Skip to main content

டாஸ்மாக்கில் இருந்து மாற்றப்படும் மதுபானங்கள்: போலீஸ் தடியடியில் ஒருவர் பலி!

Published on 08/04/2020 | Edited on 08/04/2020



தமிழகத்தில் கடந்த 24 ஆம் தேதி முதல் கரோனா நோய் பரவாமல் தடுப்பதற்காக போடப்பட்ட தடை உத்தரவின் அடிப்படையில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன.இதனால் மது பிரியர்களுக்கு மிகவும் சிரமமாக உள்ளது.மேலும் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளதால் இரவு நேரங்களில் கடைகளின் பூட்டை உடைத்து சுவற்றில் துளை போட்டு மது பாட்டில்கள் திருடப்படும் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.
 

t

 

இதையடுத்து அரசு டாஸ்மாக் கடைகளில் உள்ள மதுபாட்டில்களை ஆங்காங்கே உள்ள தமிழ்நாடு சிறு சேமிப்பு கிடங்கு இருக்கும் இடத்திற்கு இட மாற்றம் செய்து வருகிறது. இதனடிப்படையில் விழுப்புரம் ஜானகிபுரம் அருகிலுள்ள டாஸ்மாக் கடைகளில் இருந்த மது பாட்டில்களை லாரியில் சிறுசேமிப்பு கிடங்கிற்கு எடுத்துச் செல்ல ஏற்றிக் கொண்டிருந்தனர்.


இதைப் பார்த்த மது பிரியர்கள் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள்  தங்களுக்கு மதுபாட்டில் விற்பனை செய்ய வேண்டும் என்று அடம் பிடித்தனர்.நூற்றுக்கும் மேற்பட்டோர் இப்படிக் கடையை முற்றுகையிட்டு மதுபாட்டில்கள் கேட்டு தகராறு செய்தனர்.இவர்களைக் கட்டுப்படுத்த முடியாத டாஸ்மாக் ஊழியர்கள் காவல்துறையை வரவழைத்தனர். அங்கு வந்த காவல்துறையினர் மது பிரியர்களைக் கலைந்து செல்லுமாறு எடுத்துக்கூறியும் கேட்காமல் பிரச்சனை செய்தனர்.

 

http://onelink.to/nknapp



இதையடுத்து போலீசார் லேசான தடியடி நடத்தி அந்தக் கும்பலை விரட்டி அடித்தனர்.அப்போது மதுபாட்டில் கேட்பதற்காக இந்தக் கும்பலில் வந்த பிடாகம் குச்சிபாளையம் கிராமத்தைச் சேர்ந்த ராஜாராம் (65-வயது) இவரும் அங்கு வந்துள்ளார்.போலீஸ் துரத்தியதும் எல்லோரும் கலைந்து ஓடும் போது ராஜாராம் அங்குள்ள ஒரு கல்லில் கால் இடரி விழுந்துபோனார். அவரை போலீசார் உடனே ஆம்புலன்ஸ் மூலம் தனியார் மருத்துவமனைக்கு  அனுப்பி வைத்தனர். ராஜாராமை பரிசோதனை செய்த டாக்டர்கள்,அவர் இறந்து போனதை உறுதி செய்தனர்.மதுவின் மீதான ஆசை, மது பிரியர்களைப் பாடாய்ப் படுத்துகிறது. இதனால் ஒரு உயிர் பிரிந்துள்ளது.

என்று தணியுமோ இந்த மதுவின் மோகம்!


 

சார்ந்த செய்திகள்

Next Story

குடித்துவிட்டு அடிக்கடி தகராறு; தந்தையைக் கொன்ற 15 வயது சிறுவன்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
incident in thoothukudi; police investigation

கன்னியாகுமரியில் பேரனின் மதுப்பழக்கத்தைத் தட்டிக்கேட்ட பாட்டி, தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், அதேபோல் மது போதையில் தாயை அடித்து துன்புறுத்தி வந்த தந்தையை 15 வயது மகனே கொலை செய்த சம்பவம் தூத்துக்குடியில் மேலும் பரபரப்பை கிளப்பி உள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் செல்சீனி காலனி பகுதியில் வசித்து வருபவர்கள் சக்தி-அனுசியா தம்பதியினர். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். கணவர் சக்தி சமையல் செய்யும் வேலை செய்து வருகிறார்.  குடிப்பழக்கத்திற்கு அடிமையான சக்தி மது அருந்திவிட்டு அடிக்கடி மனைவி அனுசியாவை துன்புறுத்தி வந்துள்ளார். இந்நிலையில்  நேற்று இரவு வணக்கம் போல மது அருந்திவிட்டு வந்த சக்தி, மனைவி அனுசியாவை அடித்து காயப்படுத்தியுள்ளார்.

தந்தையின் இந்தச் செயலால் மன உளைச்சலில் இருந்த மூத்த மகனான 15 வயது சிறுவன், ஆத்திரத்தில் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து தந்தை சக்தி மீது சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே சக்தி உயிரிழந்தார். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பாக தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய போலீசார் சிறுவனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

குடிப்பழக்கத்தை தட்டிக்கேட்ட பாட்டியை கொன்ற பேரன்

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
Grandson attack grandmother for drunkenness

குடிப்பழக்கத்தை கண்டித்த பாட்டியை பேரனே கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கன்னியாகுமரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் அருகே உள்ளது சாரூர். இந்த பகுதியில் வசித்து வந்தவர் தாசம்மாள் (80). இவருடைய மகன் புஷ்பராஜ் என்பவருக்கு அஜித் மகன் இருக்கிறார். அவருக்கு வயது 23.

குடும்ப பிரச்சனை காரணமாக புஷ்பராஜின் மனைவியை பிரிந்து சென்று விட்டார். இதனால் புஷ்பராஜூம் அவருடைய மகன் அஜித்தும் தாசம்மாளுடன் வசித்து வந்தனர். அண்மையில் உடல்நிலை சரியில்லாமல் புஷ்பரஜ் இறந்து விட்டார் .

அதன் பிறகு பாட்டியுடன் அஜித் மட்டும் வசித்து வந்தார். அந்த பகுதியில் பெயிண்டிங் வேலைகளுக்கு சென்று வந்த அஜித் குடிப்பழக்கத்திற்கு நாளடைவில் அடிமையாகி விட்டார். இந்நிலையில் பாட்டி  தாசம்மாள் பெயரில் உள்ள 15 சென்ட் நிலத்தை தன்னுடைய பெயருக்கு எழுதி வைக்கும்படி அஜித் மது அருந்திவிட்டு ரகளை செய்து வந்துள்ளார்.

வழக்கம்போல் நேற்று இரவு 11 மணிக்கு மது குடித்துவிட்டு வந்த அஜித் பாட்டி தாசதாசம்மாளிடம் இது தொடர்பாக சண்டை போட்டுள்ளார். அப்பொழுது பாட்டி தட்டி கேட்டுள்ளார். மதுபோதையில் இருந்த அஜித் தாசம்மாளை கீழே தள்ள, சுவரில் தலை மோதி சம்பவ இடத்திலேயே தாசம்மாள் உயிரிழந்தார். தான் தாக்கியதால் பாட்டி இறந்ததை அறிந்துகொண்ட அஜித் பயத்தில் அவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் கன்னியாகுமரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.