Skip to main content

நவீன இயந்திரம் மூலம் ஆகாயத் தாமரைகளை அகற்றும் பணி... துணைமுதல்வர் ஒ.பி.எஸ் துவக்கி வைத்தார்!

Published on 19/02/2021 | Edited on 19/02/2021

 

The task of removing the sky lotuses with a modern machine ... Deputy Chief OBS launched!

 

தேனி அல்லிநகரம் மந்தையம்மன் குளத்தில் அதிநவீன இயந்திரம் மூலம் ஆகாயத் தாமரைகளை அகற்றி, தூர்வாரும் பணியினை தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்  துவக்கி வைத்தார்.

 

தேனி மாவட்டம், அல்லிநகரம் நகராட்சிக்குட்பட்ட 80 ஏக்கர் பரப்பளவில் மந்தையம்மன் குளம் உள்ளது. இக்குளம் முழுவதும் ஆகாயத் தாமரைகள் நிறைந்து தண்ணீர் மாசடைந்த நிலையில், இக்குளத்தில் உள்ள ஆகாயத் தாமரைகளை அகற்றி, தூர்வார அப்பகுதி விவசாயிகள், குடியிருப்போர் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்த்திடம் கோரிக்கை வைத்தனர். அவர்களுடைய கோரிக்கையை ஏற்று, துணை முதல்வரின் உத்தரவின்பேரில் ஆகாயத் தாமரைகளை அகற்ற தேனி தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் ப.ரவீந்திரநாத் தனது சொந்த செலவில் கடந்த சில நாட்களுக்கு முன் பணிகளைத் துவக்கினார்.

 

ஆகாயத் தாமரைகள் அதிகளவில் பரவி இருப்பதால் விரைந்து அகற்றுவதில் தாமதம் ஏற்படும் என்பதால், ஆகாயத் தாமரைகளை அகற்ற தேனி தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் ப.ரவீந்திரநாத் ஏற்பாட்டில் அதிநவீன இயந்திரம் வரவழைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அதிநவீன இயந்திரம் மூலம் ஆகாயத் தாமரைகளை அகற்றும் பணியினை நேற்று (18.02.2021) தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பூஜை செய்தும், கொடியசைத்தும் துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் தேனி தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத், மாவட்ட ஆட்சித்தலைவர் மரியம் பல்லவி பல்தேவ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சுமார் 10 நாட்களுக்குள் ஆகாய தாமரைகள் முழுமையாக அகற்றப்படும் எனத் தெரிகிறது.

 

The task of removing the sky lotuses with a modern machine ... Deputy Chief OBS launched!

.

இப்பணிகள் குறித்து அப்பகுதி விவசாய சங்கத்தினர் கூறும்போது, 'ஆகாயத் தாமரைகளை அகற்றுவதன் மூலம் தண்ணீர் மாசுபடாமல் பாதுகாக்கப்படும். சுற்றுப்புறங்களில் நிலத்தடி நீர் உயரும். மேலும் இக்குளத்திலிருந்து நீர் மாறுகால் பாய்ந்து மீறுசமுத்திரம் கண்மாயை அடைகிறது. இப்பணிகளை விரைந்து முடிக்க அதிநவீன இயந்திரத்தை வரவழைத்து, பணிகளைத் துவக்கி வைத்த தமிழக துணை முதல்வருக்கும், அதற்கு உறுதுணையாக இருந்த தேனி தொகுதி பாராளுமன்ற உறுப்பினருக்கும் விவசாயிகள் மற்றும் இப்பகுதியில் குடியிருப்போர் சார்பில்  நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்’ என்று தெரிவித்தனர்.

 

இந்நிகழ்ச்சியில் மாவட்ட இணைச் செயலாளர் மஞ்சுளாமுருகன், தேனி நகரச் செயலாளர் வழக்கறிஞர் கிருஷ்ணகுமார், நகர அவைத்தலைவர் முருகேசன், சார்பு அணி செயலாளர்கள், இலக்கிய அணி முருகேசன், சிறுபான்மை பிரிவு அபுதாஹீர், வர்த்தக அணி கே.எஸ்.கே.நடேசன், மாணவரணி பாலமணிமார்பன், மீனவரணி வைகை கருப்புஜி, தகவல் தொழில்நுட்பப் பிரிவு பாலசந்தர், நகர துணைச் செயலாளர் ரெங்கநாதன், நகரப் பொருளாளர் வீரமணி, நகர அம்மா பேரவைச் செயலாளர் சுந்தரபாண்டியன், கூட்டுறவு சங்கத் தலைவர் சுரேஷ், கிராம கமிட்டி தலைவர் கோவிந்தசாமி, செயலாளர் தாமோதரன், பொருளாளர் ஸ்ரீதர், விவசாயிகள் சங்க நிர்வாகிகள் ராஜகுரு, செல்வராஜ், அசோக் மற்றும் மயில்வேல், ஆப்பிள் முருகன், ஜெயப்பிரகாஷ், நாகராஜ், கார்த்திகேயன் உள்ளிட்ட கழக நிர்வாகிகளுடன் பொதுமக்களும் கலந்துகொண்டனர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

