Skip to main content

கலைஞர் பிறந்த நாள் என்பதால் நாளை மாணவ, மாணவிகளுக்கு பாடபுத்தகங்கள் வழங்க தடை!

Published on 02/06/2019 | Edited on 03/06/2019

 


நாளை முதல் தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகள் திறக்கப்பட உள்ளது.  இப்படி  பள்ளி கூடங்கள் திறந்த முதல் நாளே  ( 3 ம்தேதி ) பள்ளி  மாணவ மாணவிகளுக்கு  இலவச பாடபுத்தகங்கள்  வழங்கப்படும்  என  கல்வித்துறை அமைச்சர்  செங்கோட்டையனும், கல்வி துறை  இயக்குநர் ராமேஸ்வர முருகன் அதிரடி உத்தரவும் பிறப்பித்து உள்ளனர்.  அதை தொடர்ந்து  தமிழகம் முழுவதும் உள்ள 32 மாவட்டங்களும் இருக்கும் ஆரம்பபள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, மேல் நிலைப்பள்ளிகளுக்கு இலவச பாடபுத்தகங்களும் வந்து அந்தந்த  பள்ளிகளில் இறக்கியும் வைத்துள்ளனர்.

 

ப்


 இதில் 1,2 மற்றும் 6,7 பாடபுத்தகங்கள் அதிகம் அளவிலும்  வந்து  இருக்கிறது.   நாளை  பள்ளி கூடங்கள்  திறந்த  உடனே பாடபுத்தகங்களை வாங்கவும் மாணவ, மாணவிகள்  தயாராகவும் இருக்கிறார்கள். 

 

இந்த  நிலையில் தான்  எடப்பாடி அரசு திடீரென தமிழகத்தில்  உள்ள அனைத்து முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் வாய்மொழி உத்தரவாக நாளை பள்ளிக்கூடம் திறக்கும் நாளான 3ம்தேதி கலைஞர் பிறந்த  நாள் வருவதால் அன்று இலவச பாட புத்தங்களை   மாணவ மாணவிகளுக்கு  கொடுக்க வேண்டாம்.   மறுநாள்  4ம்தேதி அந்த  புத்தகங்களை மாணவ, மாணவிகளுக்கு ஆசிரியரை வழங்க சொல்லுங்கள். அதிலும் மதியத்திற்கு மேல் வழங்க வேண்டும் என  உத்திரவு பிறப்பித்து உள்ளனர்.


அதன் அடிப்படையில் முதன்மை கல்வி அதிகாரிகளும் (CEO ) நகரம் முதல் குக்கிராமங்கள் வரை இருக்க கூடிய பள்ளியின் தலைமை ஆசிரியர்களுக்கு  சர்க்குலரும் அனுப்பியதுடன் மட்டுமல்லாமல் போன் போட்டு நாளைக்கு  இலவச  பாடபுத்தகங்களை மாணவ, மாணவிகளுக்கு கொடுக்க வேண்டாம்  என வலியுறுத்தி இருக்கிறார்.  அதைக் கண்டு  ஆசிரியர்களே மனம் நொந்து போய் வருகிறார்கள். தலைவர்  கலைஞர்  பிறந்த நாளைக்கும் இலவச பாடபுத்தங்களை மாணவ மாணவிகளுக்கு  கொடுப்பதற்கும் என்ன சம்மந்தம் இருக்கு. இதிலயும் இந்த  எடப்பாடி அரசு அரசியல் பண்ண ஆரம்பித்து விட்டனர் என்ற குமுறல் ஆசிரியர்கள் மத்தியிலையே பேசப்பட்டும் வருகிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தமிழக அரசு சார்பில் கத்தார் தமிழர் சங்கத்திற்கு பாடப்புத்தகம் வழங்கல்!

Published on 13/03/2024 | Edited on 13/03/2024
TN Govt to provide textbooks to the Qatar Tamil Society

கத்தார் தமிழர் சங்கத்திற்கு தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் சார்பில் தமிழ் பாடப் புத்தகங்கள் வழங்கப்பட்டன.

கத்தார் வாழ் தமிழ் மாணவர்கள் நலன் கருதி தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் சார்பில் ரூபாய் 7 லட்சம் மதிப்பிலான 1 முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான 5 ஆயிரத்து 450 தமிழ் பாடப் புத்தகங்களை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி இன்று (13.03.2024) கத்தார் தமிழர் சங்கத்திற்கு வழங்கினார். இப்புத்தகங்களை கத்தார் தமிழர் சங்க நிர்வாகிகளான லட்சுமி மோகன் (ஒருங்கிணைப்பாளர்), அடிலாஸ் மகேந்திரன், செந்தில் (வளைகுடா தமிழ்ச்சங்கம்) ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

இந்நிகழ்வில் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத் தலைவர் திண்டுக்கல் ஐ. லியோனி, தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக மேலாண்மை இயக்குநர் கஜலட்சுமி மற்றும் இணை இயக்குநர் சங்கர சரவணன் ஆகியோர் உடன் இருந்தனர். 

Next Story

“பாடப் புத்தகத்தில் தந்தை பெரியாரின் வாழ்க்கை வரலாறு” - கர்நாடக அரசு

Published on 06/03/2024 | Edited on 07/03/2024
“Biography of Father Periyar in Text Book” - Government of Karnataka

கர்நாடகாவில் ஆட்சி செய்த பா.ஜ.க. அரசு கடந்த 2022 - 2023 கல்வியாண்டுக்கான பாடத் திட்டங்களில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டன. குறிப்பாக பத்தாம் வகுப்பு மாணவர்களின் வரலாறு புத்தகத்தில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் நிறுவனர் பலராம் ஹெட்கேவரின் உரைகள் இடம்பெற்றிருந்தன. அதே சமயம் சமூக சீர்திருத்தவாதிகளான தந்தை பெரியார், கேரளாவைச் சேர்ந்த நாராயண குரு மற்றும் முகலாய மன்னர்களான திப்பு சுல்தான், ஹைதர் அலி ஆகியோர் குறித்த தகவல்களும், சமுதாய முன்னேற்றத்துக்கான இலக்கியங்களைப் படைத்த எழுத்தாளர்களின் கதை மற்றும் கவிதைகளும் நீக்கப்பட்டன. இந்த செயல் கர்நாடகாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.

இதனையடுத்து கடந்த ஆண்டு மே மாதம் நடைபெற்ற கர்நாடக மாநில சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று முதல்வர் சித்தராமையா தலைமையில் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஓய்வுபெற்ற வரலாற்றுப் பேராசிரியர் மஞ்சுநாத் ஹெக்டே தலைமையிலான பாடநூல் திருத்தக் குழு அமைக்கப்பட்டது. இந்த குழு பல்வேறு திருத்தங்களை மேற்கொண்டுள்ளது. அதன்படி அரசுக்கு அளித்த பரிந்துரையின் படி 2024 - 2025 கல்வியாண்டுக்கான பாடத் திட்டங்களை கர்நாடக காங்கிரஸ் அரசு மாற்றம் செய்துள்ளது.

இந்த பரிந்துரையின் அடிப்படையில், கர்நாடகத்தில் உள்ள கன்னட மொழிப் பாடங்களில் முற்போக்கு தலைவர்கள் மற்றும் எழுத்தாளர்களின் படைப்புகள் சேர்க்கப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக 10 ஆம் வகுப்பு வரலாறு பாடத் திட்டத்தில், தந்தை பெரியாரின் வாழ்க்கை வரலாறு, சமூகப் பணிகள் குறித்த பாடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. மேலும் சாவித்ரிபாய் பூலே, திப்பு சுல்தான், பசவண்ணர், விஸ்வேவரய்யா ஆகியோரின் பாடமும் சேர்க்கப்பட்டுள்ளன.