Skip to main content

டாஸ்மாக் ஊழியரின் கண்களில் மிளகாய் பொடி தூவி 2 லட்சம் பணம் கொள்ளை!

Published on 18/08/2022 | Edited on 18/08/2022

 

Tasmac employee was robbed of 2 lakhs by sprinkling chilli powder in his eyes!

 

திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அருகே பட்டிவீரன்பட்டி அரசு டாஸ்மார்க் கடையில் மேற்பார்வையாளராகப் பணிபுரியும் முருகன், சித்தூர் டாஸ்மாக் கடையில் பணிபுரியும் அழகுமணி ஆகிய இருவரும் தங்கள் கடைகளில் மது விற்பனைப் பணத்தை எடுத்துக் கொண்டு ஒரு இருசக்கர வாகனத்தில் வத்தலக்குண்டு வங்கி நோக்கி வந்துள்ளனர்.

 

இவர்கள் இருவரும் எம்.வாடிப்பட்டி குறுக்கு சாலையில் வந்துக் கொண்டிருந்த போது, பின்னால் இருசக்கர வாகனத்தில் பின் தொடர்ந்த இரண்டு இளைஞர்கள், டாஸ்மார்க் மேற்பார்வையாளர்கள், சென்ற வாகனத்தின் மீது மோதியுள்ளனர். மோதிய வேகத்தில் அந்த இளைஞர்கள், வந்த வாகனம் நிலைத் தடுமாறியதில் இளைஞர் இருவரும் கீழே விழுந்தனர். அதனைப் பார்த்த மேற்பார்வையாளர்கள் இருவரும் இளைஞர்களைத் தூக்க முற்பட்ட போது கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த இளைஞர்கள் முருகன் கண்ணில் மிளகாய்ப்பொடியை தூவி விட்டு, அவர் கையில் வைத்திருந்த ரூபாய் 2 லட்சம் பணத்தைப் பறித்தனர்.

 

அழகுமணி ஓடிவந்த போது, கத்தியைக் காட்டி மிரட்டி விட்டு, பணத்தை எடுத்துக் கொண்டு இருசக்கர வாகனத்தில் தப்பினர். இச்சம்பவத்தில், மேற்பார்வையாளர் அழகுமணி கொண்டு வந்த ரூபாய் 2.50 லட்சம் பணம் பெட்டியில் இருந்ததால், அவை கொள்ளையர்களுக்கு தெரியாமல் தப்பியது. கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த சம்பவம் தொடர்பாக, டாஸ்மார்க் மேற்பார்வையாளர் முருகன், பட்டி வீரன்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

 

சம்பவ இடத்திற்கு வந்த நிலக்கோட்டை டி.எஸ்.பி. முருகன் செய்த விசாரணையில் மேற்பார்வையாளர் முருகன் தனது உள்ளாடையில் ரூபாய் 25 ஆயிரம் மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது. கொள்ளை சம்பவம் நடந்தது தொடர்பாகவும், முருகன் உள்ளாடைக்குள் பணத்தை மறைத்து வைத்திருந்தது தொடர்பாகவும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

இதனிடையே பணம் கொள்ளை போனது குறித்து முருகன், மாவட்ட டாஸ்மார்க் நிறுவனத்திற்கு தகவல் கொடுத்தார். ஆனால் டாஸ்மார்க் நிறுவனமோ, கொள்ளை போனதாக சொல்லப்படுகிற டாஸ்மாக் பணத்தை பேங்கில் கட்டிவிட்டு வேலையைக் காப்பாத்திக்கோ. அப்புறம் விசாரணையைப் பாத்துக்கலாம் என்று பதில் வர, பணத்தைப் புரட்ட காவல்நிலையத்தில் இருந்து ஓடினார் முருகன். உதவிக்கு வந்த சூப்பர்வைசர்கள் விக்கித்து போய் நின்றனர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

“விதிமீறலில் ஈடுபட்ட டாஸ்மாக் பார்” - குரல் கொடுத்த குடிமகன்!

