Skip to main content

டாஸ்மாக் பார்களுக்கு சீல்...

Published on 19/10/2019 | Edited on 19/10/2019

தமிழ்நாடு முழுவதும் டாஸ்மாக் மதுக்கடைகளை மூடக் கோரி பொதுமக்கள் போராட்டங்கள் நடத்தினாலும் படிப்படியாக மூடப்படும் என்று வெளிப்படையாக சொன்னாலும் மூடிய கடைகளை சத்தமில்லாமல் திறந்து வியாபாரம் நடக்கிறது.
 

tasmac

 

 

டாஸ்மாக் கடை ஒரு பக்கம் என்றால் பெட்டிக்கடை, ஓட்டல்களிலும் டாஸ்மாக் மது விற்பனை வேகமாகவே உள்ளது. டாஸ்மாக்ல வாங்குற சாராயம் எங்கே வித்தாலும் விடுங்க ஆனா பாண்டிச்சேரி சாராயம், சொந்த தயாரிப்புகளை மட்டும் பிடிங்க என்று வாய்மொழி உத்தரவுகள் உள்ளதால் பெட்டிக்கடை வியாபாரத்திற்கு மாமூல் அனுமதியுடன் இயங்கி வருகிறது.
 டாஸ்மாக் கடைகள் இருந்தாலும் பார்களுக்கு அனுமதி பெறாமலேயே ஆளுங்கட்சியினர் பார்கள் நடத்தி வருகின்றனர். இதனால் அரசுக்கு என்பது இல்லை. ஆனால் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு இரட்டிப்பு வருமானமாக கிடைத்தது.

இந்த நிலையில் தான் சிலர் நீதிமன்றம் போய் பார் அனுமதியே இல்லாமல் பார் நடத்த அனுமதித்துள்ளதால் அரசு வருவாய் குறைகிறது என்று மனுத்தாக்கல் செய்ததால் புதுக்கோட்டை மாவட்டத்தில் இம்மாத தொடக்கத்தில் டெண்டர் நடந்தது. டெண்டர் விண்ணப்பம் அந்தந்த ஒன்றிய அதிமுக செயலாளர்களே கொடுத்தனர். ஒரு சிலர் மட்டும் நீதிமன்றம் மூலம் விண்ணப்பம் பெற்றனர்.
திட்டமிட்டபடியே டெண்டர் நடந்தாலும் டெண்டர் வைப்புத் தொகையோடு முன்வைப்புத் தொகையை செலுத்தாமலேயே பல பார்களும் இயங்குகிறது.
இந்த நிலையில் தான் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு சிறப்பு அதிகாரியாக கண்காணிக்க வந்த பறக்கும்படை அதிகாரி மதுரை உதவி கலெக்டர் பாஸ்கரன் புதுக்கோட்டை நகரில் சில பார்களுக்கு பூட்டி சீல் வைத்தார். இதைப் பார்த்து மற்ற பார்காரர்கள் இன்னும் சில நாட்களில் டெண்டர் தொகை கட்ட முன்வந்துள்ளனர்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

3 நாள்கள் விடுமுறை; மதுக்கடைகளில் குவிந்த மதுப்பிரியர்கள்!

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
Drinkers gathered in bars for holiday due to election

மக்களவைத் தேர்தலையொட்டி 3 நாள்கள் விடுமுறை அளிக்கப்பட்டதையொட்டி செவ்வாய்க்கிழமை (16-04-24) இரவு மதுக்கடையில் மதுப்பிரியர்களின் கூட்டம் அதிகமாகக் காணப்பட்டது.

மக்களவைத் தேர்தலையொட்டி தமிழகத்தில் ஏப்ரல் 17, 18, 19 ஆகிய 3 நாட்கள் அரசு (டாஸ்மாக்) மதுக்கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி டாஸ்மாக் கடையுடன் இணைந்து செயல்படும் மதுக்கூடங்கள், ஏப்ரல் 2 முதல் எப்ரல் 11 வரை (ஏப்ரல் 6 நீங்கலாக) அனைத்து மதுக்கூடங்களும் மூடப்படும். இந்த 3 நாள்களில் மதுபானங்களை விற்பனை செய்தாலோ அல்லது வேறு இடங்களுக்கு மதுபாட்டில்களை கொண்டு சென்றாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்த நிலையில், நேற்று (16-04-24) இரவுடன் மதுக்கடைகள் 3 நாள்களுக்கு மூடப்படும் என்பதால், திருச்சியில் மதுப்பிரியர்கள் தங்கள் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளில் குவிந்தனர். ஏராளமானோர் கடைகளை முற்றுகையிட்டு 3 நாள்களுக்குத் தேவையான மதுவகைகளை வாங்கிச்சென்றனர். இதனால் அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் கூட்டம் நிரம்பி வழிந்தது.

Next Story

மக்களவைத் தேர்தல்; மதுப்பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி!

Published on 08/04/2024 | Edited on 08/04/2024
Lok Sabha elections; Orders to close liquor shops!

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. 

அதில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளுக்கும் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்த நிலையில், மக்களவைத் தேர்தலை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளை மூட டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இது குறித்து டாஸ்மாக் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளுக்கும் ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் நடைபெறவிருக்கிறது. 

இந்த நாடாளுமன்றத் தேர்தலை ஒட்டி ஏப்ரல் 17,18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இது குறித்த சுற்றறிக்கை, அனைத்து மண்டல மேலாளர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வாக்கு எண்ணிக்கை நாளான ஜூன் 4ஆம் தேதியும் மதுக்கடைகளை மூட டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.