Skip to main content

தமிழகத்தில் பாஜகவை வலுப்படுத்த நிர்வாகிகளுடன் அமித்ஷா தீவிர ஆலோசனை!

Published on 11/08/2019 | Edited on 11/08/2019

சென்னையில் இன்று நடைபெறவுள்ள பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, டெல்லியில் இருந்து நேற்று இரவு விமானம் மூலம் சென்னை வந்தார். அதனை தொடர்ந்து நேற்று இரவு ஆளுநர் மாளிகையில் தங்கினார். இந்நிலையில் தமிழக பாஜகவின் உயர்நிலை குழு நிர்வாகிகள் எச்,ராஜா, மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், தமிழக பாஜக மேலிட பொறுப்பாளர் முரளிதர ராவ் ஆகியோர் ஆளுநர் மாளிகையில் தங்கியுள்ள உள்துறை அமைச்சரை சந்தித்து பேசினர்.

 

tamilnadu visit union home minister amitshah visit and meet state party bjp leaders

 

அதில் தமிழகத்தில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல் குறித்தும், தமிழகத்தில் பாஜகவை வலுப்படுத்துவது குறித்தும் பாஜக நிர்வாகிகளுடன் அமித்ஷா ஆலோசனை செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் தமிழகத்தில் பாஜகவை வலுப்படுத்த அமைச்சர் அமித்ஷா புதிய வியூகம் வகுத்துள்ளாதாகவும், அதை பாஜக நிர்வாகிகளிடம் கூறியதாக தகவல் தெரிவிக்கின்றனர். நேற்று இரவு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசிய நிலையில், தமிழக பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்வது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. 

 

tamilnadu visit union home minister amitshah visit and meet state party bjp leaders





இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு இந்திய துணை குடியரசுத்தலைவர் வெங்கய்யா நாயுடு எழுதிய புத்தக வெளியிட்டு விழாவில் பங்கேற்கும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அதன் பிறகு கர்நாடகாவின் பெலகாவி மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இன்று ஹெலிகாப்டர் மூலம் ஆய்வு மேற்கொள்கிறார். பின்னர் அம்மாநில முதல்வர் எடியூரப்பா மற்றும் அதிகாரிகளுடன் வெள்ள நிவாரணம் குறித்த ஆலோசனை கூட்டத்தில் அமித்ஷா பங்கேற்கவுள்ளார். 



 

சார்ந்த செய்திகள்

Next Story

தொடங்கியது வேட்புமனு பரிசீலனை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Scrutiny of nominations has begun

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில், இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்று வருகிறது. சேலத்தில் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட செல்வ கணபதியின் வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இரட்டை வாக்குரிமை சர்ச்சை காரணமாக அவருடைய வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. திருச்சியில் மதிமுக சார்பில் போட்டியிடும் துரை வைகோவின் மனு ஏற்கப்பட்டுள்ளது. திருச்சியில் அமமுக சார்பில் போட்டியிடும் செந்தில்நாதன் வேட்புமனு ஏற்கப்பட்டுள்ளது.

மதுரை தொகுதியில் அதிமுக, பாஜக, நாம் தமிழர் வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. நாமக்கல் தொகுதியில் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சிகளின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது. மத்திய சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் மனு ஏற்கப்பட்டுள்ளது. தென் சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் மனு ஏற்கப்பட்டுள்ளது. பாஜக வேட்பாளர் வினோத் பி. செல்வம் மனுவை ஏற்றுக்கொள்ளக்கூடாது என திமுக தரப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மனுவை முழுமையாகப் பூர்த்தி செய்து தராததால் திமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. வினோத் பி. செல்வத்தின் மனுவை மறு ஆய்வு செய்ய வேண்டும் என திமுக தரப்பு கோரிக்கை வைத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Next Story

'100 நாள் வேலை ஊதியம்' - மத்திய அரசு வெளியிட்ட திடீர் அரசாணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'100 days of work wages'- Sudden decree issued by the central government

100 நாள் வேலை ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் ஊதியத்தை 319 ரூபாயாக உயர்த்தி ஒன்றிய அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

தற்பொழுது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெற்று இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் வாரியாக 100 நாள் வேலைத் திட்டத்திற்கான ஊதியத்தை ஏற்கனவே அதிகரித்து மத்திய அரசு அறிவித்து வெளியிட்டிருந்த நிலையில் இதற்கான அரசாணை தற்போது வெளியிட்டுள்ளது.

அண்மையில் மகளிர் தினத்தின் போது சமையல் சிலிண்டர் விலை குறைப்பு நடவடிக்கையில் ஒன்றிய அரசு  ஈடுபட்ட நிலையில், தேர்தல் நேரத்தில் பாஜக அரசு வாக்குகளைப் பெற இதுபோன்ற சலுகைகளை அறிவிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இந்நிலையில் தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் 100 நாள் வேலையின் ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு வழங்கியுள்ளதையும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.