Skip to main content

40 ஆண்டுகால கோரிக்கை- அடுத்த புதிய மாவட்டம் திருப்பத்தூரா?

Published on 26/07/2019 | Edited on 26/07/2019

1988- ஆம் ஆண்டு வரை தமிழகத்தில் பெரிய மாவட்டமாக இருந்தது. வேலூர் மாவட்டம் தான். அந்த காலக்கட்டத்தில் திருவண்ணாமலையை தலைமையிடமாக கொண்டு ஒரு மாவட்டம், திருப்பத்தூரை தலைமையிடமாக கொண்டு ஒரு மாவட்டம், அரக்கோணத்தை தலைமையிடமாக கொண்டு ஒரு மாவட்டம் என புதியதாக 3 மாவட்டங்களை உருவாக்க வேண்டும் என்கிற கோரிக்கை இருந்து வந்தது. திருவண்ணாமலை, திருப்பத்தூர் மாவட்ட கோரிக்கை என்பது போராட்ட வடிவில் இருந்தது. மக்களின் கோரிக்கையை ஏற்று 1989-ல் கலைஞர் கருணாநிதி முதல்வராக இருந்த போது, திருவண்ணாமலை மாவட்டம் என்ற புதிய மாவட்டத்தை உருவாக்கினார். திருப்பத்தூர் மாவட்ட கோரிக்கை மட்டும் அப்படியே இருந்தது.

 

tamilnadu state vellore peoples need individual arani district, thiruppathur district

 

 


அன்று முதல் இன்று வரை திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, நாட்றம்பள்ளி, வாணியம்பாடி, ஆலங்காயம், ஆம்பூர் பகுதி மக்கள் தனி மாவட்டம் கேட்டு போராடி வருகிறார்கள். 10 ஆண்டுகளுக்கு முன்பு உண்ணாவிரதம், கடையடைப்பு, போராட்டமெல்லாம் நடத்தினார்கள். ஆனால், ஏனோ ஆட்சியில் இருந்தவர்கள் அதனை செய்யவில்லை. ஒவ்வொரு முறை தேர்தல் வரும் போதும், திமுக, அதிமுக, பாமக போன்ற கட்சிகளில் திருப்பத்தூரை தலைமையிடமாக கொண்டு ஏலகிரி மாவட்டம் உருவாக்கப்படும் என வாக்குறுதி தருகிறார்கள். வெற்றி பெற்ற பின் அதுப்பற்றி கண்டுக்கொள்வதில்லை என்கின்றனர் அப்பகுதி மக்கள்.


இந்நிலையில் கடந்த வாரம் நடந்து முடிந்த சட்டசபை கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, தென்காசி மாவட்டம் என்கிற புதிய மாவட்டம் உருவாக்கப்பட்டது. அதற்கு முன்பு கள்ளக்குறிச்சி என்கிற மாவட்டம் உருவாக்கப்பட்டது. இந்த 2019-ல் மட்டும் 3 புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. சுமார் 40 வருடங்களாக போராடி வரும் திருப்பத்தூரை தலைமையிடமாக கொண்டு ஒரு புதிய மாவட்டம் உருவாகவில்லை. இதனால் இப்பகுதி மக்கள் அதிருப்தியடைந்தனர். தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் எனக்கேட்டு திருப்பத்தூர் பார் அசோசியேசன் வழக்கறிஞர்கள் ஜூலை 26- ந்தேதியான இன்று போராட்டம் நடத்தினர். தற்போதைய நிலையில் தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில் பரப்பளவில் பெரிய மாவட்டமாக திருவண்ணாமலை மாவட்டம் உள்ளது. ஆரணியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்க வேண்டும் என்கிற பழைய கோரிக்கை தற்போது மீண்டும் வலுப்பெற்றுள்ளது என்பது குறிப்பிடதக்கது.

 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

“பாபாசாகேப் அம்பேத்கரே வலியுறுத்தினாலும் அது நடக்காது” - பிரதமர் மோடி

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
PM Modi says Even if Babasaheb Ambedkar insists it will not happen

7 கட்டங்களாக நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவு 102 தொகுதிகளில் முடிந்துள்ளது. 2வது கட்ட வாக்குப்பதிவு, ராஜஸ்தான் உள்ளிட்ட 88 தொகுதிகளில் வரும் ஏப்ரல் 26ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது.

அந்த வகையில், மொத்தம் 11 மக்களவைத் தொகுதிகள் கொண்ட சத்தீஸ்கர் மாநிலத்தில், முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற்று முடிந்தது. இதையடுத்து, மீதமுள்ள தொகுதிகளுக்கு ஏப்ரல் 26 மற்றும் மே 7ஆம் தேதி என இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த மாநிலத்தில், காங்கிரஸ், பா.ஜ.க, பகுஜன் சமாஜ் கட்சி உள்ளிட்ட பல அரசியல் கட்சிகள் போட்டியிடுகின்றன. அதுமட்டுமல்லாமல், வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற நோக்கத்துடன் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

இந்த நிலையில், சத்தீஸ்கர் மாநிலம், ஜஞ்கிர் பகுதியில் பா.ஜ.க சார்பில் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், “காங்கிரஸ் தலைவர்கள் தங்களை ராமர் என்று கருதி, ராமர் கோயிலில் பிரதிஷ்டை செய்ய அழைப்பை மறுத்தனர். இது சத்தீஸ்கருக்கு அவமரியாதை இல்லையா? இது ராமரின் தாய்வழி வீடு.  காங்கிரஸ் திருப்திப்படுத்தும் அரசியல் செய்து கொண்டே இருக்கிறது, அது அவர்களின் டி.என்.ஏவில் உள்ளது.

திருப்திப்படுத்தும் அரசியலுக்காக பட்டியலினத்தவர்கள், ஏழைகள் மற்றும் பழங்குடிகளின் உரிமைகளைப் பறிக்க அவர்கள் தயங்க மாட்டார்கள். எங்கள் முன்னுரிமை ஏழைகள், இளைஞர்கள், பெண்கள். தேர்தல் நெருங்கும் போதெல்லாம், காங்கிரஸ் தலைவர்கள் பழைய வரிகளையே திரும்பத் திரும்பச் சொல்கிறார்கள். பா.ஜ.க ஆட்சிக்கு வந்து அரசியல் சாசனத்தை முடிவுக்கு கொண்டு வந்து இட ஒதுக்கீட்டை ஒழிக்கும் என்று சொல்கிறார்கள். எவ்வளவு காலம் பொய் சொல்லிக்கொண்டே இருப்பீர்கள்?. 

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது. டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் வந்து அதை வலியுறுத்தினாலும் அது நடக்காது. மோடியின் தலையை உடைப்போம் என்று காங்கிரஸ் கட்சியினர் கூறுகிறார்கள். என் நாட்டின் தாய், சகோதரிகள் என்னுடன் இருக்கும் வரை மோடியை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது. இந்தத் தாய்மார்கள் மற்றும் சகோதரிகள்” என்று கூறினார். 

Next Story

பிரான்ஸ் வீரர்களுக்கு தற்காப்புக்கலைகளை கற்றுக்கொடுக்கும் தமிழக வீரர்கள்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Tamil Nadu players teaching martial arts to French players

மாமல்லபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச மஞ்சூரியா குங்ஃபூ தற்காப்புக் கலையின் சார்பில் இந்தோ பிரான்ஸ் தற்காப்புக் கலை சிறப்பு பயிற்சி முகாம் பிரான்ஸில் நடைபெற்று வருகிறது.

பிரான்ஸ் நாட்டின் ஃபெவ்ரி நகரில் மாஸ்டர் ஷி ஷிஃபூ மேத்யூ  தலைமையில் ஏப்ரல் 22 துவங்கி 28 வரை 7 நாட்கள் நடைபெற்று வரும் இந்தச் சிறப்பு பயிற்சி முகாமில் கல்பாக்கம் அணுபுரத்தைச் சேர்ந்த மாஸ்டர் சந்தோஷ், திண்டுக்கல் மாவட்டம் பழனி நாகூரைச் சேர்ந்த யோகா மாஸ்டர் பிரகாஷ் ஆகிய இருவரும், பிரான்ஸ் நாட்டு வீரர்களுக்கு  குங்ஃபூ தற்காப்புக் கலை, தெக்கன் களரி சிலம்பக்கலை, பதஞ்சலி ஹத யோகா, ஆகியவற்றை கற்பித்து வருகின்றார்கள். நேற்று யோகா குறித்து விளக்கம் அளித்து அதை செய்தும் காண்பித்துள்ளார்கள்.