ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சிபெற்ற ஆசிரியர்கள் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று (17.02.2023) மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதில் கலந்துகொண்டஆசிரியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்ற ஆசிரியர்களுக்கான மறு நியமன போட்டித் தேர்வு என்ற அரசாணைஎண்149ஐ நீக்கம் செய்யவேண்டும்என்றும், அரசுப் பள்ளிகளில்உள்ள காலி பணியிடங்களை உடனடியாகநிரப்ப வேண்டும்எனப் பல்வேறு கோரிக்கைகள் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. மேலும்ஆசிரியர்களின் குழந்தைகளும்இந்தப் போராட்டத்தில்கலந்துகொண்டது அங்கிருந்தவர்கள்கவனத்தை ஈர்த்தது குறிப்பிடத்தக்கது.

Advertisment