Skip to main content

குடிக்கிற தண்ணிய உறிஞ்சி எடுத்து சாராயம் தயாரிக்கிறாங்க.. கேட்கப் போனா போலீசை விட்டு அடிக்கிறாங்க - குமுறும் மக்கள்

Published on 15/05/2019 | Edited on 15/05/2019

குடிக்கிற தண்ணியை கூட உறிஞ்சி எடுத்து சாராயம் தயாரிக்கிறாங்க. அதை கேட்கப்போனால் போலீசை விட்டு அடிக்கிறாங்கனு கிராம மக்களின் குமுறலைக் கேட்டு சும்மா இருந்தா நாங்க மனுசங்களே இல்ல அதான் சாராய ஆலையை மூடு சாராயக்கடைகளை பூட்டுன்னு சாராய ஆலையை முற்றுகையிட வந்தோம் என்றார்கள் கல்லாக்கோட்டை கால்ஸ் ஆலையை முற்றுகையிட்டு கைதான பெண் தோழர்கள்.

 

protest


  

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகில் உள்ளது கல்லாக்கோட்டை கிராமம் முழுக்க முழுக்க விவசாய கிராமம். அதனைச் சுற்றியுள்ள கிராமங்களிலும் விவசாயமே பிரதானம். இந்த விவசாயமே பல குடும்பங்களில் பட்டதாரிகளை உருவாக்கியது. ஆனால் 10 ஆண்டுகளுக்கு முன்பு விவசாயத்தையும் விவசாயிகளின் வாழ்க்கையையும் அழிக்க வந்தது கால்ஸ் என்னும் மதுபான தயாரிப்பு தொழிற்சாலை. 
 


முதலில் ஆலை பற்றி தெரியாத மக்கள் அங்கு வேலைக்குச் சென்றார்கள் சில மாதங்களிலேயே சாராய உற்பத்திக்காக தினமும் பல லட்சம் லிட்டர் தண்ணீரை உறிஞ்சி எடுத்ததால் சுற்றியுள்ள பல கிராமங்களில் நிலத்தடி நீர் கானல் நீரானது. தண்ணீர் குறைந்ததால் விவசாயம் குறைந்தது. இதைப் பார்த்து கிராம மக்கள் விவசாயம் காக்க போராட்டம் நடத்தினார்கள் போலீசாரை வைத்து போராட்டத்தை முடக்கி சுமார் 150 பேர்கள் மீது வழக்கு போட்டனர். அதனால் உள்ளூர் மக்கள் வேலைக்கு போவதை நிறுத்திக் கொண்டாலும் நீதிமன்றம் போவதை நிறுத்த முடியவில்லை. இந்த நிலையில் தான் விவசாயத்திற்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டது போல குடிதண்ணீருக்கும் தட்டுபாடு ஏற்பட்டது. 
 

இதே நிலை இன்னும் சில ஆண்டுகள் நீடித்தால் கல்லாக்கோட்டை சுற்றியுள்ள பல கிராம மக்கள் ஊரையே காலி செய்யும் அவல நிலை ஏற்படும். இடதுசாரிகள் உள்பட பல்வேறு அரசியல் கட்சிகளும் பல முறை போராடிவிட்டார்கள் ஆனால் பலனில்லை. இந்த நிலையில் தான் தமிழர் தேசிய பேரியக்கத்தின் மகளிர் ஆயத்திடம் பெண்கள் கண்ணீர் வடித்தனர். 



14ந் தேதி கல்லாக்கோட்டை சாராய ஆலையை முற்றுகையிடுவோம் என்று அறிவித்ததுடன் காலை 10 மணி முதல் பெண்கள் அதிகமானோர் திரண்டதால் ஒரு கிலோ மீட்டருக்கு முன்பே தடுப்புகளை வைத்து போலீசார் தடுத்ததுடன் ஆலை முன்பும் தடுப்புகளை வைத்து தடுத்தனர். போராட்டத்தில் கலந்து கொண்ட பெண்கள் கூறும் போது, ஊரெங்கும் சாராயக்கடைகளை நடத்தி பல ஆயிரம் பெண்களை விதவை ஆக்கிவிட்ட பிறகும்கூட இப்ப குடிக்கிற தண்ணீயை உறிஞ்சி எடுத்து சாராயம் தயாரித்துக் கொண்டு கழிவுகளை வெளியேற்றி கிராம மக்களுக்கு நோய்களை பரப்புகிறார்கள். இதை எல்லாம் கிராம பெண்கள் சொல்கிறார்கள். இதை கேட்ட பிறகும் நாங்க போராட வரலன்னா நாங்கள் மனிதர்களே இல்லை. இன்று போலீசாரை வைத்து தடுக்கலாம். ஆனால் அரசு நடவடிக்கை எடுக்கலன்னா மறுபடியும் வருவோம் ஆலை மூடும் வரை போராட்டத்தை தொடர்வோம் என்றனர்.