Published on 06/03/2024 | Edited on 06/03/2024
Tasmac Bar Irregular  Citizen Speaks Out

டாஸ்மாக் பாரில் மது அருந்தியபடியே நம்மைத் தொடர்புகொண்ட ஒருவர், “அண்ணே.. போதையெல்லாம் இறங்கிப்போச்சு..” என்று பேசினார். ‘கலப்படச் சரக்கா? என்ன விஷயம்?’ என்று கேட்டோம். “அதெல்லாம் இல்ல. டாஸ்மாக்ல 21 வயசுக்கு குறைவா உள்ளவங்களுக்கு சரக்கு விற்கக் கூடாதுன்னு சட்டம் சொல்லுது. ஆனா இந்த விருதுநகர் பார்ல (கடை எண் 11881) டவுசர் போட்ட சின்னப் பையனை வேலைக்கு வச்சிருக்காங்க. சிறுவன் தான் டேபிள் டேபிளா போயி பாட்டில வச்சிக்கிட்டிருக்கான். அவன் சின்னப் பையன்ங்கிறதுனால சரக்கடிக்க வந்தவங்க ஆளாளுக்கு அவனை விரட்டி வேலை வாங்குறாங்க. கண்டபடி திட்டுறாங்க.

பாக்குறதுக்கு பரிதாபமா இருக்கு. குழந்தைத் தொழிலாளர் முறையைத் தடுக்க சட்டம் இருக்கு. டாஸ்மாக் சட்டம் வேற இருக்கு. ஆனா பாருங்க சட்டமீறலா இங்கே அநியாயம் நடக்குது. மனசு பொறுக்காமத்தான் ஒருத்தர்கிட்ட நக்கீரன் நம்பரை வாங்கி உங்ககிட்ட பேசுறேன். நான் ஒரு குடிமகன்தான். ஆனாலும் எனக்கும் மனசாட்சி இருக்குல்ல. அந்தப் பையனோட எதிர்காலத்த நெனச்சா ரொம்ப வேதனையா இருக்கு. உங்க வாட்ஸ்-ஆப் நம்பருக்கு போட்டோ எடுத்து அனுப்பிருக்கேன் சார்.” என்று நா தழுதழுக்கப் பேசினார்.

Tasmac Bar Irregular  Citizen Speaks Out

மது அருந்தினாலும் ஒரு பொறுப்புள்ள இந்தியக் குடிமகனாக நடந்துகொண்ட அந்த நபர், நம்மிடம் தன் பெயரைச் சொல்ல விரும்பவில்லை. விருதுநகர் மாவட்ட டாஸ்மாக் மேலாளர் ரவிச்சந்திரனை தொடர்புகொண்டு விஷயத்தைச் சொன்னோம். “உடனே அங்கே போய் பார்த்து விசாரிச்சு நடவடிக்கை எடுக்கிறேன்.” என்று உறுதியளித்தார். 

Next Story

பேருந்து நிலையத்தில் மது கடத்தல்; மூன்று பெண்கள் கைது

Published on 05/03/2024 | Edited on 05/03/2024
Liquor smuggling at bus station; Three women were arrested

மதுபான பாட்டில்களை கடத்திய பெண்கள் 3 பேர் கைது செய்யப்பட்டது நாகையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாகப்பட்டினம் மாவட்டம் நாகூர் புதிய பேருந்து நிலையம் பகுதியில் மூன்று பெண்கள் சந்தேகத்திற்கிடமாக மூன்று பைகளுடன் நின்றுகொண்டிருந்தனர். அப்போது  அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போலீசாரை பார்த்த அப்பெண்கள் அவசர அவசரமாக ஆட்டோ ஒன்றில் ஏறி தப்பிக்க முயன்றனர்.

இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவர்கள் மூன்று பேரையும் பிடித்து அவர்கள் கொண்டு வந்த பையை சோதனை செய்ததில் அந்த பைகளில் மது பாட்டில்கள் இருந்தது தெரியவந்தது. உடனடியாக மூன்று பேரையும் கைது செய்த போலீசார் முழுமையாக சோதனை செய்ததில் 300க்கும் மேற்பட்ட மதுபாட்டில்களும், சாராயமும் இருந்தது தெரியவந்தது. கைப்பற்றப்பட்ட மதுபாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் மூன்று பெண்களையும் கைது செய்ததோடு, இந்த மதுபாட்டில் கடத்தல் தொடர்பாக அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நாகையில் மூன்று பெண்கள் பேருந்து நிலையம் வழியாக மதுபாட்டில் கடத்தலில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.