மலைக் கிராமங்களுக்கு குதிரை மூலம் வாக்கு பெட்டி அனுப்பி வைப்பு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Delivery of ballot boxes by horse to the villages of theni Hill

தமிழகத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் ஒவ்வொரு தேர்தலின் போதும் சாலை வசதி இல்லாத, போடி சட்டமன்ற தொகுதியிலிருந்து குதிரை மற்றும் கழுதை மூலம் வாக்கு பெட்டிகளை அனுப்பும் அவலம், கடந்த 40 ஆண்டு களாக நடைபெற்று வருகிறது. தற்போது நடைபெறும் 18 வது மக்களவை உறுப்பினர் தேர்தலிலாவது எங்களுக்கு சாலை வசதி அமைத்து தர வேண்டுமென இப்பகுதி மலைக் கிராம மக்கள் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.

இந்தியாவில் 18 வது மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நாளை நடைபெறும் நிலையில் தேனி மக்களவைத் தேர்தலின் போது வாக்குச்சாவடிகளுக்கு 40 வகையான உபகரணங்கள் கொண்ட பெட்டிகள் அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது.

Delivery of ballot boxes by horse to the villages of theni Hill

இந்நிலையில் போடி சட்டமன்ற தொகுதியில் உள்ள பெரியகுளம் பகுதியில் அகமலை, ஊத்துக்காடு உள்ளிட்ட பகுதிகளுக்கும் போடி பகுதியில் கொட்டகுடி, குரங்கணி, டாப் ஸ்டேஷன் சென்ட்ரல், கொழுக்குமலை, அண்ணாநகர் உள்ளிட்ட 10 மலைக் கிராமங்களுக்கும் வாக்குப்பட்டி அனுப்பும் பணி போடி தாலுகா அலுவலகத்தில் இருந்து போலீஸ் பாதுகாப்புடன் வாக்குப்பதிவு இயந்திரம் உள்ளிட்ட 40 உபகாரணங்கள் கொண்ட பொருள்கள் அனுப்பப்பட்டது.

குறிப்பாக தேனி பாராளுமன்ற தொகுதி, ஆறு சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியது. இந்நிலையில் போடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 315 வாக்குச்சாவடிகள் இருக்கிறது. இந்த நிலையில் இன்று வாக்குப்பட்டி மற்றும் வாக்குப்பதிவு இயந்திரம் வாக்குப்பதிவுக்கு தேவையான 40 பொருட்கள் உள்ளடங்கிய உபகரணங்கள் உள்ளிட்டவைகளைத் தேர்தல் நடத்தும் அலுவலர் குமரவேல் தலைமையில் அனுப்பப்பட்டது. அதன்படி போடி தொகுதியில் உள்ள 10 மலைக் கிராமங்களுக்கு வாக்குப்பட்டி அனுப்பப்பட்டது.

Delivery of ballot boxes by horse to the villages of theni Hill

மலைக் கிராமங்களான காரிப்பட்டி, கொட்டகுடி, குரங்கணி  அண்ணாநகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு வாகனங்கள் மூலமாகவும் சென்ட்ரல் மற்றும் அகமது பகுதிகளுக்கு குதிரை மற்றும் கழுதை மூலமாகவும் வாக்குப்பட்டி அனுப்பப்பட்டது பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாக்குப்பட்டி மதியம் 2 மணி அளவில் வாக்குப்பதிவு அலுவலர், வாக்குச்சாவடி பொறுப்பாளர் மற்றும் பி1 பி2 பி3 ஆகியோர்களுடன் வாக்குப்பட்டி துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் குதிரை மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Next Story

முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் காரில் சோதனை! 

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Former Minister R.P. Udayakumar car test

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அந்த வகையில் திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்குப் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ள அமைச்சர்கள் மற்றும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வாகனங்களை தேர்தல் பறக்கும் படையினர் தீவிரமாகச் சோதனை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் தேனி தொகுதி அதிமுக வேட்பாளர் நாராயணசாமியின் காரிலும், முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் காரிலும் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை செய்தனர். தேர்தல் பரப்புரைக்காக தேனி மக்களவை தொகுதிக்கு உட்பட்ட உத்தப்பநாயக்கனூர், கல்லூத்து பகுதிகளில் பரப்புரைக்கு வந்தபோது இந்த சோதனை நடைபெற்றது. அப்போது வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக காரில் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொண்டு செல்லபடுகிறதா என பறக்கும் படை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.