Skip to main content

மாட்டுவண்டிக்கு மணல் குவாரி வேண்டும்: தொழிலாளர்கள் உண்ணாவிரதம்.

Published on 26/09/2019 | Edited on 26/09/2019

கும்பகோணம் சிஐடியுவை சேர்ந்த மாட்டு வண்டி தொழிலாளர்கள் மணல் குவாரி அமைத்து தரக்கோரி கும்பகோணம் பொதுப்பணித்துறை அலுவலகம் முன்பு உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

tanjore protest

 

"தஞ்சை பொதுப்பணித்துறை அலுவலகத்தில் 16.8.2019 அன்று பொதுப்பணித்துறை அதிகாரிகள், செயற்பொறியாளர், சிஐடியு தலைவர்களுடன் நடத்திய அமைதி பேச்சுவார்த்தையில் உறுதியளித்தபடி மாட்டுவண்டி தொழிலாளர்களுக்கு தேவனோடை குவாரியில் மணல் எடுக்க வழங்கப்பட்ட அனுமதியை உடனே அமல்படுத்த வேண்டும். வேலை இழந்து வருமானமின்றி வாழ்விழந்த வறுமையோடு போராடும் மாட்டுவண்டி தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திட கொள்ளிடம் ஆற்றில் தனி மணல் குவாரி அமைத்திட வேண்டும். மாட்டுவண்டி தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும். லாரிகள் மூலம் மணல் எடுப்பதை அனுமதிக்க கூடாது" என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். 

போராட்டத்தில் இருந்தவர்களையும் சிஐடியு தலைவர்களையும் கும்பகோணம் வட்டாட்சியர் மற்றும் பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் உள்ளிட்ட அதிகாரிகள் மாட்டுவண்டி தொழிலாளர்களிடம் அமைதி பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதையே பேச்சுவார்த்தையிலும் கூறினர், அதற்கு பொதுப்பணித் துறையின் சார்பில் தேவனோடை பகுதியில் மாட்டுவண்டிகள் தொழிலாளர்கள் மணல் எடுத்துக் கொள்ள அனுமதி வழங்கப்படுகிறது.கொத்தங்குடி பகுதியில் மாட்டுவண்டி மணல் குவாரி அமைக்க கனிமவளத்துறை க்கு ஆய்வு அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது விரைவில் குவாரி திறக்க நடவடிக்கை எடுக்கப்படும், தொழிற்சங்கத்தின் சார்பில் ஏற்கனவே அளிக்கப்பட்ட மாட்டுவண்டி பட்டியலில் உண்மை தன்மையை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். திருவிடைமருதூர் வட்டம் முள்ளங்குடி கிராமத்தில் மாட்டு வண்டி குவாரி திறக்க உரிய ஆய்வு அறிக்கை கனிம வளத் துறைக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்படும். மாட்டுவண்டி அனைத்திற்கும் அடையாள அட்டை வழங்கப்படும். அதன் விபரப்படி மணல் எடுக்க டோக்கன் வழங்கப்படும்  என அரசு அதிகாரி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து உண்ணாவிரத்தை கைவிட்டுள்ளனர்.

சார்ந்த செய்திகள்

Next Story

போராட்டத்தில் ஈடுபட்ட எம்.பிக்கள் குண்டுக்கட்டாக கைது!

Published on 08/04/2024 | Edited on 08/04/2024
MPs who participated in the protest were arrested with explosives!

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. 

இந்த நிலையில், டெல்லியில் தலைமைத் தேர்தல் ஆணையத்தின் முன் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் டெரிக் ஓ பிரையன் தலைமையில் எம்.பி.க்கள் இன்று (08-04-24) 24 மணி நேர தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அதில், ஒன்றிய பா.ஜ.க அரசுக்கு எதிரான பதாகைகளை ஏந்தி முழக்கமிட்டு போராட்டம் நடத்தினர். இது குறித்து எம்.பி.க்கள் பேசுகையில், ‘சி.பி.ஐ, அமலாக்கத்துறை, ஐ.டி, என்.ஐ.ஏ போன்ற விசாரணை அமைப்புகளை ஒன்றிய அரசு தவறாக பயன்படுத்துவதை தடுக்கவும்’ போராட்டத்தில் ஈடுபட்ட திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் கோரிக்கை வைத்தனர். 

மேலும், ஒன்றிய அரசின் விசாரணை அமைப்புகள் அனைத்தும் பா.ஜ.கவுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும், விசாரணை அமைப்புகளால் தேர்தலின் மாண்பே சீர்குலைக்கப்படுவதாகவும் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் குற்றச்சாட்டு வைத்தனர். இதனையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள் தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் 2 தேர்தல் ஆணையர்களை சந்தித்து முறையிட்டு கோரிக்கை வைத்தனர். இதனையடுத்து, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் டெரிக் ஓ பிரையன் உள்ளிட்ட எம்.பிக்களை போலீசார் குண்டுக்கட்டாக கைது செய்தனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது

Next Story

‘போராட்டம் நடத்திய ஆசிரியர்கள் மீது நடவடிக்கை’ - பள்ளிக்கல்வித்துறை அதிரடி!

Published on 06/04/2024 | Edited on 06/04/2024
School Education Department takes action on Action against the protesting teachers

தமிழ்நாட்டில் பணியாற்றி வரும் இடைநிலை ஆசிரியர்கள், தங்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்று கடந்த பிப்ரவரி 19ஆம் தேதி தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தினர். அதில் குறிப்பாக, திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை ஒன்றியத்தில் இடைநிலை ஆசிரியர்களின் இந்த போராட்டம், பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கி மார்ச் 8ஆம் தேதி வரை நடந்தது. இதனையடுத்து, தமிழக அரசு அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதில், இடைநிலை ஆசிரியர்களின் போராட்டம் கைவிடப்பட்டது. 

இந்த நிலையில், 19 நாள்கள் தொடர்ந்து அரசுக்கு எதிராக போராட்டத்தில் கலந்துகொண்ட ஆசிரியர்களுக்கு சம்பள பிடித்தம் செய்ய பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது குறித்து தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் கூறியதாவது, ‘சம வேலைக்கு சம ஊதியம் கேட்டு பிப்ரவரி 19ஆம் தேதி முதல் மார்ச் 8, 2024 வரை ஆசிரியர்கள் போராட்டம் நடத்தினர். 

அதில், திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை ஒன்றியத்தில் 19 நாள்களுக்கு போராட்டத்தில் கலந்துகொண்ட ஆசிரியர்களுக்கு போராட்டத்தில் கலந்துகொண்ட நாள்களை சம்பளமில்லா விடுப்பாக அனுமதித்து பணிப்பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும். மேலும், 19 நாள்களுக்கு உரிய ஊதியம் மற்றும் பிற படிகளை ஒரே தவணையில் பிடித்தம் செய்யவும் வடமதுரை வட்டார கல்வி அலுவலருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது’ என்று கூறப்பட்டுள்ளது. .