Skip to main content

ஒரே நாளில் டாஸ்மாக் வசூல் ரூபாய் 252 கோடி! 

Published on 01/05/2022 | Edited on 01/05/2022

 

Tasmac collects Rs 252 crore in a single day!

 

தமிழகத்தில் நேற்று (30/04/2022) ஒருநாள் மட்டும் 252 கோடி ரூபாய்க்கு மதுவிற்பனை செய்யப்பட்டுள்ளது. 

 

மே 1- ஆம் தேதி உழைப்பாளர் தினத்தையொட்டி, இன்று (01/05/2022) டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை என்பதால், நேற்று (30/04/2022) கடைகளில் மதுபாட்டில்களை வாங்கக் கூட்டம் அலைமோதியது. இதனால் தமிழகத்தில் நேற்று (30/04/2022) ஒரே நாளில் 252 கோடி ரூபாய்க்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டன. அதிகபட்சமாக மதுரையில் ரூபாய் 54.89 கோடிக்கும், சென்னையில் ரூபாய் 52.28 கோடிக்கும், திருச்சியில் ரூபாய் 49.78 கோடிக்கும், சேலத்தில் ரூபாய் 48.67 கோடிக்கும், கோவையில் ரூபாய் 46.72 கோடிக்கும் மதுபானங்கள் விற்பனையாகியுள்ளது. 

 

சார்ந்த செய்திகள்