர்களுக்கு தற்காப்புக்கலைகளை கற்றுக்கொடுக்கும் தமிழக வீரர்கள்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Tamil Nadu players teaching martial arts to French players

மாமல்லபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச மஞ்சூரியா குங்ஃபூ தற்காப்புக் கலையின் சார்பில் இந்தோ பிரான்ஸ் தற்காப்புக் கலை சிறப்பு பயிற்சி முகாம் பிரான்ஸில் நடைபெற்று வருகிறது.

பிரான்ஸ் நாட்டின் ஃபெவ்ரி நகரில் மாஸ்டர் ஷி ஷிஃபூ மேத்யூ  தலைமையில் ஏப்ரல் 22 துவங்கி 28 வரை 7 நாட்கள் நடைபெற்று வரும் இந்தச் சிறப்பு பயிற்சி முகாமில் கல்பாக்கம் அணுபுரத்தைச் சேர்ந்த மாஸ்டர் சந்தோஷ், திண்டுக்கல் மாவட்டம் பழனி நாகூரைச் சேர்ந்த யோகா மாஸ்டர் பிரகாஷ் ஆகிய இருவரும், பிரான்ஸ் நாட்டு வீரர்களுக்கு  குங்ஃபூ தற்காப்புக் கலை, தெக்கன் களரி சிலம்பக்கலை, பதஞ்சலி ஹத யோகா, ஆகியவற்றை கற்பித்து வருகின்றார்கள். நேற்று யோகா குறித்து விளக்கம் அளித்து அதை செய்தும் காண்பித்துள்ளார்கள்.

Next Story

குடித்துவிட்டு அடிக்கடி தகராறு; தந்தையைக் கொன்ற 15 வயது சிறுவன்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
incident in thoothukudi; police investigation

கன்னியாகுமரியில் பேரனின் மதுப்பழக்கத்தைத் தட்டிக்கேட்ட பாட்டி, தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், அதேபோல் மது போதையில் தாயை அடித்து துன்புறுத்தி வந்த தந்தையை 15 வயது மகனே கொலை செய்த சம்பவம் தூத்துக்குடியில் மேலும் பரபரப்பை கிளப்பி உள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் செல்சீனி காலனி பகுதியில் வசித்து வருபவர்கள் சக்தி-அனுசியா தம்பதியினர். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். கணவர் சக்தி சமையல் செய்யும் வேலை செய்து வருகிறார்.  குடிப்பழக்கத்திற்கு அடிமையான சக்தி மது அருந்திவிட்டு அடிக்கடி மனைவி அனுசியாவை துன்புறுத்தி வந்துள்ளார். இந்நிலையில்  நேற்று இரவு வணக்கம் போல மது அருந்திவிட்டு வந்த சக்தி, மனைவி அனுசியாவை அடித்து காயப்படுத்தியுள்ளார்.

தந்தையின் இந்தச் செயலால் மன உளைச்சலில் இருந்த மூத்த மகனான 15 வயது சிறுவன், ஆத்திரத்தில் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து தந்தை சக்தி மீது சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே சக்தி உயிரிழந்தார். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பாக தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய போலீசார் சிறுவனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.