tamilndu assembly three day session speaker decision

Advertisment

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் செப்டம்பர் 14- ஆம் தேதி முதல் 16- ஆம் தேதி வரை மூன்று நாட்கள் நடத்த சபாநாயர் தனபால் தலைமையில் நடந்த அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.மேலும் கரோனா அச்சுறுத்தல் காரணமாக சட்டப்பேரவை கூட்டத்தொடர் சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து சட்டப்பேரவை கூட்டத்தொடருக்கு 72 மணி நேரத்துக்கு முன் அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும்கட்டாயம்கரோனா பரிசோதனை செய்யப்படவுள்ளது. எம்.எல்.ஏ.க்களுடன் அதிகாரிகள், பணியாளர்கள், பத்திரிகையாளர்கள், காவல்துறையினர் உள்ளிட்டோருக்கும் கரோனா பரிசோதனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment