Skip to main content

40 ஆண்டுகால கோரிக்கை- அடுத்த புதிய மாவட்டம் திருப்பத்தூரா?

Published on 26/07/2019 | Edited on 26/07/2019

1988- ஆம் ஆண்டு வரை தமிழகத்தில் பெரிய மாவட்டமாக இருந்தது. வேலூர் மாவட்டம் தான். அந்த காலக்கட்டத்தில் திருவண்ணாமலையை தலைமையிடமாக கொண்டு ஒரு மாவட்டம், திருப்பத்தூரை தலைமையிடமாக கொண்டு ஒரு மாவட்டம், அரக்கோணத்தை தலைமையிடமாக கொண்டு ஒரு மாவட்டம் என புதியதாக 3 மாவட்டங்களை உருவாக்க வேண்டும் என்கிற கோரிக்கை இருந்து வந்தது. திருவண்ணாமலை, திருப்பத்தூர் மாவட்ட கோரிக்கை என்பது போராட்ட வடிவில் இருந்தது. மக்களின் கோரிக்கையை ஏற்று 1989-ல் கலைஞர் கருணாநிதி முதல்வராக இருந்த போது, திருவண்ணாமலை மாவட்டம் என்ற புதிய மாவட்டத்தை உருவாக்கினார். திருப்பத்தூர் மாவட்ட கோரிக்கை மட்டும் அப்படியே இருந்தது.

 

tamilnadu state vellore peoples need individual arani district, thiruppathur district

 

 


அன்று முதல் இன்று வரை திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, நாட்றம்பள்ளி, வாணியம்பாடி, ஆலங்காயம், ஆம்பூர் பகுதி மக்கள் தனி மாவட்டம் கேட்டு போராடி வருகிறார்கள். 10 ஆண்டுகளுக்கு முன்பு உண்ணாவிரதம், கடையடைப்பு, போராட்டமெல்லாம் நடத்தினார்கள். ஆனால், ஏனோ ஆட்சியில் இருந்தவர்கள் அதனை செய்யவில்லை. ஒவ்வொரு முறை தேர்தல் வரும் போதும், திமுக, அதிமுக, பாமக போன்ற கட்சிகளில் திருப்பத்தூரை தலைமையிடமாக கொண்டு ஏலகிரி மாவட்டம் உருவாக்கப்படும் என வாக்குறுதி தருகிறார்கள். வெற்றி பெற்ற பின் அதுப்பற்றி கண்டுக்கொள்வதில்லை என்கின்றனர் அப்பகுதி மக்கள்.


இந்நிலையில் கடந்த வாரம் நடந்து முடிந்த சட்டசபை கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, தென்காசி மாவட்டம் என்கிற புதிய மாவட்டம் உருவாக்கப்பட்டது. அதற்கு முன்பு கள்ளக்குறிச்சி என்கிற மாவட்டம் உருவாக்கப்பட்டது. இந்த 2019-ல் மட்டும் 3 புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. சுமார் 40 வருடங்களாக போராடி வரும் திருப்பத்தூரை தலைமையிடமாக கொண்டு ஒரு புதிய மாவட்டம் உருவாகவில்லை. இதனால் இப்பகுதி மக்கள் அதிருப்தியடைந்தனர். தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் எனக்கேட்டு திருப்பத்தூர் பார் அசோசியேசன் வழக்கறிஞர்கள் ஜூலை 26- ந்தேதியான இன்று போராட்டம் நடத்தினர். தற்போதைய நிலையில் தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில் பரப்பளவில் பெரிய மாவட்டமாக திருவண்ணாமலை மாவட்டம் உள்ளது. ஆரணியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்க வேண்டும் என்கிற பழைய கோரிக்கை தற்போது மீண்டும் வலுப்பெற்றுள்ளது என்பது குறிப்பிடதக்கது.

 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

“ஒரு கட்சி அரசியல் சாசனத்தின் மீது தாக்குதல் நடத்துவது இதுவே முதல்முறை” - ராகுல் காந்தி

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Rahul Gandhi says This is the first time a party has attacked the Constitution

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்தப் பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது. மேலும், ஆளும் பா.ஜ.க.வும், காங்கிரஸும் மாறி மாறி குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றன.

இந்த நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “தோல்வி பயத்தில் நடுங்கும் நரேந்திர மோடி. அதனால் தான் தொடர்ந்து பொய்களை ஒன்றன் பின் ஒன்றாக கூறி வருகிறார். நரேந்திர மோடி ஏழைகளின் தலைவர் அல்ல, கோடீஸ்வரர்களின் தலைவர் என்பதை இந்திய மக்கள் புரிந்துகொண்டுள்ளனர் என்பது அவர்களுக்குத் தெரியும். இந்திய மக்கள் அரசியல் சாசனத்தைப் பாதுகாக்க எழுந்து நிற்கிறார்கள் என்பது அவர்களுக்குத் தெரியும்.

தேர்தல் அவர் கையை விட்டு நழுவியது அவருக்குத் தெரியும். இந்திய வரலாற்றில் ஒரு அரசியல் கட்சி நேரடியாக அரசியல் சாசனத்தின் மீது தாக்குதல் நடத்திய முதல் தேர்தல் இதுவாகும். நரேந்திர மோடி, 20-25 நபர்களுடன் சேர்ந்து, மக்களின் மிகப்பெரிய அதிகாரத்தை, அதாவது, அரசியலமைப்பு மற்றும் ஜனநாயகத்தை அழிக்க விரும்புகிறார். அரசியலமைப்புச் சட்டம் வெறும் புத்தகம் அல்ல, அது ஏழைகளின் ஆயுதம், காங்கிரஸ் கட்சி இருக்கும் வரை உலகில் எந்த சக்தியாலும் இந்த ஆயுதத்தை மக்களிடமிருந்து பறிக்க முடியாது” எனப் பதிவிட்டுள்ளார். 

Next Story

“வீரர்களுடைய மனைவிகளின் தாலியைப் பறித்தது யார்?” - டிம்பிள் யாதவ் கேள்வி

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
 Question by Dimple Yadav on Who snatched the thali of the soldiers' wives?

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்தப் பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது.

தாலி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பிரதமர் மோடியின் பேச்சுக்கு சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் மனைவியும், எம்.பியுமான டிம்பிள் யாதவ் பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, “மங்களசூத்திரம் பற்றி பேசுபவர்கள் புல்வாமா சம்பவத்தையும் பேச வேண்டும். நமது வீரர்கள் வீரமரணம் அடைந்தனர், அவர்களின் மனைவிகளின் மங்களசூத்திரம் அவர்களிடமிருந்து பறிக்கப்பட்டது. புல்வாமா சம்பவத்திற்கு யார் காரணம் என்று இவர்கள் பதில் சொல்ல வேண்டும். இந்தச் சம்பவத்திற்கு அரசு என்ன செய்தது?” எனக் கூறினார்.