 

 


   

சார்ந்த செய்திகள்

Next Story

3 நாள்கள் விடுமுறை; மதுக்கடைகளில் குவிந்த மதுப்பிரியர்கள்!

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
Drinkers gathered in bars for holiday due to election

மக்களவைத் தேர்தலையொட்டி 3 நாள்கள் விடுமுறை அளிக்கப்பட்டதையொட்டி செவ்வாய்க்கிழமை (16-04-24) இரவு மதுக்கடையில் மதுப்பிரியர்களின் கூட்டம் அதிகமாகக் காணப்பட்டது.

மக்களவைத் தேர்தலையொட்டி தமிழகத்தில் ஏப்ரல் 17, 18, 19 ஆகிய 3 நாட்கள் அரசு (டாஸ்மாக்) மதுக்கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி டாஸ்மாக் கடையுடன் இணைந்து செயல்படும் மதுக்கூடங்கள், ஏப்ரல் 2 முதல் எப்ரல் 11 வரை (ஏப்ரல் 6 நீங்கலாக) அனைத்து மதுக்கூடங்களும் மூடப்படும். இந்த 3 நாள்களில் மதுபானங்களை விற்பனை செய்தாலோ அல்லது வேறு இடங்களுக்கு மதுபாட்டில்களை கொண்டு சென்றாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்த நிலையில், நேற்று (16-04-24) இரவுடன் மதுக்கடைகள் 3 நாள்களுக்கு மூடப்படும் என்பதால், திருச்சியில் மதுப்பிரியர்கள் தங்கள் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளில் குவிந்தனர். ஏராளமானோர் கடைகளை முற்றுகையிட்டு 3 நாள்களுக்குத் தேவையான மதுவகைகளை வாங்கிச்சென்றனர். இதனால் அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் கூட்டம் நிரம்பி வழிந்தது.

Next Story

போராட்டத்தில் ஈடுபட்ட எம்.பிக்கள் குண்டுக்கட்டாக கைது!

Published on 08/04/2024 | Edited on 08/04/2024
MPs who participated in the protest were arrested with explosives!

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. 

இந்த நிலையில், டெல்லியில் தலைமைத் தேர்தல் ஆணையத்தின் முன் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் டெரிக் ஓ பிரையன் தலைமையில் எம்.பி.க்கள் இன்று (08-04-24) 24 மணி நேர தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அதில், ஒன்றிய பா.ஜ.க அரசுக்கு எதிரான பதாகைகளை ஏந்தி முழக்கமிட்டு போராட்டம் நடத்தினர். இது குறித்து எம்.பி.க்கள் பேசுகையில், ‘சி.பி.ஐ, அமலாக்கத்துறை, ஐ.டி, என்.ஐ.ஏ போன்ற விசாரணை அமைப்புகளை ஒன்றிய அரசு தவறாக பயன்படுத்துவதை தடுக்கவும்’ போராட்டத்தில் ஈடுபட்ட திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் கோரிக்கை வைத்தனர். 

மேலும், ஒன்றிய அரசின் விசாரணை அமைப்புகள் அனைத்தும் பா.ஜ.கவுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும், விசாரணை அமைப்புகளால் தேர்தலின் மாண்பே சீர்குலைக்கப்படுவதாகவும் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் குற்றச்சாட்டு வைத்தனர். இதனையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள் தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் 2 தேர்தல் ஆணையர்களை சந்தித்து முறையிட்டு கோரிக்கை வைத்தனர். இதனையடுத்து, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் டெரிக் ஓ பிரையன் உள்ளிட்ட எம்.பிக்களை போலீசார் குண்டுக்கட்டாக கைது செய்தனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது