Skip to main content

“யூனிபார்மை கழற்றிட்டு வா, அறுத்துடுவேன்” - போலீசாரை மிரட்டிய ஆசாமிகள்

Published on 19/06/2023 | Edited on 19/06/2023

 

Tanjore police in trouble with two men

 

தஞ்சாவூர் மாவட்டம் , சிங்கபெருமாள் குளம் பகுதியில் நேற்று முன்தினம் இரவில் தஞ்சை மேற்கு போலீசார் வாகன சோதனைகளில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சொகுசு கார் ஒன்று அதிவேகமாக வந்து கொண்டிருப்பதை போலீசார் பார்த்து, அந்த வாகனத்தை நிறுத்த முயன்றனர். ஆனால், அந்த கார் போலீஸ் எச்சரிக்கையை மீறி வேகமாக சென்றது. உடனே சுதாரித்துக் கொண்ட போலீசார் அந்த சொகுசு காரை துரத்திப் பிடிக்க இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். போலீசார் தொடர்ந்து விரட்டியதில் சீனிவாசபுரம் பகுதி அருகே அந்த வாகனத்தை மடக்கி நிறுத்தினார்கள்.

 

அப்போது அந்த வாகனத்தில் இருந்த இரண்டு நபர்கள் குடிபோதையில் இருந்ததுள்ளார்கள்  என்று தெரிந்து கொண்ட போலீசார், அவர்களிடம் விசாரணையில் ஈடுபட்டார்கள். அந்த  விசாரணையில் வாகனத்தில் இருந்தவர்கள் தஞ்சையை சேர்ந்த ஹரிபாபு, காரல் மார்க்ஸ் என்பது தெரியவந்துள்ளது. அந்த இருவரையும் போலீஸார் விசாரித்தபோது, அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வேகமாக பரவிவருகிறது. 

 

அந்த வீடியோவில் காவலர், “வண்டிய நிப்பாட்டச் சொன்னா நிப்பாட்ட மாட்டீங்களா, எவ்ளோ தூரம் உங்களை துரத்திட்டு வர்றது” என்று கேட்டதற்கு, காரல் மார்க்ஸ் “யோவ்  நான் எவ்ளோ சம்பளம் வாங்குறேன் தெரியுமா, நீ எவ்ளோ சம்பளம் வாங்குற” என்று பேசியுள்ளார். அதற்கு அந்த காவலர், “மரியாதையா பேசு” என்று கேட்டுள்ளார். ஆனால், காவலர்கள் மரியாதையாக பேச சொன்ன பிறகும் ஹரிபாபுவும், காரல் மார்க்ஸும் “நீ கவர்மெண்ட் சம்பளம் வாங்குற, யூனிபார்மை கழற்றிட்டு வா, அறுத்துடுவேன்” என்று மிரட்டியுள்ளனர். அதன்பிறகு ஆபாசமாக பேசிய அந்த இரண்டு நபர்களும் அங்கிருந்து வாகனத்தில் ஏறி புறப்பட்டு சென்றுவிட்டனர். 

 

இந்த சம்பவத்தை முழுவதுமாக அருகில் இருந்த மற்றொரு போலீசார் வீடியோவில் பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ தான் தற்போது வேகமாக பரவி வருகிறது.  தற்போது அந்த வீடியோவை ஆதரமாக வைத்து தஞ்சை மேற்கு போலீசார் ஹரிபாபு மற்றும் காரல் மார்க்ஸ் ஆகியோரின் மீது வழக்கு பதிவு செய்து தீவிரமாக தேடி வந்த நிலையில், இருவரையும் போலீஸார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் நடத்திய முதற்கட்ட விசாரணையில் இருவரும் பாஜகவைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வீடியோ காலில் பேசிக் கொண்டிருந்த மனைவியின் கையை வெட்டிய கணவன்!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
husband cut the hand of his wife who was talking on video call

வேலூர் மாவட்டம் குடியாத்தம் பிச்சனூர்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சேகர் (41 ) நெசவுத் தொழிலாளி இவரது மனைவி ரேவதி (வயது 35) இவர்களுக்கு மூன்று மகள்கள் உள்ளனர். இரண்டு மகள்களுக்கு திருமணம் ஆகிவிட்ட நிலையில் மூன்றாவது மகள் பள்ளியில் படித்து வருகிறார் .

இந்த நிலையில் ரேவதி கடந்த சில மாதங்களாக சமூக வலைத்தளங்களில் ரீல்ஸ் பார்ப்பது, போட்டோ போடுவது, ஆன் லைன் நண்பர்களுடன் பேசுவது என அதிக அளவு நேரம் செலவிட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன் மனைவிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு  குடும்பத்தில் சண்டை நடந்து வந்ததாக கூறப்படுகிறது.

நேற்று இரவு ரேவதி வீடியோ காலில் நண்பருடன் பேசிக் கொண்டிருந்தார். வீட்டுக்கு வந்த சேகரை கவனிக்காமல் மனைவி பேசிக்கொண்டே இருந்ததால் ஆத்திரம் அடைந்த சேகர் ரேவதியை கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து இருவர்களுக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது. இதில்  ஆத்திரமடைந்த சேகர் வீட்டிலிருந்த அருவாமனையை எடுத்தவர், இந்த கை தானே போன் எடுத்து பேசிக்கிட்டே இருக்குது, ரீல்ஸ் பார்க்கச்சொல்லுது, பேசச்சொல்லுது என ரேவதியின் வலது கையை வெட்டியுள்ளார்.

கையில் வெட்டுப்பட்டதால் அலறிய ரேவதியை அக்கம்பக்கத்தினர் மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். வெட்டப்பட்ட கை பலத்த சேதம் அடைந்த நிலையில் அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து குடியாத்தம் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து, சேகரை அழைத்துவந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதில், குடும்பத்தை கவனிக்காமல் எப்போது பார்த்தாலும் போன் வைத்துக் கொண்டு யாருடனாவது பேசிக்கொண்டே இருக்கிறார். அல்லது ஏதாவது பார்த்துக் கொண்டே இருக்கிறாள். இதைக்கேட்டதற்கு என்னை எடுத்தெறிந்து பேசினாள். இதனால் குடும்பத்தில் அடிக்கடி தகராறு வர ஆரம்பித்தது அந்த கோபத்தில் தான் வெட்டினேன் எனக் கூறியுள்ளார்.

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.