
அண்மையில் கேரளாவில் சவர்மா சாப்பிட்ட பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. அதனைத் தொடர்ந்து கேரள மட்டுமல்லாது தமிழக்தில் உள்ள பல்வேறுஅசைவ உணவகங்களில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் ஆரணியில் தந்தூரி சாப்பிட்ட 12 ஆம் வகுப்பு மாணவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததாககூறப்படும் விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அசைவ உணவகத்திற்கு சீல் வைக்க காவல்துறை பரிந்துரை செய்துள்ளது.
ஆரணியில் உள்ள '5 ஸ்டார் எலைட்' என்றஅசைவ உணவகத்தில் கடந்த மே 24 ஆம் தேதி தந்தூரி சாப்பிட்ட 12 ஆம் வகுப்பு மாணவர் ஒருவர் கடந்த 29 ஆம் தேதி உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அதனைத் தொடர்ந்து அந்த ஹோட்டல் மீது புகார் எழுந்த நிலையில் உணவகத்தின் மீது எழுந்த புகார் மீதான விசாரணை முடியும்வரை அந்த உணவகத்திற்கு சீல் வைக்க காவல்துறை சார்பில் நகராட்சி ஆணையருக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)