Skip to main content

''வாழை விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்" எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கோரிக்கை!

Published on 02/08/2020 | Edited on 02/08/2020

 

 Banana farmers should be given proper compensation "MRK Panneerselvam demand!

 

விற்பனையின்றி வாழை விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கடலூர் கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், குறிஞ்சிப்பாடி தி.மு.க சட்டமன்ற உறுப்பினருமான எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
 

"கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி தொகுதிக்குட்பட்ட குறிஞ்சிப்பாடி மற்றும் கடலூர் வட்ட பகுதிகளிலும் மலை கிராமமான இராமாபுரம் அதனை சுற்றியுள்ள 30-க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் உள்ள 200-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இக்கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் முக்கனிகளில் ஒன்றான வாழை பயிரிட்டு வருகின்றனர். வாழையில் பூவன்,  ஏலக்கி, செவ்வாழை, கற்பூரவல்லி, ரஸ்தாளி, நேந்திரன், நாடு சக்கை போன்ற பல்வேறு ரக வாழைகள் சுமார் 10 ஆயிரம் ஏக்கரில், ஆடிமாத பருவத்தில் பயிரிடப்பட்டுள்ளன. கடந்த நான்கு மாதங்களாக வாழைத்தார் அறுவடை செய்து வருகின்றார்கள்.

அதேசமயம் வாழை அறுவடை காலம் ஆரம்பிக்கும் போது கொடிய கரோனா நோய் ஆரம்பமாகிவிட்டது.  கரோனா நோய்  காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டு எந்த செயல்பாடும் இல்லாமல் போனது. கடந்த வருடம் வாழைத்தார் ரூபாய் 400லிருந்து ரூ.500 வரை விற்பனை செய்யப்பட்டது.  ஏலக்கி போன்ற உயர் ரக வாழை கடந்த வருடம் ஒரு கிலோ ரூபாய் 60 வரை விற்பனை செய்யப்பட்டது.  இதனால் வாழை விவசாயிகள் மகிழ்ச்சியில் இருந்தனர்.  இந்த வருடம் கரோனா நோய் தொற்று மற்றும் ஊரடங்கு காரணமாக பூவன் வாழை தார் ஒன்று ரூ. 70, 80, 90, 100 என விற்பனையாகின்றன.  ஏலக்கி 1 கிலோ ரூபாய் 20, 22, 30 என விற்பனையாகின்றன.  வாழை வாங்குவதற்கு வியாபாரிகள் வருவதும் இல்லை.  இதனால் வாழை தார் மரத்திலேயே பழுத்து வீணாகின்றன.

வாழையை விளைவிக்க ஒரு தார் மீது ரூபாய் 150 லிருந்து 200 ரூபாய் வரை செலவாகின்றன. சூறாவளி காற்றில் இருந்து பாதுகாக்க சவுக்கு கழி கட்ட ரூபாய் 50 செலவாகின்றன. வாழை விற்பனைக்காக மும்பை, ஆந்திரா, கேரளா, பெங்களூரு போன்ற வெளி மாநிலங்களுக்கும் அதிகப்படியான அளவில் ஏற்றுமதியாகும்.தமிழகத்திலுள்ள சென்னையில் கோயம்பேடு அதனை சுற்றியுள்ள பெரு நகரங்களுக்கும் பல வெளி மாவட்டங்களுக்கும் தினமும் வாழை ஏற்றுமதியாகும்.

ஆனால் இவைகள் அனைத்தும் முடங்கியுள்ளதால்  வாழை விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு ஏக்கருக்கு பயிர் செலவு ரூபாய் ஒன்றரை லட்சத்திலிருந்து இரண்டு லட்சம் வரை செலவாகிறது.  செலவு செய்து ஒரு ஏக்கருக்கு ரூபாய் 70 ஆயிரத்திற்கு கூட விற்பனை செய்ய முடியவில்லை. இதனால் வாழை விவசாயிகள் தேசிய வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், தனி நபர் கடன்கள் என வாங்கிய கடனை கட்ட முடியாமல் வேதனையில் உள்ளனர்.  சூறாவளி காற்று ஒரு பகுதியை மட்டும் பாதிக்கும்.  ஆனால் கொரோனா நோய் ஊரடங்கால் வாழை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முற்றிலுமாக பாதிக்கப்பட்டு விட்டது.  

எனவே அரசு பாதிக்கப்பட்ட விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற தேசிய, கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய கடனை தள்ளுபடி செய்வதோடு மட்டுமல்லாமல் நஷ்ட ஈடாக ஏக்கருக்கு ரூபாய் 50,000 வழங்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்" என அவர் கூறியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Chief Minister Stalin congratulates Dindigul candidate Sachithanantham

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் சிபிஎம். கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகிய இருவருடன் மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி செந்தில் குமார் ஆகியோரும் சென்னைக்கு நேரில் அழைத்து சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற வைத்தனர்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறீர்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் எனக் கூறியதோடு எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் எனக் கேட்டபோது சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியசாத்தில் வெற்றி பெறுவேன் எனக்கூறினார். அப்போது உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இல்லை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஎம் வேட்பாளர் வெற்றி பெறுவார் எனக் கூறினார்.   

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமியை பார்த்து நீங்கள் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறுகிறீர்களா? எனக் கேட்டவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உங்களின் வழிகாட்டுதலின் படி திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தோம். தமிழக அரசின் நலத்திட்டங்களை பாராட்டி திண்டுக்கல் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அமோகமான வாக்குகளை அளித்துள்ளனர் என்றார். இந்த சந்திப்பின் போது  அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்  ஐ.பெரியசாமி,  அமைச்சர் சக்கரபாணி,  எம்.எல்.ஏ., ஐ.பி.செ ந்தில்குமார், ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி, சிபிஎம்.வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது குறித்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சச்சிதானந்தம் கூறுகையில், “திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிகளை தெரிந்து கொள்ள எவ்வளவு ஆர்வம் காட்டினாரோ அந்த அளவிற்கு கூட்டணி கட்சி சார்பாக (சிபிஎம்) போட்டியிட்ட எனது வெற்றி குறித்தும் தமிழக முதல்வர் ஆர்வமுடன் கேட்டதும், தொடர்ந்து மக்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள் என வாழ்த்தியதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் எனது வெற்றிக்கு அயராது உழைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி. செந்தில்குமாருக்கும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் என்றும் நான் உறுதுணையாக இருப்பேன்” என்று கூறினார்

Next Story

டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Tamil Nadu farmers struggle in Delhi

டெல்லியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

விவசாய பயிருக்கான குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக இன்று (24.04.2024) போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்திற்கு தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமை வகித்துள்ளார். இந்த போராட்டத்தில் 100 க்கும் மேற்பட்ட தமிழக விவசாயிகள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த போராட்டத்தின் போது தமிழக விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜந்தர் மந்தர் பகுதியில் உள்ள மரத்தின் மீது ஏறியும், செல்போன் டவர் மீது ஏறியும் தற்கொலை செய்துகொள்ளும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பின்னர் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை மரத்தில் இருந்தும், டவரில் இருந்தும் கீழே இறக்கி விட்டனர்.