Skip to main content

போலீசாரின் துணையுடன் டாஸ்மாக் பார்கள் திறப்பு....?

Published on 03/09/2021 | Edited on 03/09/2021

 

TASMAC Bars are open in sivagangai district karaikudi

 

கரோனா பெருந்தொற்று காரணமாக டாஸ்மாக் பார்கள் அடைக்கப்பட்டிருந்த நிலையில், காரைக்குடியில் மட்டும் போலீசாரின் மாமூலான ஒத்துழைப்புடன் டாஸ்மாக் பார்கள் திறக்கப்பட்டுள்ளதால், கரோனா தொற்று பரவும் அச்சம் உருவாகியுள்ளது.

 

கரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக டாஸ்மாக் கடைகளும், அதனையொட்டிய பார்களும் மூடப்பட்டன. கடந்த ஜூன் 15ஆம் தேதி முதல் கோயம்புத்தூர், நீலகிரி திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்களைத் தவிர்த்து சென்னை உள்ளிட்ட 27 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளைத் திறந்து மதுவிற்பனை செய்துகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டது. அதேவேளையில், டாஸ்மாக் பார்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீடிக்கும் என்று அரசு ஆணை பிறப்பித்தது. 

 

இந்நிலையில், அரசு அனுமதித்துள்ள 27 மாவட்டங்களிலாவது டாஸ்மாக் கடைகளுடன் இணைந்த பார்களைத் திறக்க அனுமதி வேண்டுமென தமிழ்நாடு பார் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், அரசு அந்தக் கோரிக்கையை ஏற்கவில்லை. அதற்கடுத்த நாட்களில் தடைவிதிக்கப்பட்ட 11 மாவட்டங்களிலும், நேரத்தைக் குறைத்து, விதிமுறைகளுடன் டாஸ்மாக் கடைகளைத் திறக்க அனுமதித்தது அரசு. மாறாக எங்கும் டாஸ்மாக் பார்கள் திறக்க அனுமதிக்கப்படவில்லை.

 

இவ்வேளையில், சிவகங்கை மாவட்டம், காரைக்குடிக்கு உட்பட்ட 12 டாஸ்மாக் கடைகளுடன் இணைந்த பார்கள் திறக்கப்பட்டு, மது அருந்துவோர்கள் அனுமதிக்கப்பட்டுவருகின்றனர். இதுகுறித்து டாஸ்மாக் பணியாளர் ஒருவரிடம் கேட்டபோது, “மாவட்டத்தில் மொத்தமுள்ள 132 டாஸ்மாக் கடைகளில், கடைகளுடன் இணைந்த பார்களின் எண்ணிக்கை 88. இதில் காரைக்குடியில் மட்டும் 12 பார்கள் உள்ளன. அரசு அறிவுறுத்தலால் திறக்கப்படாமலிருந்த இந்தப் பார்கள், உள்ளூர் போலீசாரின் ஒத்துழைப்புடன் திறக்கப்பட்டு, செயல்பட்டுவருகின்றன. 

 

வழக்கமாக பார் நடத்துபவர்கள் மாதந்தோறும் கட்டணத்தொகையை மாவட்ட கலால் அலுவலகத்தில் செலுத்த வேண்டும். கரோனா காலம் என்பதால், பார் நடைபெறாததால் கட்டணத்தொகை வசூலிக்கப்படவில்லை. ஆனால், சில அரசியல்வாதிகளும், உள்ளூர் போலீசாரும் அந்தத் தொகையை வாங்கிக்கொண்டு பாரை நடத்த அனுமதித்துள்ளனர். இது அரசுக்கு வருவாய் இழப்பையும், பொதுமக்களிடையே நோய்த் தொற்று பரவும் அபாயத்தையும் அதிகமாக்கியுள்ளது” என்கிறார்.

 

இதுகுறித்து கருத்தறிய டாஸ்மாக் மேலாளருக்கு அழைப்பு விடுத்தோம்; பதிலில்லை. இதனால் மக்கள் மத்தியில் கரோனா பெருந்தொற்று அச்சம் உண்டாகியுள்ளது.

 

படம்: விவேக்

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

3 நாள்கள் விடுமுறை; மதுக்கடைகளில் குவிந்த மதுப்பிரியர்கள்!

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
Drinkers gathered in bars for holiday due to election

மக்களவைத் தேர்தலையொட்டி 3 நாள்கள் விடுமுறை அளிக்கப்பட்டதையொட்டி செவ்வாய்க்கிழமை (16-04-24) இரவு மதுக்கடையில் மதுப்பிரியர்களின் கூட்டம் அதிகமாகக் காணப்பட்டது.

மக்களவைத் தேர்தலையொட்டி தமிழகத்தில் ஏப்ரல் 17, 18, 19 ஆகிய 3 நாட்கள் அரசு (டாஸ்மாக்) மதுக்கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி டாஸ்மாக் கடையுடன் இணைந்து செயல்படும் மதுக்கூடங்கள், ஏப்ரல் 2 முதல் எப்ரல் 11 வரை (ஏப்ரல் 6 நீங்கலாக) அனைத்து மதுக்கூடங்களும் மூடப்படும். இந்த 3 நாள்களில் மதுபானங்களை விற்பனை செய்தாலோ அல்லது வேறு இடங்களுக்கு மதுபாட்டில்களை கொண்டு சென்றாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்த நிலையில், நேற்று (16-04-24) இரவுடன் மதுக்கடைகள் 3 நாள்களுக்கு மூடப்படும் என்பதால், திருச்சியில் மதுப்பிரியர்கள் தங்கள் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளில் குவிந்தனர். ஏராளமானோர் கடைகளை முற்றுகையிட்டு 3 நாள்களுக்குத் தேவையான மதுவகைகளை வாங்கிச்சென்றனர். இதனால் அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் கூட்டம் நிரம்பி வழிந்தது.

Next Story

பாஜக தேர்தல் அறிக்கை; ப.சிதம்பரம் சரமாரி கேள்வி!

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
 BJP Election Manifesto; P. Chidambaram barrage of questions

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கும் வாக்குப்பதிவு ஜூன் 1 ஆம் தேதி வரை நாடுமுழுவதும் 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. பின்பு பதிவான வாக்குகள் ஜூன் 4 எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் வெளியிடப்படவுள்ளது. ஆட்சியைத் தக்க வைக்கும் வகையில் பாஜகவும், இழந்த ஆட்சியை எப்படியாவது பிடிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியும் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

அந்த வகையில் காங்கிரஸ் கட்சி தனது வேட்பாளர்களை அறிவித்து, தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டு பிரச்சாரம் செய்து வருகிறது. இத்தகைய சூழலில் பாஜகவின் தேர்தல் அறிக்கையை பிரதமர் மோடி நேற்று (14.04.2024) வெளியிட்டார். பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான குழு உருவாக்கிய இந்த தேர்தல் அறிக்கை டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் வெளியிட்டப்பட்டது. இந்நிலையில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

அப்போது அவர் பாஜக தேர்தல் அறிக்கை குறித்துப் பேசுகையில், “எல்லா ஊர்களுக்கும் குழாய் மூலம் தண்ணீரே சென்று சேராத நிலையில், குழாய் மூலம் எரிவாயு எப்படிக் கொண்டு செல்ல முடியும். அனைத்து வீடுகளுக்கும் குழாய் மூலம் எரிவாயு விநியோகம் செய்வதாக பாஜக அளித்துள்ள வாக்குறுதி மிகப்பெரிய வேடிக்கையான செயல் ஆகும். பாஜக அரசு கடந்த 10 ஆண்டுகளில் 4 கோடி வீடுகளை கட்டிக்கொடுத்துவிட்டதாக தேர்தல் அறிக்கையில் கூறியிருப்பது பொய்க் கணக்கு ஆகும். அதாவது 4 கோடி வீடுகளை கட்டி இருந்தால் 52 ஆயிரம் வீடுகளை ஒவ்வொரு மாவட்டத்திலும் கட்டி இருக்க வேண்டும். சிவகங்கை மாவட்டத்தில் பாஜக அரசு கட்டிக்கொடுத்த 52 ஆயிரம் வீடுகளைக் காட்ட முடியுமா?. 

 BJP Election Manifesto; P. Chidambaram barrage of questions

நாடாளுமன்றத்தில் 33 சதவித மகளிர் இட ஒதுக்கீட்டு சட்டத்தை பாஜக அரசு நிறைவேற்றி இருந்தாலும் அந்த சட்டம் இப்போதைக்கு அமலுக்கு வராது. பெண்களுக்கான 33 சதவித இட ஒதுக்கீட்டை வேண்டுமென்றே பாஜக ஒத்திப் போட்டுள்ளது. அனைத்து ஊர்களுக்கும் புல்லட் ரயில் இயக்கப்படும் என்ற பாஜக வாக்குறுதி வேடிக்கையானது. ஒரு புல்லட் ரயிலுக்கு ரூ. 1.1 லட்சம் கோடி செலவு செய்யத் தயாராக உள்ள பாஜக அரசு, போதிய ரயில் விபத்து தடுப்புக் கருவிகளைப் பொருத்தாதது ஏன்?.

வேளாண் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை என்பது ஏற்கெனவே உள்ள ஒன்றுதான். பழைய பல்லவிகளைப் பாடுவது புதிய சிந்தனை அல்ல. பாஜக தேர்தல் அறிக்கையில் புதிய அறிவிப்புகள் இல்லை. நாட்டில் 5% பேர் ஏழ்மை நிலையில் இருக்கிறார்கள் என்பதை ஏற்க முடியாது. பாஜக தேர்தல் அறிக்கையில் மக்களை ஏமாற்றும் தேர்தல் வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன” எனத் தெரிவித்தார்.